Home / NRI Account

NRI Account


********************************************************************************************************************************************
என்.ஆர்.ஓ கணக்கில் இருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வசதி அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை சாதாரணமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. ஆனால் சில சூழ்நிலைகளில் பாரத ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அனுப்பலாம். உதாரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த பணம் என்.ஆர்.ஓ கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால் அந்தப்பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பாரத ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும். அப்படி அனுமதி பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்கையில் கீழ்க்காணும் விவரங்களைத் தவறாமல் அளிக்க வேண்டும்.
 
1. கணக்கில் உள்ள இருப்புத்தொகை எங்கிருந்து வந்தது? எந்த வழிமுறையில் வந்தது?
 
2. என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள அனைத்து பற்று,  வரவுகள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அவற்றின் பின்னணி
 
3. என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள தொகை தொடர்பாக வருமானவரி பாக்கி ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து வருமானவரி அதிகாரியின் சான்றிதழ்.
 
விண்ணப்பத்தின் பேரில் பாரத ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கினால் மட்டுமே வங்கி பணத்தை வெளிநாடு அனுப்புவதற்கு அனுமதி கிடைக்கும்..
 
இது தவிர, ஒரு நிதி ஆண்டில் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாடு அனுப்பலாம் என்ற பொதுவான திட்டத்தின் கீழ் ஒரு என்.ஆர்.ஐ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள இருப்புத்தொகையை மேற்கூறிய அளவு வரை அனுப்பலாம்.
 
அதேபோல் மேலே கூறிய திட்டத்தில் கீழ்க்கண்ட முறையில் கிடைத்த பணத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.
 
1. என்.ஆர்.ஐ.யின்/ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் அசையாச் சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த பணம்.
 
2. என்.ஆர்.ஐ.க்கு/ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு,  அவரது மூதாதையர்களிடம் இருந்து வாரிசு அடிப்படையில் கிடைத்த சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த பணம்.
 
மத்திய நேர்முக வரிவிதிப்பு வாரியத்தின் (சி.பி.டி.டி) சுற்றறிக்கை எண் 10/2002 தேதி 9/10/2002ல் குறிப்பிட்டுள்ள மாதிரிப் படிவத்தின்படி ஒரு சார்டர்டு அக்கவுண்டென்ட் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அந்தச் சான்றிதழ் பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும்.
 
அதேபோல் ஒரு என்.ஆர்.ஐ.க்கு அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அவர்கள் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் அளித்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் கிடைத்த சொத்துக்களை விற்றதன் வாயிலாக கிடைத்த பணத்தையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒரு நிதியாண்டில் வெளிநாடு அனுப்பலாம் என்ற பொதுவான திட்டத்தின் கீழ் அனுப்பலாம்.
 
செட்டில்மெண்ட் பத்திரத்தின் ஒரிஜினலையும், அது தொடர்பான மேலே குறிப்பிட்டது போன்ற சார்ட்டர்டு அக்கவுண்டன்ட சான்றிதழையும் பாரத ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 
இவை தவிர, ஒரு என்.ஆர்.ஐ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், தான் உள்நாட்டில் வாழ்ந்த காலத்தில் வாங்கிய அசையாச் சொத்துக்களையோ அல்லது அவர் என்.ஆர்.ஐ ஆன பிறகு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில் இருந்து வாங்கிய அசையாச் சொத்துக்களை விற்ற பணத்தையோ மேற்கூறிய சிறப்புத் திட்டத்தின் கீழ் வெளிநாடு அனுப்பலாம்.
********************************************************************************************************************************************
என்.ஆர்.(இ) கணக்குகளில் வரவு வைக்கக் கூடியவை எவை? இதோ பட்டியல்...
 
1. அனுமதிக்கப்பட்ட கரன்சியில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை
 
2. என்.ஆர்.(இ) கணக்குதாரர் இந்தியாவுக்கு தற்காலிகமாக வரும்போது,  அவர் தனது அன்னியச் செலாவணிக் கணக்கில் கொடுக்கப்பட்ட காசோலை மற்றும் அவர் தன்னுடன் கொண்டு வந்த பயணிகள் காசோலைகள் (டிராவலர்ஸ் செக்),  வங்கி டிராஃப்ட்கள் ஆகியவற்றுக்கான பணத்தை என்.ஆர்.(இ) கணக்கில் வரவு வைக்கலாம். அதாவது எந்த ஒரு காசோலைகளுக்கு பணம் அன்னிய கரன்சி மூலம் ஈடு செய்யப்படுகிறதோ அந்தக் காசோலைகள்/ டிராப்ட்டுகள் ஆகியவற்றை என்.ஆர்.(இ) கணக்கில் வரவு வைக்கலாம்.
 
 அதே நேரம்,  என்.ஆர்.(இ) கணக்குதாரர் இன்னமும் வெளிநாட்டில்தான் வசிக்கிறார் என்பதை வங்கி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
 அதே போல் பயணிகள் காசோலைகள் (டிராவலர்ஸ் செக்) வெளிநாட்டில் வழங்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
 
3. என்.ஆர்.(இ) கணக்குதாரர் இந்தியாவுக்கு தற்காலிகமாக வரும் போது, தன்னுடன் கொண்டு வந்த அன்னியக் கரன்சியை,  என்.ஆர்.(இ) கணக்கில் வரவு வைக்கலாம். ஒரு நிபந்தனை. கரன்சி அறிவிப்பு படிவத்தில் (கரன்சி டிக்லரேஷன் ஃபார்ம்) அவர் அதை முறையாக அறிவித்திருக்க வேண்டும்.
 
4. வேறு ஒரு என்.ஆர்.(இ)/ எஃப்.சி.என்.ஆர் கணக்கில் இருந்து பணத்தை மாற்றம் செய்தும் வரவு வைக்கலாம்.
 
5. ஏற்கெனவே கணக்கில் இருந்து இருப்புத் தொகைக்கு வங்கி வழங்கிய வட்டித் தொகையை வரவு வைக்கலாம்.
 
6. அரசுப் பத்திரங்கள்,  மியூச்சுவல் பண்டுகளில் இருந்து கிடைத்த ஈவுத்தொகை (டிவிடெண்ட்டு)யையும் வரவு வைக்கலாம். ஆனால், அந்தப் பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தில் இருந்து வாங்கியவையாக இருக்க வேண்டும். அல்லது என்.ஆர்.(இ)/ எஃப்.சி.என்.ஆர். கணக்கில் இருந்து வாங்கியவையாக இருத்தல் வேண்டும்.
 
7. மேலே குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகளின் முதிர்வுத் தொகையையும் வரவு வைக்கலாம்.
 
8. பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் வாங்குவதற்கு பணம் அனுப்புகிறோம். பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தப்பணம் திரும்பி வருகிறது. திரும்பி வந்த பணத்தை வரவு வைக்கலாம். ஆனால், முன்னதாக அனுப்பிய பணம் என்.ஆர்.(இ) எஃப்.சி.என்.ஆர். கணக்கில் இருந்து எடுத்த பணமாக இருத்தல் வேண்டும். அல்லது, வெளிநாட்டில் இருந்து வங்கித்துறை வாயிலாக வந்த பணத்தில் இருந்து பங்குகளையோ அல்லது கடன் பத்திரங்களையோ வாங்குவதற்கு அனுப்பியிருக்க வேண்டும்.
 
9. வீடு அலாட்மெண்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்புகிறோம். வீடு அலாட் ஆகவில்லை. முன்பணம் திரும்பி வருகிறது. அந்தப் பணத்தை என்.ஆர்.(இ) கணக்கில் வரவு வைக்கலாம். ஆனால், முன்பணமாக அனுப்பப்பட்ட பணம் மேலே குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த பணமாக இருத்தல் வேண்டும்.
 
10. என்.ஆர்.ஐ.க்கு இந்தியாவில் கிடைத்த வீட்டு வாடகை வருமானம்,  ஓய்வூதியம்,  வட்டித்தொகை, ஈவுத் தொகை போன்ற நிகழ்கால வருமானமாக இருக்குமேயானால் அவற்றை வங்கி என்.ஆர்.(இ) கணக்கில் வரவு வைக்கலாம். இதற்கு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டண்ட் சான்றிதழ் பெற்றுக் கொண்ட பிறகே வங்கி வரவு வைக்கலாம்.
 
 என்.ஆர்.(இ) கணக்கில் எந்தெந்த காரணத்திற்காக பற்று (டெபிட்) வைக்கலாம் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
********************************************************************************************************************************************
என்.ஆர்.(இ) கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதுடன்,  சம்பந்தப்பட்ட என்.ஆர்.ஐ.யின் கையொப்பம் உரிய வகையில் உறுதி செய்யப்படவேண்டும். உரியமுறை யாதெனில், வெளிநாட்டு வங்கி மேலாளர்,  இந்திய தூதரக அதிகாரி அல்லது வெளிநாட்டில் உள்ள நோட்டரி பப்ளிக் ஆகிய மூவரில் ஒருவர் உறுதி செய்திட வேண்டும். விண்ணப்பத்துடன்,  கணக்கு தொடங்குவதற்கு அன்னிய கரன்சியில் முதல் தொகை கொடுக்கப்பட வேண்டும்.
 
 வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு நிரந்தரமாக திரும்பியவுடன் வங்கிக்கு தகவல் கொடுக்கப்படும் என்று உறுதிமொழியையும் என்.ஆர்.ஐ தரவேண்டும். இந்த உறுதிமொழி கொடுப்பதற்கு விண்ணப்பத்திலேயே வகை செய்யப்பட்டிருக்கும்.
 
 ஒருவேளை என்.ஆர்.ஐ இந்தியாவுக்கு தற்காலிகமாக வரும் போதும், இந்தக் கணக்கை நேரிலேயே தொடங்கலாம். அன்னிய கரன்சியை பிரயாணிகள் காசோலையாகவோ,  கரன்சியாகவோ, நாணயமாகவோ வங்கிக்கு செலுத்தலாம்.
 
 என்.ஆர்.(இ) கணக்கு தொடங்குகையில்,  முதல் டெபாசிட் தொகையை கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் கொடுக்கலாம்.
 
1. வங்கிகள் வாயிலாக வெளிநாட்டில் இருந்து வந்த அன்னியச் செலாவணித்தொகை,

2. என்.ஆர்.ஐ தற்காலிகமாக இந்தியா வரும்போது கரன்சி நோட்டாகவோ,  நாணயமாகவோ,  பிரயாணிகள் காசோலையாகவோ கொண்டு வந்த தொகையாக இருக்கலாம். ஆனால்,  கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இதைப்பற்றி உரிய படிவத்தில் தகவல் கொடுத்து,  அதனை பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.

3. வேறு ஒரு என்.ஆர்.(இ)/ எஃப்.சி.என்.ஆர் கணக்கில் இருந்து தொகையை புதிய கணக்குக்கு மாற்றம் செய்யப்படலாம்.
 
என்.ஆர்.ஓ கணக்கை என்.ஆர்.(இ) கணக்காக மாற்றிக்கொள்ள முடியுமா?
இது பற்றி எஃப். இ.எம் (டெபாசிட்) விதிமுறைகள் 2000ல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால்,  மேற்கூறிய விதிமுறைகளின்படி ஷெட்யூல் 3,  பாரா 4ல்,  என்.ஆர்.ஓ கணக்கில் வெளிநாட்டில் இருந்து வந்த தொகை ஏற்கெனவே தனித்தன்மையுடன் இருக்குமேயானால்,  அதை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பலாம் என்று ஒரு விதிமுறை இருக்கிறது.

 இந்த நியதியின் அடிப்படையில்,  என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள,  வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை என்.ஆர். (இ) கணக்கு தொடங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இதற்கு பாரத ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற்றிட வேண்டும்.

 இதற்காக ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம் செய்யும் போது, கீழ்க்கண்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.

1. தற்போதுள்ள என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள பணம் எப்படி வந்தது?

2. என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள தற்போதைய இருப்புத்தொகை மற்றும் அனைத்துப் பற்று,  வரவு தொகைகளுக்கான முழு விவரம்,  அவற்றின் பின்னணி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

3. சம்பந்தப்பட்ட கணக்கில் உள்ள பணத்துக்கு வருமானவரி கட்ட வேண்டியிருந்தால்,  அந்த வரி செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கான வருமானவரிச சான்றிதழ் அனுப்ப வேண்டும்.
 
ஒருவருடைய என்.ஆர்.இ கணக்கில் இருந்து வேறு ஒருவருடைய என்.ஆர்.இ கணக்கிற்கு தொகையை மாற்ற முடியுமா?
 
ஒரே வங்கியில் உள்ள ஒருவருடைய என்.ஆர்.இ கணக்கில் இருந்து வேறு ஒருவருடைய என்.ஆர்.இ கணக்குக்கு தொகையை சம்பந்தப்பட்டவரின் வேண்டுகோளின்படி வங்கி மாற்றலாம்.

 இரண்டு வெவ்வேறு வங்கிகளில் இந்த இரு கணக்குகளும் இருக்குமேயானாலும் மாற்றலாம். ஆனால் மாற்றப்படும் பணம் ஒரு என்.ஆர்.(இ) கணக்கில் இருந்துதான் மாற்றப்படுகிறது என்று பணத்தை மாற்றும் வங்கி அடுத்த வங்கிக்கு சான்றிதழ் அனுப்ப வேண்டும்.

 என்.ஆர்.(இ) கணக்குகளில் எந்தெந்த வகை பற்று,  வரவுகள் அனுமதிக்கப்படுகின்றன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
********************************************************************************************************************************************
ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்தியா வருகிறார். அவர் ஒரு வங்கிக்கணக்கை இந்தியாவில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். இது முடியுமா? முடியும். எப்படி என்று பார்ப்போம்.

 அவருக்கு வெளிநாட்டில் இருந்து அன்னியச் செலாவணி வருகிறது. அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் போதே அன்னியச் செலாவணியை கையோடு கொண்டு வந்துள்ளார். அதனை விற்று பணமாக்குகிறார்.

 இவ்விதமாகப் பெற்ற பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில்,  ஒரு வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு அல்லது ஒரு நடப்புக் கணக்கு தொடங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

 சுற்றுலாப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது தன் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அன்னியச் செலாவணியாக மாற்றி அந்தத் தொகையை எடுத்துச் செல்லலாம்.

 இந்த மாதிரிக் கணக்கை 6 மாதங்களுக்கு மேல் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. இந்தக் கணக்கில் உள்ளூர் பணத்தை வரவு வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், அந்தக் கணக்கில் இருக்கும் வைப்புத் தொகைக்கான வட்டியை வரவு வைக்கலாம்.

என்.ஆர்.ஓ கணக்கில் தற்காலிக ஓவர் டிராஃப்ட் வசதி உண்டா?

என்.ஆர்.ஐ.கள் அவர்களுடைய என்.ஆர்.ஓ கணக்குகளில் வங்கி தற்காலிக ஓவர் டிராஃப்ட் அளிப்பதற்கு தடை ஏதும் இல்லை. வங்கிகள் தங்கள் வழக்கமான வணிக ரீதியிலான முறையில் இந்த வசதியை வழங்கலாம். அதற்கான விதிமுறைகள்,  வட்டி வீதம் ஆகியவற்றையும் வங்கிகள் எப்போதும்போல் கடைப்பிடிக்கலாம்.

 என்.ஆர்.ஓ திட்டத்தின் கீழ் உள்ள பிக்ஸட் டெபாசிட்டுகளின் பேரில் கடன் அளிப்பதற்கும் தடை இல்லை.

ஒரே ஒரு நிபந்தனை. கடன் தொகையை தங்கள் சொந்த உபயோகத்துக்கோ அல்லது வியாபாரத் தேவைக்காகவோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயம்/ தோட்டப்பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

 என்.ஆர்.ஓ கணக்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவே என்கிறீர்களா? ஆம். ஆனால் ஓரிரு இடையூறுகளும் உள்ளன. அவை;

1. என்.ஆர்.ஓ கணக்குகளில் வழங்கப்படும் வட்டிக்கு வருமானவரி உண்டு.

2. அதே போல் என்.ஆர்.ஓ கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது.

இந்த இடையூறுகள் இல்லாத கணக்கு வேண்டும் என்றால்,  அது என்.ஆர்.(இ) கணக்குகள்தான்.

என்.ஆர்.(இ) (எக்ஸ்டெர்னல்) கணக்கு:

இந்தக் கணக்கில் பல நன்மைகள் உள்ளன.

1. என்.ஆர்.(இ) கணக்குகள் மற்றும் டெபாசிட்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வருமானவரி விலக்கு தரப்படுகிறது.

 
2. இதில் உள்ள பணத்துக்கு சொத்துவரி (வெல்த் வரி) கிடையாது.
 
3. என்.ஆர்.(இ) கணக்கு/ டெபாசிட் பணத்தை வெளிநாடு அனுப்பலாம். அதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி தேவையில்லை.
 
4. என்.ஆர்.(இ) கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து யு.டி.ஐ/ உள்நாட்டு மியூச்சுவல் பண்ட்/ பங்குச்சந்தை/ அசையாச் சொத்து/ மத்திய,  மாநில அரசுப் பத்திரங்கள்/ தேசிய திட்டங்கள்/ சான்றிதழ்கள் போன்ற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

5. என்.ஆர்.ஐ.களுக்கு துரித சேவை வழங்குவதற்காக,  சிறப்புக் காசோலைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.

என்.ஆர்.(இ) கணக்கு தொடங்குவது எப்படி?

இந்தக் கணக்கு தொடங்குவது மிகவும் எளிது. பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் என்.ஆர்.ஐ.கள் மட்டும்தான் இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்.

 கணக்குகளை என்.ஆர்.ஐ.கள் நேரடியாக வங்கிக்குப் போய்தான் தொடங்க முடியும். பவர் ஆப் அட்டார்னி கொடுத்து வேறு ஒருவரால் இந்தக் கணக்கை தொடங்க முடியாது. ஆனால்,  கணக்கு தொடங்கப்பட்ட பிறகு பவர் ஆப் அட்டர்னி பெற்றவர் கணக்கில் பணம் செலுத்தலாம். அல்லது கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

கூட்டுக்கணக்கு:
இரண்டு என்.ஆர்.ஐ.கள் கூட்டாக என்.ஆர்.(இ) கணக்கு தொடங்கலாம். ஆனால் ஒரு என்.ஆர்.ஐ மற்றும் ஒரு உள்நாட்டில் வசிப்பவர் சேர்ந்து கூட்டாக என்.ஆர்.(இ) கணக்கை கூட்டாக தொடங்க முடியாது.
வட்டி வீதம்:

என்.ஆர்.(இ) சேவிங்ஸ் கணக்குகளில் வட்டி எவ்வளவு என்பதை ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவிக்கும்.

 ஆனால், டெர்ம் டெபாசிட்டுகளில் (என்.ஆர்.(இ) திட்டத்தின் கீழ்) வங்கிகள் தங்கள் முடிவின்படி வட்டி வீதத்தை நிர்ணயிக்கலாம். டெபாசிட் முதிர்வு கால அடிப்படையில் குறைந்த பட்சம் மூன்று வித வட்டி விகிதங்கள் இருக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படக்கூடும். டேர்ம் டெபாசிட்டுகள் குறைந்த பட்சம் 6 மாதங்களில் முதிர்வடையலாம். அதிக பட்சமாக 3 ஆண்டுகளில் முதிர்வடையலாம்.
********************************************************************************************************************************************
என்.ஆர்.ஓ கணக்கில் இருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வசதி அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை சாதாரணமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. ஆனால் சில சூழ்நிலைகளில் பாரத ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அனுப்பலாம். உதாரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த பணம் என்.ஆர்.ஓ கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால் அந்தப்பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பாரத ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும். அப்படி அனுமதி பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்கையில் கீழ்க்காணும் விவரங்களைத் தவறாமல் அளிக்க வேண்டும்.
 
1. கணக்கில் உள்ள இருப்புத்தொகை எங்கிருந்து வந்தது? எந்த வழிமுறையில் வந்தது?
 
2. என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள அனைத்து பற்று,  வரவுகள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அவற்றின் பின்னணி
 
3. என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள தொகை தொடர்பாக வருமானவரி பாக்கி ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து வருமானவரி அதிகாரியின் சான்றிதழ்.
 
விண்ணப்பத்தின் பேரில் பாரத ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கினால் மட்டுமே வங்கி பணத்தை வெளிநாடு அனுப்புவதற்கு அனுமதி கிடைக்கும்..
 
இது தவிர, ஒரு நிதி ஆண்டில் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாடு அனுப்பலாம் என்ற பொதுவான திட்டத்தின் கீழ் ஒரு என்.ஆர்.ஐ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது என்.ஆர்.ஓ கணக்கில் உள்ள இருப்புத்தொகையை மேற்கூறிய அளவு வரை அனுப்பலாம்.
 
அதேபோல் மேலே கூறிய திட்டத்தில் கீழ்க்கண்ட முறையில் கிடைத்த பணத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.
 
1. என்.ஆர்.ஐ.யின்/ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் அசையாச் சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த பணம்.
 
2. என்.ஆர்.ஐ.க்கு/ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு,  அவரது மூதாதையர்களிடம் இருந்து வாரிசு அடிப்படையில் கிடைத்த சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த பணம்.
 
மத்திய நேர்முக வரிவிதிப்பு வாரியத்தின் (சி.பி.டி.டி) சுற்றறிக்கை எண் 10/2002 தேதி 9/10/2002ல் குறிப்பிட்டுள்ள மாதிரிப் படிவத்தின்படி ஒரு சார்டர்டு அக்கவுண்டென்ட் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அந்தச் சான்றிதழ் பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும்.
 
அதேபோல் ஒரு என்.ஆர்.ஐ.க்கு அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அவர்கள் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் அளித்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் கிடைத்த சொத்துக்களை விற்றதன் வாயிலாக கிடைத்த பணத்தையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒரு நிதியாண்டில் வெளிநாடு அனுப்பலாம் என்ற பொதுவான திட்டத்தின் கீழ் அனுப்பலாம்.
 
செட்டில்மெண்ட் பத்திரத்தின் ஒரிஜினலையும், அது தொடர்பான மேலே குறிப்பிட்டது போன்ற சார்ட்டர்டு அக்கவுண்டன்ட சான்றிதழையும் பாரத ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 
இவை தவிர, ஒரு என்.ஆர்.ஐ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், தான் உள்நாட்டில் வாழ்ந்த காலத்தில் வாங்கிய அசையாச் சொத்துக்களையோ அல்லது அவர் என்.ஆர்.ஐ ஆன பிறகு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில் இருந்து வாங்கிய அசையாச் சொத்துக்களை விற்ற பணத்தையோ மேற்கூறிய சிறப்புத் திட்டத்தின் கீழ் வெளிநாடு அனுப்பலாம்.
********************************************************************************************************************************************
 இந்த கணக்குகளில் எந்தப் பணத்தை வரவு வைக்க முடியும்;  எந்தப் பணத்தை பற்று வைக்க முடியும் (வெளியே எடுப்பது) ஆகியவை குறித்த விபரங்களை இங்கே பார்ப்போம்.

வரவு வைக்கக் கூடிய தொகைகள்:

1. வங்கிகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கரன்சியில் வந்த தொகை...

2. என்.ஆர்.ஓ கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ,  அவர் இந்தியாவுக்கு தற்காலிகமாக வரும்போது அங்கீகரிக்கப்பட்ட கரன்சியில் உள்ள பணத்தை இந்தக் கணக்கில் வரவு வைக்கலாம். அன்னியச் செலாவணி 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது அந்த அளவு ரொக்கமாக இருந்தாலோ, கரன்சி டிக்ளரேஷன் படிவத்தை பூர்த்தி செய்து தொகையுடன் கொடுக்க வேண்டும். தொகை ரூபாயில் இருந்தால் (வெளிநாட்டில் இருந்து, கொண்டு வந்ததாக இருந்தால்) என்கேஷ்மென்ட் சான்றிதழ் அத்துடன் கொடுக்கப்பட வேண்டும்.

3. அன்னிய வங்கிகளில் உள்ள (நான் ரெசிடென்ட் வங்கி) ரூபாய் கணக்கில் இருந்து அனுப்பப்பட்ட தொகையை இந்தக் கணக்கில் வரவு வைக்கலாம்.

4. என்.ஆர்.ஓ கணக்குதாரர்களுக்கு சட்டப்படி கிடைத்த பணத்தை இதில் வரவு வைக்கலாம். உதாரணமாக வாடகைப் பணம்,  ஈவுத்தொகை (டிவிடெண்ட்),  ஓய்வூதியம்,  வட்டி ஆகியவை.
 இதைத்தவிர தன்னுடைய அசையாச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் இதில் வரவு வைக்கலாம்.

 அந்த அசையாச் சொத்து ரூபாயாக கொடுத்து வாங்கியதாகவோ,  அன்னியச் செலாவணியில் கொடுத்து வாங்கியதாகவோ அல்லது மூதாதையர்களிடம் இருந்து வாரிசு அடிப்படையில் கிடைத்ததாகவும் இருக்கலாம்.
 
சரி. .. அடுத்து எந்தெந்த காரணங்களுக்காக இந்த கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
1. உள்நாட்டில் முதலீடு செய்வதற்காக எடுக்கலாம். (ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்)

2. வாடகைப்பணம்,  ஈவுத்தொகை,  ஓய்வூதியம்,  வட்டி ஆகிய நிகழ்கால வருவாய் ஆக இருக்குமானால் அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக எடுக்கலாம். ஆனால், அந்த வருமானத்திற்கான வருமான வரியை செலுத்தி விட்டு மீதிப்பணத்தை மட்டுமே எடுத்து அனுப்பலாம்.

3. ஒரு நிதியாண்டில்,  10லட்சம் அமெரிக்க டாலர் வரை இந்தக் கணக்கில் இருந்து வெளியே எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாம். இந்தத் தொகை நியாயமான (போனாஃபைடு) காரணத்துக்காகவே அனுப்பப்படுகிறது என்று சம்பந்தப்பட்ட வங்கி கருத வேண்டும்.

 உரிய வரிகளை செலுத்தி விட்டு மீதப்பணம் அனுப்பப்படும்போது,  அனுப்புபவரின் எழுத்து மூலமான உறுதிமொழிப் பத்திரத்தையும் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டின் சான்றிதழையும் உரிய படிவத்தில் வங்கிக்கு அளிக்க வேண்டும்.
பவர் ஆஃப் அட்டர்னி மூலம்...

என்.ஆர்.ஐ ஒரு உள்நாட்டு நபருக்குக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி மூலம் அவரது என்.ஆர்.ஓ கணக்கில் பணத்தைப் போடலாம். அதேபோல் பணத்தை அந்தக் கணக்கில் இருந்து எடுக்கலாம். அப்படிப் பணத்தைப் போடுவதும்,  எடுப்பதும் மேற்கூறிய விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான உச்சவரம்பு,  ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படுகிறது.

 உள்நாட்டில் வாழும் இந்தியர்களது வங்கிக் கணக்குகள்,  அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாகும் பட்சத்தில் (நேபாள்,  பூட்டான் தவிர)  சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் என்.ஆர்.ஓ கணக்குகளாகவே கருதப்படும்.

 அதேபோல்,  என்.ஆர்.ஓ கணக்குகள் அந்தக் கணக்குதாரர்கள் உள்நாட்டுக்கு நிரந்தரமாக திரும்பியவுடன் அவை உள்நாட்டு கணக்காகவே கருதப்படும்.
********************************************************************************************************************************************
வெளிநாடு வாழ்வோர்களுக்கான வங்கிக்கணக்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.
 
1. வெளிநாடுகளுக்குப் பணத்தை எடுத்துச் செல்லக் கூடியவையா என்ற அடிப்படையில்...

2. எந்த கரன்சியில் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில்...
 
வெளிநாடுகளுக்கு பணத்தை எடுத்துச் செல்லக்கூடியவையா என்பதை பொறுத்த மட்டில் கணக்குகள் இருவகைப்படும்.
 
1. வெளிநாடுகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத என்.ஆர்.ஓ கணக்குகள்

2. வெளிநாடுகளுக்கு பணத்தை எடுத்துச் செல்லக்கூடிய என்.ஆர்.இ கணக்குகள்.
 
எந்த கரன்சியில் கணக்குகளை வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பொறுத்தமட்டில்,  என்.ஆர்.ஐ.கள் தங்கள் வங்கிக் கணக்குகளை ரூபாயாக அல்லது சில அனுமதிக்கப்பட்ட அன்னிய கரன்சியிலோ வைத்துக் கொள்ளலாம்.

 இந்தியாவில் மூன்று வகை என்.ஆர்.ஐ கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. அவை:
 
1. ரூபாயில் வைத்துக்கொள்ளப்படும் என்.ஆர்.ஓ கணக்குகள்
2. ரூபாயில் வைத்துக்கொள்ளப்படும் என்.ஆர்.இ கணக்குகள்
3. எஃப்.சி.என்.ஆர். (வங்கித்திட்டம்) கணக்குகள்
4. எஸ். குரோ கணக்கு மற்றும் சிறப்பு கணக்குகள்
 
 என்.ஆர். (சிறப்பு) ரூபாய் கணக்கு (என்.ஆர்.எஸ்.ஆர்) மற்றும் என்.ஆர் வெளிநாடு எடுத்துச் செல்ல முடியாத ரூபாய் கணக்கு (என்.ஆர்.என்.ஆர்) ஆகிய இரண்டு கணக்குகளும் 1/4/2002 முதல் நிறுத்தப்பட்டு விட்டன.
 
என்.ஆர்.ஓ
 
வெளிநாடு இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் என்.ஆர்.ஓ கணக்குகளை தொடங்கலாம்.
 
எஃப்.இ.எம்.ஏ 1990 சட்டவிதிகளின்படி அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கொடுக்கல்- வாங்கல் செயல்பாடுகளுக்கு ஏதுவாக என்.ஆர்.ஓ கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
என்.ஆர்.ஓ கணக்குகளைத் தொடங்குவது எப்படி?
 
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் என்.ஆர்.ஐ அந்தஸ்தைப் பெற்ற மாத்திரத்தில்,  இந்தியாவில் உள்ள அவர்களுடைய சாதாரண வங்கி சேமிப்புக் கணக்குகள் என்.ஆர்.ஓ கணக்குகளாக மாற்றப்படும்.
 
அது தவிர கீழ்க்காணும் முறையிலும் என்.ஆர்.ஓ கணக்குகளைத் தொடங்கலாம்.
 
1. வங்கிகளின் வாயிலாக இந்தியாவுக்கு வந்த அன்னியச் செலாவணித் தொகையைக் கொண்டு என்.ஆர்.ஓ கணக்குகளைத் தொடங்கலாம்.

2. இந்தியாவுக்கு வருகை புரியும் என்.ஆர்.ஐ. தான் கையில் கொண்டுவந்துள்ள எந்த அனுமதிக்கப்பட்ட கரன்சி மூலமாகவும் என்.ஆர்.ஓ கணக்குகளைத் தொடங்கலாம்.

3. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒரு என்.ஆர்.ஐ கணக்கில் இருந்து  பணத்தை மாற்றம் செய்து புதிய என்.ஆர்.ஐ கணக்குகளைத் தொடங்கலாம்.
 
இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்களிலும் என்.ஆர்.ஐ.களின் சாதாரண சேவிங்ஸ் கணக்குகளைத் தொடங்கி அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அந்த சேவிங்ஸ் கணக்குகளை வங்கிகளில் எப்படி என்.ஆர்.ஓ கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றனவோ அதே முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
வட்டி விகிதம்:
 
வங்கிகளில் உள்நாட்டு இந்தியர்களுக்கு என்ன வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ அதே வட்டி விகிதம்தான் என்.ஆர்.ஓ கணக்குகளுக்கு வழங்கப்படுகிறது.
 
கூட்டுக்கணக்கு (ஜாயின்ட் அக்கவுண்ட்):
 
வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்நாட்டில் வாழும் இந்தியர்களுடன் சேர்ந்து கூட்டுக்கணக்கு முறையிலும் என்.ஆர்.ஓ கணக்குகளை வைத்துக் கொள்ளலாம்.
 
திருத்தம்:
 
சென்ற அத்தியாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவணி டீலர்களின் பட்டியல் தரப்பட்டது. அந்தப்பட்டியலில் ஏ.என்.இசட் கிரின்ட்லேஸ் பேங்க் லிட் என்னும் வங்கி தவறுதலாக இடம் பெற்று விட்டது. இந்த வங்கி ஏற்கனவே ஸ்டேண்டர்டு சார்ட்டர்டு வங்கியுடன் இணைந்து விட்டது. மேற்படி தவறை சுட்டிக்காட்டிய நேயர்களுக்கு எமது நன்றி.
********************************************************************************************************************************************
என்.ஆர்.ஐ.களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் (பி.ஐ.ஓ) மூன்று வகை வங்கிக் கணக்குகளை இந்தியாவில் வைத்துக் கொள்ளலாம் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இது போன்ற கணக்குகள் வைத்துக் கொள்வது முதலீடு நோக்கில்தான். ஏனெனில் வேறுபல வசதிகளும் உண்டு என்பதையும் பார்த்தோம்.
 
 என்.ஆர்.ஐ.கள் மட்டுமல்லாமல்,  வெளிநாடுகளில் வாழும் எச்.யூ.எஃப் (பாகப்பிரிவினை செய்து கொள்ளாத குடும்பங்கள்),  வெளிநாடுகளில் இயங்கும் கம்பெனிகள்,  பார்ட்னர்ஷிப் ஃபர்ம்ஸ்,  கம்பெனிகள்,  சொசைட்டிகள்,  அறக்கட்டளைகள் மற்றும் பிற கம்பெனிகள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம். இது அன்னியச் செலாவணி மேலாண்மை (டெபாசிட்) விதிமுறைகள் 2000க்கு உட்பட்டதாகும்.
 
 அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் என்றால் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள்,  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,  ஷெட்யூல்டு வங்கிகள்,  சில அன்னிய வங்கிகள்,  தனியார் வங்கிகள் ஆகியவைதான் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள். அத்தகைய 96 வங்கிகளைக் கொண்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவைதான் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள். எனினும் குறிப்பிட்ட சில கூட்டுறவு வங்கிகளும் என்.ஆர்.ஐ கணக்குகளை வைத்துக் கொள்வதற்கு பாரத ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அது போன்ற கூட்டுறவு வங்கிகள் இந்தக் கணக்குகளை வைத்துக் கொள்ள விரும்பினால்,  அதற்குத் தேவையான உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
 அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவணி டீலர்களின் பட்டியல்:
 
1. ஏ.பி.என் ஆம்ரோ பேங்க்
2.அபுதாபி கமர்சியல் பாங்க் லிட்
3. அலகாபாத் பாங்க்
4. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்க்
5. ஆந்திரா பாங்க்
6. ஏ.என்.இசட் கிரின்ட்லேஸ் பேங்க் லிட்
7. ஆன்ட்வெர்ப் டயமண்ட் பாங்க்
8. அரப் பங்களாதேஷ் பாங்க்
9. பாங்க் இன்டர்நேஷனல் இந்தோனேஷியா
10. பாங்க் ஆப் அமெரிக்கா நேஷனல் டிரஸ்ட் அண்ட் சேவிங்ஸ் அசோசியேசன்.
11. பாங்க் ஆப் பஹ்ரைன் அண்ட் குவைத்
12. பாங்க் ஆப் பரோடா
13. பாங்க் ஆப் சிலோன்
14. பாங்க் ஆப் இந்தியா
15. பாங்க் ஆப் மகராஷ்டிரா
16. பாங்க் ஆப் நோவா ஸ்கோட்டியா
17. பாங்க் ஆப் ராஜஸ்தான் லிட்
18. பாங்க் ஆப் டோக்கியோ மிட்சுபிஷி லிட்
19. பி.என்.பி. பரிபாஸ்
20. பர்க்லேஸ் பாங்க்
21. பாம்பே மெர்க்கன்டைல் கோ-ஆபரேட்டிவ் பேங்க் லிட்
22. கால்யோன் பாங்க்
23. கனரா பாங்க்
24. கத்தோலிக் சிரியன் பாங்க்
25. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
26. சைனா டிரஸ்ட் கமர்சியல் பாங்க்
27. சோ ஹங் பேங்க்
28. சிட்டி பாங்க்
29. சிட்டி யூனியன் பாங்க் லிட்
30. காமர்ஸ் பாங்க்
31. கார்ப்பரேஷன் பாங்க்
32. கிரெடிட் அக்ரிகோல் இன்டோசூயஸ்
33. கிரெடிட் லின்னோய்ஸ்
34. தேனா பாங்க்
35. டச்சு பாங்க்
36. தி டெவலப்மெண்ட் பாங்க் ஆப் சிங்கப்பூர் லிட்
37. டெலவப்மெண்ட் கிரெடிட் பாங்க் லிட்
38. தனலட்சுமி பேங்க் லிட்
39. ட்ரெஸ்ட்னெர் பாங்க்
40. பெடரல் பாங்க் லிட்
41. எச்.எப்.டி.சி பாங்க் லிட்
42. ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங்கிங் கார்ப்பரேஷன் லிட்
43. ஐ.சி.ஐ.சி.ஐ பாங்க் லிட்
44. ஐ.டி.பி.ஐ பாங்க் லிட்
45. இந்தியன் பாங்க்
46. இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
47. இந்தஸ்இந்த் பாங்க் லிட்
48. இன்டர்நேஷனல் நெதர்லேந்தன் பாங்க் (ஐ.என்.ஜி பாங்க்)
49. ஜே.பி.மார்கன் சேஸ் பாங்க்
50. ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் லிட்
51. கே.பி.சி பாங்க்
52. கர்நாடகா பாங்க்
53. கரூர் வைஸ்யா பாங்க் லிட்
54. கோட்டக் மகிந்திரா பாங்க்
55. க்ரங்க் தாய் பாங்க் பப்ளிக் கம்பெனி லிட்
56. லக்ஷ்மி விலாஸ் பாங்க் லிட்
57. லார்டு கிருஷ்ணா பாங்க்
58. மகராஷ்டிரா ஸ்டேட் கோ-ஆபரேட்டிவ் பாங்க் லிட்
59. மாஷ்ரெக் பாங்க்
60. மிஷுஹோ கார்ப்பரேட் பாங்க் லிட்
61. நெடுங்காடி பாங்க்
62. ஓமன் இன்டர்நேஷனல் பாங்க்
63. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
64. பஞ்சாப் நேஷனல் பாங்க்
65. பஞ்சாப் அண்ட் சிந்த் பாங்க்
66. சாங்லி பாங்க் லிட்
67. சரஸ்வத் கோ-ஆபரேட்டிவ் பாங்க் லிட்
68. எஸ்.பி.ஐ கமர்ஷியல் அண்ட் இன்டர்நேஷனல் பாங்க் லிட்
69. தி சியாம் கமர்ஷியல் பாங்க் லிட்
70. சொஷைட்டி ஜெனரல்
71. சோனாலி பாங்க்
72. சௌத் இந்தியன் பாங்க்
73. ஸ்டேண்டர்டு சார்ட்டர்ட் லிட்
74. ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர்
75. ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்
76. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
77. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தோர்
78. ஸ்டேட் பாங்க் ஆப் மொரீஷியஸ் லிட்
79. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்
80. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா
81. ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா
82. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
83. தி சுமிட்டோமோ பாங்க் லிட்
84. சிண்டிகேட் பாங்க்
85. தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் லிட்
86. தாமஸ் குக் (இந்தியா) லிட்
87. தி டோரோன்டோ டொமினியன் பாங்க்
88. யூகோ பாங்க்
89. யு.எப்.ஜே பாங்க் லிட்
90. யூனியன் பாங்க் ஆப் இந்தியா
91. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
92. யுனைடெட் வெஸ்டெர்ன் பாங்க் லிட்
93. ஆக்சிஸ் பாங்க் லிட்
94. விஜயா பாங்க்
95. ஐ.என்.ஜி வைஸ்யா பாங்க் லிட்
96. யெஸ் பாங்க் லிட்
********************************************************************************************************************************************
 உள்நாடு வாழ் இந்தியர்களிடையே நிகழும் கொடுக்கல் வாங்கல் அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999ன் கீழ் வராது. ஒரு இந்தியர் மற்றொரு இந்தியரிடம் இருந்து கடன் வாங்குகிறார். இதற்கு ஒரு என்.ஆர்.ஐ கேரண்டி தருகிறார் என வைத்துக் கொள்வோம். கடன் வாங்கியவர் கடனை உரிய நேரத்தில் திரும்பச் செலுத்த தவறுகிறார். கேரண்டி கொடுத்த என்.ஆர்.ஐ கடன் தொகையை திரும்பச் செலுத்த வேண்டியது வரும். அப்போது இந்தியாவில் என்.ஆர்.ஐ.க்கு இருக்கக் கூடிய ரூபாய் கணக்கில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்து அன்னியச் செலாவணி அனுப்பியோ அல்லது என்.ஆர்.இ/ எஃப்.சி.என்.ஆர் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தோ கடனை அடைக்க வேண்டும்.
 
 பிறகு,  கடன் வாங்கியவரிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் உரிமையை என்.ஆர்.ஐ நிலைநாட்ட முன்வரலாம். பணம் வசூல் செய்த பிறகு,  அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். இது எப்போது சாத்தியம் என்றால்,  கடன் தொகையை கேரண்டர் என்ற முறையில் என்.ஆர்.(இ) எஃப்.சி.என்.ஆர் கணக்கில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியோ கடனை அடைத்திருந்தால் அது சாத்தியம்.
 
 ஒரு வேளை,  ரூபாய் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கடனை அடைத்திருந்தால் கடன் பெற்றவரிடம் இருந்து வசூல் செய்த பணத்தை என்.ஆர்.(ஓ) கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
 
 ஒரு உள்நாடு வாழ் இந்தியர் தான் பெற்ற கடன் தொடர்பாக கேரண்டி அளித்த வெளிநாடு வாழ் இந்தியருக்கு பணம் செலுத்த நேரிட்டால்,  அதற்கு பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. ஏனெனில், அதற்கான அனுமதியை பொதுவாக அனைவருக்கும் பாரத ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
 
 கடன் பெற்றவர் பணத்தை அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட என்.ஆர்.ஐ.யின் எஃப்.சி.என்.ஆர்/ என்.ஆர்.(இ)/ என்.ஆர்.(ஓ) கணக்கில் பணத்தை செலுத்தலாம்.
 
கடன்பெற்ற இந்தியர் பிற்காலத்தில் என்.ஆர்.ஐ.யானால்...
 ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருக்கு கடன் வழங்குகிறார். கடன் கொடுத்தவர் பிறகு என்.ஆர்.ஐ. ஆகிறார். அப்போது நிலைமை என்ன ஆகும்?
 கடன் பெற்றவர் என்.ஆர்.ஐ.க்கு இந்தியாவில் இருக்கக்கூடிய என்.ஆர்.ஓ. கணக்கில் கடன் தொகையை செலுத்திட வேண்டும்.
********************************************************************************************************************************************
உள்நாடு வாழ் இந்தியர்கள்,  என்.ஆர்.ஐ.களிடம் இருந்து கடன் பெறலாம். தனி நபர்களாகத்தான் இந்தக் கடனைப் பெற முடியும். இந்தியக் கம்பெனிகள் இந்த வகைக் கடன் பெற இயலாது. அதேபோல், இந்தக்கடனை திரும்பப் பெறும் என்.ஆர்.ஐ அந்தத் தொகையை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
 
இதற்கென சில எளிய நிபந்தனைகள் உள்ளன. அவை:
1. வங்கிகள் வாயிலாக,   விதிமுறைகளின்படி வெளிநாடுகளில் இருந்து அன்னியச் செலாவணியாக வந்த பணத்தில் இருந்து மட்டுமே இந்த வகை கடன்களை வழங்கலாம். அல்லது, சம்பந்தப்பட்ட என்.ஆர்.ஐ இந்தியாவில் வைத்திருக்கும் என்.ஆர்.(இ)/  எஃப்.சி.என்.ஆர்/  என்.ஆர்.(ஓ) கணக்கில் இருந்தும் வழங்கலாம்.

2. வட்டி வீதம்,  கடன் வழங்கும் நாளில் பேங்க்ரேட்- ஐ விட இரண்டு சதவீதத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (பேங்க்ரேட் என்பது பாரத ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி வீதம் ஆகும்)

3. இந்தக் கடன் மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.

4. இந்தக் கடனுக்கான வட்டி மற்றும் கடன் தொகையை திரும்பச் செலுத்துகையில் என்.ஆர்.ஓ கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும். ஒரு வேளை என்.ஆர்.என்.ஆர் கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்ட கடனாக இருக்குமேயானால் அந்தக் கணக்கில்தான் வட்டி மற்றும் கடன் தொகையை திரும்பச் செலுத்திட வேண்டும்.

5. கடன் தொகை திரும்பச் செலுத்தப்படும்போது அந்தத் தொகையை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
6. இந்தக் கடனைப் பெறுபவர் அந்தப் பணத்தை தன் சொந்த வியாபாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த வியாபாரம்

கீழ்க்கண்ட வகையைச் சேர்ந்ததாக இருத்தல் கூடாது.

1. சிட் ஃபண்டு

2. நிதிக்கம்பெனி (620 கி பிரிவு)

3. விவசாயம்,  தோட்டப்பயிர் தொடர்பான தொழில், ரியல் எஸ்டேட்,  பண்ணை வீடு கட்டுதல்

4. டிரான்ஸ்பரபிள் டெவலப்மெண்ட் உரிமைகள் (டி.டி.ஆர்) வர்த்தகம்
 மேலே குறிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் என்பது டவுன்ஷிப் உருவாக்கம்,  குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதையோ அல்லது சாலைகள் அமைத்தல்,  பாலங்கள் கட்டுதல் ஆகியவற்றையோ குறிக்காது. கடன் தொகையை மூலதன முதலீடு செய்வதற்கு அனுமதியில்லை. அதே போல் ஒரு கம்பெனியிலோ, கூட்டு வியாபாரத்திலோ,  தனிநபர் உரிமை வியாபாரத்திலோ (பொரொப்ரைட்டர்) அல்லது பதிவு செய்யப்பட்ட,  பதிவு செய்யப்படாத வியாபாரத்திலோ முதலீடு செய்ய அனுமதியில்லை.
 மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கு அப்பால் கடன் பெற வேண்டுமெனில்,  பாரத ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை. அதைப் பெற்றிட விண்ணப்பம் செய்ய வேண்டும். கடன் வழங்குபவரின் பெயர், முகவரி,  கடன் தொகை,  வட்டி வீதம்,  கடனுக்கான காரணம்,  திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம், எத்தனை தவணைகளில் திரும்பச் செலுத்தப்படும் என்பன போன்ற தகவல்களையும் விண்ணப்பத்துடன் பாரத ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிட வேண்டும்.
********************************************************************************************************************************************




     RSS of this page