Home / VenkatSaminathan

VenkatSaminathan


http://solvanam.com/?author_name=vesa

  வெங்கட் சாமிநாதன் பக்கம்
வெங்கட் சாமிநாதன் பக்கம் 
உமர் கய்யாமின் ருபாய்யத்

கவிஞர் ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்... மதத்தின் நீதிமான்களே, நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது திராட்சையின் ரத்தத்தை. உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக ரத்த வெறி பிடித்தவர்கள்?... ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்... இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?...[மேலும்..»]

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை... வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள்...[மேலும்..»]

நினைவுகளின் சுவட்டில்- கலுங்கா

ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்தத் தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை... அந்த ஆதிவாசிகளுக்கு ஆதிகாலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும்.. வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது?... [மேலும்..»]

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு... இச் சின்ன சின்ன பறவைகளை குழந்தைகளாக, அழகு கொழிக்கும் ஜீவ சிற்பங்களாக, கவிதைகளாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்... கொண்டலாத்தி புத்தகத்தின் பின் இத்தனை சமாசாரங்கள் இருந்திருக்கின்றன. நம் கைகளில் இருப்பது புகைப்படம் எடுக்கப்பட்ட கவிதைகளும், ஆசை எழுதிய கவிதைகளும்.... வானத்தை வானத்தைக் கலைத்துப் பறக்கும் கொக்குக் கூட்டம்... அவை கடக்கும் போதெல்லாம்... [மேலும்..»]

இரு வேறு நகரங்களின் கதை

புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்....[மேலும்..»]

ஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்

இந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள்... ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர்... ஸ்டாலினின் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும்... [மேலும்..»]

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

அது ஒரு காலம். அது ஒரு நாகரீகம். ஒரு பண்பாடு. மனித உறவுகளை வளர்க்கும் பண்பாடு. இது தபால் காரரிடம் மாத்திரமில்லை. நாவிதர், வண்ணார், கிராமத்தில் தினம் ஒன்றிரண்டு பிடி அரிசிக்கு கறுவேப்பிலை, கொத்தமல்லி கொடுத்துவிட்டுப் போகிறவளும் தான். எல்லோரும் அவரவரது அன்றாட ஜீவனோபாயத்துக்காகச் செய்யும் தொழிலோடு சந்திக்கும் மனிதருடனும் இதமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை அது... [மேலும்..»]

ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]

நடக்கிறது எதுவுமே, அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல்கிறேன். அவ்வளவுதான்... புதுமைப் பித்தன் நாவல் எழுதுகிறேன் என்று ஆரம்பித்து ஒரு இடத்திலே “அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்ததாக” எழுதுகிறார்... நிறைய சச்சரவுகள் வரும் என்று பிரசுரமாகவில்லை. கடைசியில் டைம்ஸ் டுடேயோ என்னவோ பத்திரிகையில் பிரசுரமானது. இதன் தமிழ் வடிவத்தை தமிழ் ஹிந்து (www.tamilhindu.com) என்னும் இணைய இதழில் பார்க்கலாம்... பிச்சமூர்த்தி யாப்பில் எழுதி fail ஆயிருக்கிறார் பார்த்தீர்களா?... [மேலும்..»]

கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்

”மீண்டும் பார்ப்பனத் தலைமை தொடங்கிவிட்டது” என்று கறுவிய கருணாநிதி, சங்கராச்சாரியாரிடம் அதிகாரம் இருப்பின் அவருக்குப் பாதபூசை செய்து அவருடைய கால்களைக் கழுவி அதைத் தீர்த்தமென்று தன் தலையில் தெளித்துக்கொள்ளத் தயங்காதவர்,” என்கிறார் கருப்பையா... “தி.மு.க. என்ன சங்கரமடமா?” என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி. சங்கர மடத்தில் ஒருவர் நியமனம் பெற அவர் “ஸ்மார்த்த பிராமணராக” இருக்கவேண்டும். தி.மு.க.வில் நியமனம் பெற, கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்கவேண்டும் என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகமுடியுமா?" [மேலும்..»]

ஒரு நாள் மாலை அளவளாவல் – 2

சிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா..... நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே, அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே.... நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும்....[மேலும்..»]



ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில்... எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும்... எனக்கு என்னதான் தெரியும்.. பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு... [மேலும்..»]

நன்றியுரை

பத்திரிகையின் நடப்பைக் கண்டித்து ஒருவர் கடிதம் எழுதினால், அந்த ஆசிரியருக்குக் கோபம் வருமே தவிர, அந்த ஆசிரியர் கடிதம் எழுதியவரை தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வார் என்பது எங்காவது நடக்குமா? நடந்தது... “கட்ட மரத் துடுப்புப் போல இடுப்பை ஆட்டுறா,”-ன்னு ஒரு பாட்டு இருபது பேரோ என்னவோ, பாடி ஆடினா, இது பாட்டா? இது டான்ஸா?, இது சினிமாவா? இது என்ன பைத்தியக்காரத்தனம்னு நமக்குத் தோணனும் இல்லையா?... பொதுவாக சமூகத்தில் நிலவும் அபிப்ராயம், சமூகத்தில் உள்ள எல்லோரும் கொள்ளும் அபிப்ராயம், எனக்கு சார்பா இருந்ததில்லை...[மேலும்..»]

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல்... வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது... வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க.. அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியதுதான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்?... இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு... அவன் வட்டாரத்தில் பாரதியாரை ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு... எல்லாப் புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம். [மேலும்..»]

பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து, கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள்... பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம்தான்... பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள், தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே தம்மைக் காண்கிறார்கள்... எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்துமுறை- குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது... "வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது" என்று மண்டோ யாரை... [மேலும்..»]

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

இஸ்லாத்துக்கு எதிரானது என்ற இந்த ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவின் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே. [மேலும்..»]

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை.. [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]

பூமணி போல, சோ.தருமன் போல இமையமுமல்லவா, 'தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை' என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம்... இரத்தின.கரிகாலனின் கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு, இதுகாறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன... பூமணியைப் போலவே சோ.தருமனும் தலித் லேபிளை எவ்விதத் தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ.தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை...[மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிடக் கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள்... ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்னவென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ, எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை பெருமாள் முருகன் தன் எழுத்தில் சாதித்து விடுகிறார்... தம் உயர்ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும் பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில்,... [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5

கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன? [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4

தமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள். ஆனால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும் தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர்[மேலும்..»]


தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது.. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால்...80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை.. [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2

எந்தப் பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம்தான். ஆனால்... வைஷ்ணவக் கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும் சமூகத்தில் எழுப்பப்பட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை அகற்றுவதில் இராமானுஜரின் வைஷ்ணவம்... சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை... [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்... இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது! [மேலும்..»]

ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”

“மொழி பெயர்ப்பு என்றே தெரியாமல், ஆற்றொழுக்கு போன்ற நடை” என்றெல்லாம் புகழப்படும் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்க்கப்படும் மொழிக்கும் ஆசிரியருக்கும், அந்த எழுத்து நம்முன் விரிக்கும் உலகத்துக்கும் நியாயம் செய்ததாகாது... முதல் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே என் அனுபவம் அவ்வளவாக உற்சாகம் தருவதாக இருக்கவில்லை... பெரும் அளவுக்கு ஷங்கர நாராயணனின் பார்வையும் தேர்வும் எனக்கும் நிறைவளித்துள்ளது [மேலும்..»]

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான். மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று. [மேலும்..»]

ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்

உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி,...... தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம்... [மேலும்..»]

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]

இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும் எதையெல்லாம் தன் சிறப்பாகக் கருதுகிறதோ அவை அத்தனையையும் மறுப்பவர் சந்திரலேகா. இந்திய நடனம் கொண்டுள்ள மத ரீதியான உறவுகள், அதன் முக்கிய சிறப்பான அங்கங்கள் என்று கருதுபவை, எந்த உன்னதத்தை நோக்கி அது பயணப்படுவதாகச் சொல்கிறதோ அது, எல்லாவற்றையுமே உதறியவர் அவர்..... பைபிள் கதைகளை பரத நாட்டியத்தில் சொல்ல முயன்ற பாதிரியார் ஃப்ரான்ஸிஸ் பார்போஸா (Fr.Francis Barboza)-வைப் பற்றிச் சொல்ல வேண்டும்.. இந்த அளவு துணிச்சலோ, முனைப்போ நம் வீட்டு முற்றத்தில் கூட நம்மால் காண முடியவில்லையே... [மேலும்..»]

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4

அந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்.... ....பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், "பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு 'சார் ஒண்ணுக்கு!' என்று அனுமதி கேட்பதாக இருக்கும்," என்று எழுதியிருந்தார். [மேலும்..»]

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3

ஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்... இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா?..[மேலும்..»]

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்... மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?... சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள். [மேலும்..»]


சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை... [மேலும்..»]

எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்

தங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும்.... “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது...” [மேலும்..»]

நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. "கோயில்களை மூடுங்கள்" என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா, ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம்...[மேலும்..»]

ஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்

மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன், அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான், அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும்.[மேலும்..»]

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது [மேலும்..»]

வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

பதினொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் வங்கத்தில் நிலவிய இந்துமத வாழ்க்கையும் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது என்று நினைக்கலாம். இந்து மதத்தின் வேதங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் முரணான, சம்பந்தமற்ற எவ்வளவோ கொடிய பழக்கங்கள் நம்பிக்கைகளும், இந்து மதத்தின் பெயரைச் சொல்லி அவ்வப்போது கால நீட்சியில் தோன்றியபோதிலும், அவ்வப்போது இந்துமதம் தன்னை விமர்சித்துக்கொண்டு புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது, அந்த விமர்சனங்கள் இந்து மதத்தின் உள்ளிருந்தே எழுகிறது என்பதை இந்த ஆவணம் நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. [மேலும்..»]

மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

அசாம் தீர்க்க முடியாத ஒரு சிக்கலில் மாநில அரசின், இந்திய அரசின் கையாலாகாத் தனமா, குறுகிய கால சுயலாபத்திற்காக, அசாமின், நாட்டின் சரித்திரத்தையே காவு கொடுத்துவரும் சோகத்தை இந்த சாதாரண அன்றாட வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் சொல்லும் தைரியம் மணிராமுக்கு இருக்கிறதே ஆச்சரியம் தான்..ஆரவாரம் இல்லாது இந்த மாதிரி இன்றைய தமிழ் அரசியல் சமூக வாழ்க்கையை அப்பட்டமாக முன் வைக்கும் தைரியம் நம் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வெகு காலத்துக்கு இராது என்று தான் தோன்றுகிறது [மேலும்..»]

இன்று மலர்ந்தது சுதந்திரம்

"நீங்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?" என்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், "நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா? கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது," என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. "இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று நம் முதல்வர் கேட்ட கேள்வி ஆணித்தரமானது. இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தைத் தான் sovereign என்று சொல்லியிருக்கிறது. இது போன்ற யாரோ எழுதி வைத்துவிட்டதை வைத்துக்கொண்டு... [மேலும்..»]

ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

... எல்லா இஸ்லாமிய படையெடுப்பு, கொள்ளை, கொலைகளையும் போல மதுரை சூறையாடப்பட்டது;ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல. நாயக்கர் காலம் வரை. சரித்திரம் முழுதும். இதே சரித்திரம் வெவ்வேறு ரூபங்களில் இன்னமும் நம்மை அலைக்கழிக்கிறது. சரித்திரம் பற்றியும் மனித இயல்பு பற்றியும் ஒன்று சொல்வதுண்டு. சரித்திரத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வது இல்லை என்பதைத் தான் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே பாடம். [மேலும்..»]

ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு என்று ஆசை காட்டுகிறார். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று. [மேலும்..»]





தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3

சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை இன்றைய தமிழ் நாவல் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு. இப்பெண்ணியக் கவிஞர்களின் ஆணாதிக்கச் சீற்றம் உண்மைதானா அல்லது வெறும் பாவனையா, என்று சந்தேகப்படும் காரணங்கள் முன்னெழுகின்றன, இவர்கள் பிராபல்யம் நாடி, பதவி நாடி, அரசியல் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளுவதைப் பார்த்தால்... [மேலும்..»]

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-2

இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தையில் வைப்பவர்கள் இவர்கள். இன்றைய தார்மீகச் சரிவின் விளைச்சல்கள். இருப்பினும் வெட்க உணர்வற்ற படாடோபங்கள் இவர்கள். இவர்கள் பெயரையும் நான் சொல்லவில்லை. எவரைச் சொல்வது? யாரை விடுவது? [மேலும்..»]

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1

நம் கண்முன் எல்லோரும் அறிய, எல்லோரும் அதற்கு ஆளாகி அவதிப்பட நடந்தேறியுள்ள ஒரு அராஜகத்தை இல்லையெனச் சாதிக்கும் அதிகார பீடங்கள், அது நடக்காதது போலத் தலையங்கங்கள் எழுதும் முன்னணிப் பத்திரிகைகளை இன்று நாம் காண்கிறோம். இந்தப் பத்திரிகைகளில் ஒன்று, அதன் ராஜகம்பீர தோரணைக்காக முப்பது நாற்பதுகளில் இந்தியத் தலைவர்களால் புகழப்பட்டது. இன்று அது சில கட்சிகளின் ஃபாஸிஸ எதிர்வினைகளுக்கு பயந்து, தான் பார்க்காதது போல் பாவனை செய்கிறது...[மேலும்..»]

ஆலயம் என்னும் அற்புதம்

கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்... இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும்...[மேலும்..»]

வெ.சா. பக்கம்: செல்வமாகாளி அம்மன்

வெளியூரில் எங்கிருந்தாலும், எவ்வளவு தூரத்திலிருந்தாலும், உடையாளூர் வாசிகளை பங்குனி உத்திரத்தில் நடக்கும் தன் உற்சவத்திற்கு அழைத்துவிடும் தெய்வம் செல்வமாகாளி அம்மன்தான். கனம் கிருஷ்ணய்யரையே ஊர்வலம் வந்த அக்கணமே ஒரு கீர்த்தனையை இயற்றிப் பாட வைத்த அம்மன். உ.வே.சா.வின் எழுத்துக்களில் இடம்பெற்றது உடையாளூர் சிவனோ பெருமாளோ இல்லை. செல்வமாகாளி அம்மன் தான்... [மேலும்..»]








வினோதமான வாழ்க்கை!

வினோதமான வாழ்க்கை!
  நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 48) வெங்கட் சாமிநாதன் முந்தைய பகுதி இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே. ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் ...Full story

பழங்கால வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்

பழங்கால வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 47)  பகுதி 46 ஐப் படிக்க இங்கே சொடுக்கவும் எனக்குப் புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத்காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ...Full story

ஒரு கிராமத்தானின் மாறுபட்ட சிந்தனை!

ஒரு கிராமத்தானின் மாறுபட்ட சிந்தனை!
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 46)  பகுதி 45 ஐப்படிக்க இங்கே சொடுக்கவும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாகப் பின்னடைந்திருந்த பிரதேசத்தின் தாற்காலிக முகாமில், சினிமா, இலக்கியம் ஓவியம் போன்ற கலை உலக விகாசங்களின் பரிச்சயத்தை, அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து திறந்த ஒரு ஜன்னல் வழியே பெற்று வரும் பாக்கியத்தைப் போல், எனக்கோ, நான் ...Full story

தமிழ் சினிமாவின் கலாசார வறுமை, சிந்தனை வறுமை..

தமிழ் சினிமாவின் கலாசார வறுமை, சிந்தனை வறுமை..
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 45)  பகுதி 44 ஐப் படிக்க இங்கே சொடுக்கவும் எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ்ப் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த ...Full story

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு!

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு!
    வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 44)   ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் கொஞ்சம் மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்தபடியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் ...Full story

இதெல்லாம் அண்ணாதுரையை பெர்னாட்ஷாவாக்கிவிடுமா?

இதெல்லாம் அண்ணாதுரையை பெர்னாட்ஷாவாக்கிவிடுமா?
    வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பாகம் - II (பகுதி - 43)  அந்தக் காலத்தில் ஹிராகுட் / புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின்தான் அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். ...Full story

பொட்டில் அடித்த மாதிரி மூளையில் பளிச்சிட்டது!

பொட்டில் அடித்த மாதிரி மூளையில் பளிச்சிட்டது!
    வெங்கட்சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 42) இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன். “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே ...Full story

விசித்திரமான விதியின் விளையாட்டுகள்!

விசித்திரமான விதியின் விளையாட்டுகள்!
    வெங்கட் சாமிநாதன்   நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 41) ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை....Full story

கல்கத்தா மாநகர தரிசனம்!

கல்கத்தா மாநகர தரிசனம்!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 40) நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம் ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ...Full story

அமைதியும் சாந்தமும் நிறைந்த நாட்கள்!

அமைதியும் சாந்தமும் நிறைந்த நாட்கள்!
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் -  பாகம் - II (பகுதி - 39)  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்தப் பயணம் முழுவதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன்னிச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயணத்துக்கும் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாது தான் சென்றோம். எங்கே தங்குவது, எங்கே குளிப்பது போன்ற எந்த முன்னேற்பாடும் இல்லை. அவ்வப்போது நாங்கள் கிடைத்த இடத்தில் எங்களைச் சௌகரியப்படுத்திக் கொண்டோமேத் தவிர வேறு வசதிகள் ஏதும் செய்து கொள்ளவில்லை. இப்படி ...Full story

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்!

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்!
வெங்கட் சாமிநாதன்  நினைவுகளின் சுவட்டில் - பாகம் - II (பகுதி - 38) காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ். சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு ...Full story

எனக்குக் கிடைத்த ஹில்ஸா மாச்…!

எனக்குக் கிடைத்த ஹில்ஸா மாச்...!
நினைவுகளின் சுவட்டில் - பகுதி - II (பாகம் - 37) வெங்கட் சாமிநாதன் வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் ...Full story

திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்!

திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் - பகுதி - II (பாகம் - 36)  இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி ...Full story

இந்திய ஓவியர்களும், ஓவியங்களும்!

இந்திய ஓவியர்களும், ஓவியங்களும்!
நினைவுகளின் சுவட்டில் (பகுதி - II பாகம் - 35) வெங்கட் சாமிநாதன் நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ...Full story

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!
நினைவுகளின் சுவட்டில் (34) வெங்கட் சாமிநாதன் புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிக்கை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்குப் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிக்கைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட ...

உலகப்புகழ் புதினங்கள்!

உலகப்புகழ் புதினங்கள்!
நினைவுகளின் சுவட்டில் - (33)  வெங்கட் சாமிநாதன் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ...Full story

அன்றும்…….. இன்றும்…..?

அன்றும்........ இன்றும்.....?
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்-(32) Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்தப் பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை.  The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. ...Full story

பரிச்சயப் படுத்திய உலகம்

பரிச்சயப் படுத்திய உலகம்
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்-(31)     ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டு ...Full story

பரதமும், ஒடிசியும்!

பரதமும், ஒடிசியும்!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பகுதி – II – பாகம் – 30) ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர்.   தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” ...Full story

தேநீர் – தே(ன்)- நீர்

தேநீர் - தே(ன்)- நீர்
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்  (பகுதி – II – பாகம் – 29) அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு "டீ கிடைக்குமா?" என்று கேட்டால் டீ கிடைக்கும், என்பது எதிர்பாராது கிடைத்த ஒரு  சந்தோஷம். கிடைத்த சந்தோஷமா? வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது,கொதிக்கக் கொதிக்க. கைகள் ...Full story

பஞ்சாட்சரமும்…….தேவசகாயமும்!

பஞ்சாட்சரமும்.......தேவசகாயமும்!
வெங்கட் சாமிநாதன்   நினைவுகளின் சுவட்டில்  (பகுதி - II - பாகம் - 28)   மிருணாலைப் பற்றிப்  பேச ஆரம்பித்தால் நினைவுகள்  அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக்  கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய  அனுபவங்களையும் பற்றிப்  பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்க வேண்டும். மறந்து விட்டது பற்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO ...Full story

உன்னையறிந்தால்……………

உன்னையறிந்தால்...............
வெங்கட் சாமிநாதன்   நினைவுகளின் சுவட்டில் (பகுதி II  -  பாகம் – 27)   பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார  விருந்து பற்றி எழுதும்போது  சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான்அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப்  படி சொல்ல சில சமயம்  மறதியில் விடுபட்டாலும், நினைவுக்கு வந்த உடனே சொல்லி விட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன. அதற்குக் காரணம் ...Full story

களவும் கற்று மற!

களவும் கற்று மற!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பகுதி II  -  பாகம் - 26)   பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால். “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் எப்போதாவது பார்ப்போம். தினமும் அவனைப் பார்த்துப் பேசி பழகுவது என்பது இனி இல்லை. அவனுக்கு விருந்து கொடுத்து அனுப்ப வேண்டாமா?” என்று கேட்டான். இது எனக்கு புது விஷயம். இது வரை நான், யாரும் யாருக்கும் பிரிவு உபசாரம் செய்து விருந்து ...Full story

ஊடலும்……….கூடலும்!

ஊடலும்..........கூடலும்!
வெங்கட் சாமிநாதன்   நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 25) மிருணால்தான்  எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும்  நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப்  பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும்,  பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங் கொண்டு ஒருவரை ஒருவர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக் ...Full story

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 24)   ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனதில் திரையோடுகின்றன. சின்ன உத்தியோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் ...Full story

சூல்…………பால்……

சூல்............பால்......
நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 23)   வெங்கட் சாமிநாதன் ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், ...Full story

மலர்களைப் போல் தங்கை…….

மலர்களைப் போல் தங்கை.......
நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 22) வெங்கட் சாமிநாதன்   சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம்  கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம்  அவ்வளவு பிரியம் அவளுக்கு. அவன் இல்லாது இருக்க முடியவில்லை அந்த 10 – 11 வயது தங்கைக்கு. திருட்டுத் தனமாக கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள், ரோஹ்தக்கிலிருந்து. இது என்ன தில்லியிலிருந்து காஜியாபாத் போகிற மாதிரியா இல்லை க்ரோம்பேட்டிலிருந்து மாம்பலம் போகிற சமாசாரமா? இல்லை நான் அவள் ...Full story

உறங்காத நினைவலைகள்!

உறங்காத நினைவலைகள்!
நினைவுகளின் சுவட்டில் (பாகம் - II பகுதி - 21) வெங்கட் சாமிநாதன்   அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்கிறோம் என்பது போன்ற கவலைகள் இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. இப்போது அந்நாட்களைப் பற்றி நினைத்தாலும் சந்தோஷமாகக் கழிந்ததாகவே தோன்றுகிறது. திரும்ப நினைவில் அசை போடுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது. அலுவலகத்தில் கழியும் நேரத்தை ...Full story

விநோதமான சந்திப்பு, விசித்திரமான நட்பு

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி 20) வெங்கட் சாமிநாதன் சீனுவாசன் மாத்திரமில்லை. ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதை எனக்குக் காட்டியவர்கள் பலர். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில், வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார், அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல. என்னோடு அறையில் இருந்த நண்பர்கள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார். வெளித் தோற்றத்தில் ...Full story

நண்பர்கள்… திரைப்படங்கள்… புத்தகங்கள்…

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  19) வெங்கட் சாமிநாதன் சீனுவாசன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நண்பர். சுவாரஸ்யமான என்றால், அவர் பேச்சில், பார்வையில், ரசனையில், சில பிரச்சினைகளை அணுகும் முறையில் அவர் வித்தியாசமானவர். சாதாரணமாக அவர் செய்வதையும் சிந்திப்பதையும் பேசுவதையும் இன்னொருவர் பேசக்கூடும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. முன்னரே ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்லியிருக்கிறேன். இதன் காரணமாக அவருடன் பழகுவதில் எங்களுக்கு எவ்விதச் சிரமமும் இருந்ததில்லை. சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியதை அவர் செய்வதில்லையாதலால் ...

துளசிச் செடிகளில் மணக்கும் மனித உறவுகள்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  18) வெங்கட் சாமிநாதன் நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பெருமை சேர்த்தது. இதெல்லாம் தற்செயலாக நேர்ந்தது தான். இதே போல இன்னொருவருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியாது. செல்வாக்கே ஏதும் இல்லாத எனக்கு, ...Full story

வெங்கட் சாமிநாதனின் ‘வாதங்களும் விவாதங்களும்’ நூல் வெளியீடு

Full story

பட்டாசார்யாவும் அவரின் அழகான மனைவியும்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  17) வெங்கட் சாமிநாதன் சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது அவர்கள் இல்லை. வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் சுகமோ துக்கமோ இம்மாதிரியான மனச் சலனங்கள் அதிக நாட்கள் நீடிப்பதில்லை. வீடு காலியானதும் நண்பர்கள் மறுபடியும் வந்து குழுமத் தொடங்கிவிட்டார்கள். தேவசகாயம் கூட தனக்கென ஒரு வீடு ...Full story

அன்றிலிருந்து டயரி எழுதுவதை விட்டுவிட்டேன்

வெங்கட் சாமிநாதன் (நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  16) ஹிராகுட்டிலிருந்து ஒரு நாள் ராஜா வந்திருந்தார். எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், “நான் ஒருத்தரை அனுப்பறேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே ...Full story

பெருத்த முதலைகளும் பலி ஆடுகளும்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  15) வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக, அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்தப் பெரியவரை, வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை வயதுள்ளவரைக் கொஞ்ச நாட்களாகக் காணவில்லை. அவர் என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் ஃபில்ம் இண்டியா பத்திரிகையும் சேர ஆரம்பித்து விட்டது. மாதங்கள் கடந்தன. பின்னர் தான் யாரோ அவர் ...Full story

பஞ்சாபிகளின் போர்த் தந்திரம்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  14) வெங்கட் சாமிநாதன் புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்குக் கல்கத்தாவிலிருந்து ஆங்கில தினசரி பத்திரிகைகள் வரும். புர்லாவுக்கு வந்தவை அம்ரித் பஜார் பத்திரிகாவும், ஸ்டேட்ஸ்மனும். ஸ்டேட்ஸ்மன் ஆங்கிலேயர் நடத்தும் பத்திரிகையாச்சே என்று அம்ரித் பஜார் பத்திரிகை பக்கம் மனம் சென்றது. அது ஒரு பெரிய ...Full story

அபூர்வமான புதிய அனுபவங்கள்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  13) வெங்கட் சாமிநாதன் சாந்தி பத்திரிகை எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாக எல்லோரும் வெளிப்படுத்தும், பிரபலமாகியுள்ள அபிப்ராயங்களை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்வது என்ற சமாசாரம் பத்திரிகை என்னும் இன்னொரு பொது மேடையில் வெளிவருவது படிக்க எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாகவும் புதிய அனுபவமாகவும் இருந்தது. அதிலும் நான் கொண்டிருந்த அபிப்ராயத்தை அச்சில் இன்னொருவர் சொல்லப் பார்ப்பது என்பது, எனக்கு ஆதரவாக இன்னொரு குரல் இருக்கிறது என்ற மனோ திடம் தருவதாகவும் இருந்தது. இனி ...Full story

என் அறைக்குள் நுழைந்த இலக்கிய வெளிச்சம்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  12) வெங்கட் சாமிநாதன் இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்தில் வேலை பார்த்த நாட்கள், முதலில் ஹிராகுட்டில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளும் பின்னர் மஹாநதிக்கு எதிர்க் கரையில் கட்டப்பட்டு வந்த புர்லா என்ற புதிய முகாமில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுக் காலமும் எனது உலகம் விரிந்துகொண்டே போனது தெரிகிறது. அந்த நாட்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் எனக்குப் புதியனவாகவும் நினைத்துப் பார்க்க மிகவும் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது தெரிகிறது. ஒரு ...Full story

மறக்க முடியாத வங்கத் திரைப்படம்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  11) வெங்கட் சாமிநாதன் உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்குச் சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக்கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத் தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனத்துக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் ...Full story

சிறு பயணங்கள்… சில சந்திப்புகள்…

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி  10) வெங்கட் சாமிநாதன் உடையாளூர் கிராமத்தில் அப்படி ஒண்ணும் நெருக்கமான சினேகிதர்கள் என்று என் ஒத்த வயதினர் யாரும் எனக்கு இருந்ததில்லை. ‘என்னடா, எப்போ வந்தே?’ என்று சம்பிரதாயமாகக் கேட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ‘வேலை இருக்குடா தலைக்கு மேலே’, என்று சொல்லிக்கொண்டே போய்க்கொண்டிருப்பார்கள். ‘மெஷினுக்கு போகணும், நெல் அரைச்சிண்டு வரணும்’, இல்லையோ, ‘சந்திரசேகரபுரம் போகணும்டா, கொஞ்சம் சாமான் வாங்கிண்டு வான்னு அப்பா சொல்லிருக்கா’ என்று சொன்னால் அதிகம். ‘இருப்பியோல்யோ ஒரு மாசமாவது, சாவகாசமாப் பேசிக்கலாம்’ என்று ...Full story

அம்மாவின் ஆயிரம் வார்த்தைகள்

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி  9) வெங்கட் சாமிநாதன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். “ஊர் எப்படி இருக்கிறது? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்? சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா? நன்றாக, ஒழுங்காக வேலை செய்கிறேனா? பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா? இங்கே ஊரில் அப்பா - அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை ...Full story

கெட்ட கனவு போல் ஒரு பயணம்

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி  VIII) வெங்கட் சாமிநாதன் அந்தப் பிரயாணம் அன்று மாலை வரை அதிகம் விக்கினங்கள் ஏதும் இல்லாமல் கழிந்தது என்று சொல்லவேண்டும். அது ஒன்றும் சுகமான பிரயாணமோ, இதுகாறும் நான் அனுபவித்த நீண்ட தூரப் பிரயாணங்கள் போல நினைத்துப் பார்க்க சந்தோஷம் தரும் ஒன்றாகவோ இருக்கவில்லை. ஆனால் அன்று மாலையில் இருந்து மறு நாள் இரவு சென்னை வந்து சேரும் வரையான அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பார்க்கும் போதெல்லாம், இனி யாருக்கும், குறிப்பாகப் பெண்மணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட ...Full story

அந்த ரயில் பயணத்தில்….

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  2 – பகுதி  7) வெங்கட் சாமிநாதன் நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக்கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். நாக்பூர் போய்ச் சேர மணி சாயந்திரம் நாலு ஆகிவிடும். இவர்களை அழைத்துக்கொண்டு, நாக்பூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் கிராண்ட் எக்ஸ்ப்ரஸோடு சேர்க்கப்படும் வண்டியைத் தேடி இடம் பிடிக்கவேண்டும். இந்தப் பாதையில் வருவது இது தான் முதல் தடவை. பிலாஸ்பூர் வரைக்கும் ஒரு தடவை ...Full story

எனது ஹிராகுட் நாட்கள் – 6

(நினைவுகளின் சுவட்டில் - பாகம் 2 - பகுதி 6) வெங்கட் சாமிநாதன் செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏறப்ட்டது என்றேன். அதைத் தொடங்கி வைத்தது, அவர் தொடர்ந்து வரவழைத்துப் படித்து வந்த 'ப்ளிட்ஸ்' என்ற வாராந்திர ஏடு, அதை ஆங்கிலத்தில் படிக்கத் தூண்டியதே அதில் வரும் பரபரப்பான செய்திகள் தான். அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது, நானாவதி வழக்கு. நானாவதி, கடற்படையில் வேலை பார்த்த அதிகாரி. கடற்படை என்றால் தாம்பத்ய வாழ்க்கை கொஞ்சம் சிரமம் தரும் விஷயம் ...Full story

எனது ஹிராகுட் நாட்கள் – 5

(நினைவுகளின் சுவட்டில் - பாகம் 2 - பகுதி 5) வெங்கட் சாமிநாதன் ஹிராகுட்டிலிருந்து வாராவாரம் ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை சம்பல்பூருக்குப் போவதென்பது அங்கு சினிமா பார்ப்பதற்கு மட்டுமல்ல. டவுனுக்குள்ளே சென்றால், ஒரு சிறிய புத்தகக் கடையும் இருந்தது. அங்கு அந்தச் சம்பல்பூரில், ஆங்கில புத்தகங்கள் கிடைத்தன. பெங்க்வின் பெலிகன் புத்தகங்களும் கிடைத்தன. ஒரு வருடத்துக்குள் புர்லாவுக்கு வாசம் மாறி, அங்கு பாதி என்ற அன்பரின் பரிச்சயம் ஏற்படும் வரை அந்தப் புத்தகக் கடையில் தான் ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கி வந்தேன். ...

எனது ஹிராகுட் நாட்கள் – 4

(நினைவுகளின் சுவட்டில் - பாகம் 2 - பகுதி 4) வெங்கட் சாமிநாதன் ஹிராகுட்டில் எனக்கு ஃபில்ம் இந்தியா அறிமுகமானது பற்றிச் சொன்னேன். ஜாம்ஷெட்பூரில் வீட்டுக்கு முன் இருந்த டவுன் ஹால் கட்டடத்தில் இருந்த லைப்ரரியில் தான் எனக்கு அமுதசுரபி படிக்கக் கிடைத்தது பற்றி முன்னரே எழுதியிருந்தேன். அந்த அமுதசுரபி எனக்கு சாண்டில்யனையும் அவரது ஜீவபூமி என்ற தொடர் கதையையும் கூட அறிமுகப்படுத்தியது. சாண்டில்யனைப் பற்றியும் அவரது தலையணை தலையணகளாக வந்த நாவல்களையும் அவர் பெற்றிருந்த ரசிக வெள்ளத்தையும் பின் வருடங்களில் நான் நிறைய ...Full story

எனது ஹிராகுட் நாட்கள் – 3

(நினைவுகளின் சுவட்டில் - பாகம் 2 - பகுதி 3) வெங்கட் சாமிநாதன் எலெக்ட்ரீஷயனான பத்மனாபன், என்னைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவன். அவனுக்கு உதவியாளாக இருந்தவன் இன்னும் கொஞ்சம் அதிகம் மூத்தவன். அவர்கள் யாரும் என்னைத் தங்கள் இடத்துக்கு வந்து பங்கு கேட்கும் அன்னியனாகப் பார்க்கவில்லை. சொந்த ஊரிலிருந்து வெகு தூரம் பிழைக்க வந்த இடத்தில் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருப்பது என்பது இடத்தைப் பொறுத்து, தானாகவே வந்துவிடும் குணம் போலும். பத்மனாபன் மலையாளி. உதவியாளன் தமிழன் தான். ஆனால் பெயர் ...Full story

எனது ஹிராகுட் நாட்கள் – 2

(நினைவுகளின் சுவட்டில் - பாகம் 2 - பகுதி 2) வெங்கட் சாமிநாதன் எல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமாவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்குப் பெருமையாக இருக்காதா? நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து பெற்றோருக்கு உதவுகிறவனாகி விட்டேனே. இனி, ஜெம்ஷெட்பூருக்கு வருவதற்கான செலவுக்கு அம்மா அட்கு வைத்த நகையை மீட்க வேண்டும். முதலில் ஜெம்ஷெட்பூர் போகவேண்டும். நான் வேலை பார்ப்பவனாக, அவரால் தயார் செய்யப்பட்டவனாக அவர் முன் நிற்க வேண்டும். மாமா, மாமி இருவ்ருக்கும் நேரில் சென்று நமஸ்காரம் செய்து ...Full story

எனது ஹிராகுட் நாட்கள்

(நினைவுகளின் சுவட்டில் - பாகம் 2 - பகுதி 1) வெங்கட் சாமிநாதன் ('உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும் 'என்ற என் வேண்டுகோளை ஏற்று, வெங்கட் சாமிநாதன் தம் நினைவுகளை 2007ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார். அவற்றைத் தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் தளங்களில் தொடராக வெளியிட்டேன். அவற்றைத் தொகுத்து, 'நினைவுச் சுவடுகள்' நூலாக அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 336 பக்கங்கள் - விலை: ரூ.170. ...

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் 

 
 
#தலைப்புவெங்கட் சாமிநாதன்
38மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -38
37மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -37
36மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -36
35மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -35
34மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -34
33மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -33
32மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -32
31மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -31
30மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -30
29மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -29
28மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -28
27மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -27
26மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -26
25மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -25
24மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -24
23மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -23
22மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -22
21மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -21
20மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -20
19மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -19
18மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -18
17மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -17
16மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -16
15மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -15
14மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -14
13மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -13
12மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -12
11மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -11
10மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -10
9

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 9

8

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 8

7மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 7
6மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 6
5மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 5
4மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 4
3மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 3
2மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -2
1மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -1

 


1

2

A



த தொடரும்.

ந தொடரும்.


சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்- 1 ....உள்ளே
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்- 2 & 3   ....உள்ளே
தமிழகக் கோட்டைகள்! - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே
தமிழகக் கோட்டைகள்! - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே
தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்! - வெங்கட் சாமிநாதன்....உள்ளே 
எனக்கு அந்த வெற்றி வேண்டாம்!  - வெ.சா. - ...உள்ளே  
என் தரப்பிலிருந்து! - வெங்கட் சாமிநாதன் - ...உள்ளே
வெங்கட்சாமினாதன்: எனக்கு அந்த வெற்றி...உள்ளே 
காற்றினிலே வந்த கீதங்கள்!-வெங்கட் சாமிநாதன்...உள்ளே 
தார்மீகமிழந்த  சாமர்த்தியங்கள்! -வெங்கட் சாமிநாதன்...உள்ளே
ஒரு பரிமாற்றம்! - வெங்கட் சாமிநாதன் -..உள்ளே 
ஒரு சிறிய தகவல் திருத்தமும் தொடர்ந்து சில குறிப்புகளும்! 
- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே 
இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும் ! 
- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே 
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே யாத்ரா பிறந்த கதை! - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே
என் மத வெறியும் முக மூடிகளும்!- வெங்கட் சாமிநாதன்...உள்ளே
மறைக்கப்பட்ட உலகம்!- வெங்கட் சாமிநாதன்..உள்ளே
கருத்தும் பகைமையும்!
 - வெங்கட் சாமிநாதன்..உள்ளே

ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி - காஞ்சி மடத்தில்  ..உள்ளே
யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை!
- வெங்கட் சாமிநாதன் -...உள்ளே

.அழகிரிசாமி!  - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே
என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்... - - வெங்கட் சாமிநாதன்....உள்ளே
ஆசை என்றொரு கவிஞர்! - வெங்கட் சாமிநாதன்...உள்ளே

பூமியிலிருந்து தள்ளிவிடுவது! - அ.முத்துலிங்கம...உள்ளே
வல்லிக்கண்ணன்... 
-வெங்கட் சாமிநாதன்-...உள்ளே

மூத்த எழுத்தாளர் நகுலன் மறைவு! நகுலனின் நினைவில்! - வெங்கட் சாமிநாதன் -வேண்டிய செய்தி எனக் கருதியதாக எனக்குத் தகவல் இல்லை....உள்ளே 
தில்லியில் நாடக விழா! - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே

தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்! - வெங்கட் சாமிநாதன்....உள்ளே 
தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்! - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே
வெ.சா.வின் இரு கட்டுரைகள் ... உள்ளே
இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (1) .உள்ளே
இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (2) ...உள்ளே 
இந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3)  ...உள்ளே

நினைவுகளின் தடத்தில்...... வெங்கட் சாமிநாதனின் சுயசரிதை
நினைவுகளின் தடத்தில்...... வெங்கட் சாமிநாதனின் சுயசரிதை

நினைவுகளின் தடத்தில் (1) - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே
நினைவுகளின் தடத்தில் (2)!- வெங்கட் சாமிநாதன் ....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (3 & 4)!....உள்ளே

நினைவுகளின் தடத்தில் (5 & 6)-..உள்ளே
நினைவுகளின் தடத்தில் (7 & 8)! - வெங்கட் சாமிநாதன்....உள்ளே
நினைவுகளின் .. (9, 10, 11 & 12 - - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின்... - 13 /14! - வெங்கட்சாமிநாதன் -..உள்ளே  
நினைவுகளின் தடத்தில் - 15 & 16!-- ..உள்ளே
நினைவுகளின் 17 ,18! - வெங்கட் சாமிநாதன் - ..உள்ளே
நினைவுகளின் தடத்தில் (19 & 20) - வெ. சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின் .. - (21 & 22)- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (23 & 24) - வெ. சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (25 & 26) - வெ. சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (27 & 28) - வெ. சாமிநாதன் -....உள்ளே

நினைவுகளின் தடத்தில் (29 & 30) - வெ. சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (31 & 32) - வெ. சாமிநாதன் -....உள்ளே

நினைவுகளின் தடத்தில் (33 & 34) - வெ.சா -....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (35 & 36) - ...உள்ளே
நினைவுகளின் தடத்தில் (37 & 38) - வெ. சா- ...உள்ளே
நினைவுகளின் ...39 & 40 - வெ. சா....உள்ளே
நினைவுகளின் ...41 & 42 - வெ. சா....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (43 & 44) - வெ. சா,  ...உள்ளே
நினைவுகளின் தடத்தில் (45 & 46)- வெ.சா. ...உள்ளே
நினைவுகளின் தடத்தில் 47 & 48- வெ.சா. -....உள்ளே
நினைவுகளின் தடத்தில் (49 & 50) - வெ. சா.-! ....உள்ளே
நினைவுகளின் சுவட்டில் - (51) (முதல் பாகம் முற்றும்) - வெங்கட் சாமிநாதன் . ......உள்ளே
 

2nd Part
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21009191&format=print - 52
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21009191&format=print - 53
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21010022&format=print - 54
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21010171&format=print - 55
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21011014&format=print - 56
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21011281&format=print - 57
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21012051&format=print - 58
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21101021&format=print - 59
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21101174&format=print - 60
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21101301&format=print - 61
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21102061&format=print - 62
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21102206&format=print - 63
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21103202&format=print - 64
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21104034&format=print - 65
http://www.thinnai.com/?module=displaystory&story_id=21104173&format=print - 66

vswaminathan.venkat@gmail.com


















































































































































































































































































































































































































































































































































































     RSS of this page