Home / Sujatha Tributes

Sujatha Tributes


அப்போலோ தினங்கள்!
சுஜாதாவின் சீடரும் நண்பருமாகிய தேசிகன் 

'அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது.

அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார்.

'எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!'

'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார்.

சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார்.

'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!'

கண்களைக் கொஞ்ச நேரம் மூடிக் கொண்டார். நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார். அருகிலுள்ள பிரின்டர், ஃபான்ட் பிரச்னையினால் பூச்சி பூச்சியாக எதையோ அடித்துத் தள்ளியிருந்தது.

ஆம்புலன்ஸில், 'ஏ.ஸி சரியா இல்லியே' என்றார். ஃபேனைத் தட்டிவிட்டு, அவர் பக்கம் திருப்பினேன். 'எனக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லை, டிரைவரிடம் மெதுவாவே போகச் சொல்லுப்பா.'

ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டுக் கிளம்பினேன். 27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.

சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.

ஆனால், நான் மருத்துவமனை போன சமயம், அவர் உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... பெருமாளே, இதெல்லாம் அவருக்குத் தெரியக் கூடாது என்று ரெங்கநாதரை வேண்டிக்கொண்டேன்.

'சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது' என்று அவர் தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுதியிருந்தார்.

சென்ற ஜூன் மாதம் அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஸ்ரீசூர்ணம் கேட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைச் சேவித்த பின், அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 'எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!' என்றார் நெகிழ்வுடன். கோயிலில் ஏனோ சில இடங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொண்டார். அதைக் 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்தார்.

ஸ்ரீரங்கம் பயணம் முடிந்த பின், 'இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?' என்றார். 'சிவாஜி படத்தின் பிரிவ்யூக்கு ஒரு டிக்கெட்' என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு.

பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.

'ஏம்பா, உன் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிருக்க, ஸ்கூல்ல கேலி பண்ண மாட்டாங்களா?'

'சார், மரகதவள்ளின்னே பேர் இருக்கும்போது...'

'மரகதவள்ளி நாளையே சுருக்கி மேகி ஆயிடுமே' என்றார் தனக்கே உரிய நகைச்சுவையுடன்.

சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.

'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' தொகுப்புக்கு நான் கோட்டோவியங்கள் வரைய ஆசைப்பட்டபோது, அவரிடம் என்னென்ன வரைய வேண்டும் என்று கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்து, ரங்கு கடை எங்கே இருக்கும், அவர் வீடு, கோபுரங்கள், தெருக்கள் என்று ஏராளமான இடங்களை மேப் போல போட்டுக் காண்பித்தார். வரைந்து வந்து காண்பித்தபோது, மிகவும் ரசித்தார். அவரும் ஓர் ஓவியர்தான் என்பது பலருக்குத் தெரியாது. அவர் வரைந்த வாட்டர் கலர் படங்கள் முன்பு அவர் வீட்டில் மாட்டியிருக்கும். அதே போல், கணையாழியின் கடைசிப் பக்கத்திலும் சில சின்னச் சின்ன படங்கள் வரைந்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் பயோகிராஃபியை எழுத வேண்டும் என்று கேட்டேன். 'உண்மையைச் சொல்ல வேண்டி வரும்; கூடவேபிரச் னையும் வருமே' என்று யோசித் தார். போன வருடம் மீண்டும் அதே யோசனையைச் சொன்ன போது, 'ஓ, தாராளமா செய்ய லாமே!' என்றார் ஆர்வத்துடன். 'சில பகுதிகளை எழுதிட்டு வர்றேன், பாருங்க' என்றேன். 'நீ எழுதுறாப்ல எழுதாத; நான் எழுதுறாப்ல எழுது' என்று உற்சாகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அவரைப் பேசவைத்து, சில பகுதிகளை ரெக்கார்ட் செய்தேன். பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு எளிமையாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, கண்களில் நீர் வந்தது. அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், கதைகளில் அவர் பயோகிராஃபி சம்பந்தமான பகுதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்...

'எல்லாமே ஒரு குறுக்கெழுத்துச் சதுரம் போல இருக்கிறது, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று வார்த்தைகளுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளைக் கட்டங்களை நிரப்புகிறோம். பல வார்த்தைகள் கிடைத்துவிட்டன. சில வார்த்தைகளுக்கு எழுத்துகள் தான் உள்ளன. சில வார்த்தைகள் காலியாகவே இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அது நிரப்பப்படும்' என்று சுஜாதா எழுதிய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.

அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.

'மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்' என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!

இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?

 

ஓர் உதாரணம்!

ரணம் ஒரு கறுப்பு ஆடு. அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப் பூவைத் தின்றுவிடுகிறது!

என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் சுஜாதா. 1995ம் ஆண்டு கணையாழி, 'தசரா' என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மண்டபத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன் போன்றோர் பங்கேற்க நடைபெற்றது.

சுஜாதா பேசும்போது கணையாழி இதழுக்கு கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் சுகமான சுமையைத் தான் ஏற்றிருப்பதாகவும் இவ்விதழில் தனக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்று வெளிவந்திருப்பதாகவும் கூறி என்னுடைய 'தூர்' கவிதையைப் படித்துக் காட்டினார். அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது.

'முத்துக்குமார் என்ற ஒருவர் எழுதியிருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்றே தெரியாது!' என்று சொல்ல, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த நான் கை தூக்கினேன். 'இதை எழுதிய முத்துக்குமார் நீங்களா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'கை தட்டுங்கள் அந்தக் கவிஞனுக்கு' என்று சுஜாதா சொல்ல, அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் அதிர்ந்தது. அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நபர் மேடைக்குச் சென்று சுஜாதா காதில் ஏதோ சொல்ல... 'இந்தக் கவிதையை எழுதிய முத்துக் குமாருக்கு இவர் ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கிறார். வாங்க முத்துக்குமார், வந்து வாங்கிக்கங்க. உண்மையிலேயே ஆயிரம் ரூபா!' என்று சுஜாதா குழந்தை ஆனார். நான் மேடைக்குச் சென்று பணத்தை வாங்கினேன். இருபது ஐம்பது ரூபாய்த் தாள்கள். அந்தப் பணத்தை நான் எண்ண ஆரம்பித்ததும், அரங்கம் சலசலப்புக்குள்ளானது. நான் அதில் ஐந்நூறு ரூபாயை கணையாழியின் வளர்ச்சிக்கு என்று கொடுத் தேன். அரங்கம் மீண்டும் கை தட்டல்களால் அதிர்ந்தது. ஒரு திரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி போல அமைந்த இச்சம்பவமே ஒற்றையடிப் பாதையில் திரிந்துகொண்டு இருந்த என் கவிதைப் பயணத்தை தண்டவாளப் பாதைக்குத் தடம் மாற்றியது. அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை எனக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்தவர் சுஜாதா.

அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அப்போலோ விரைந்தேன். அவரை நான் எப்போது சந்தித்தாலும், 'உங்களுக்கு நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்பேன். பதிலுக்கு அவர், 'என்னுடைய ஆசிகள்' என்று தலை மேல் கை வைத்து வாழ்த்துவார். இன்று அவர் கைகள் உயர்த்தப்படவே இல்லை. அந்த ஆசிகள் மட்டும் பத்திரமாய் என் நெஞ்சில்!

கவிஞர் நா.முத்துக்குமார்


 

சுஜாதா பற்றி சுஜாதா!

''சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து. 800 மில்லி உடம்புலயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம், சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, 'வர மாட்டேன்'னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், 'ஊம்... ஊம்!'னு மட்டும் சொன்னார். திடீர்னு 'நீ யாரு?'ன்னு கேட்டார். 'ஏன் இப்படிப் பேசுறீங்க... என்ன பண்றது சொல்லுங்கோ!'னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன். வாய் கோணித்து... ஸ்ட்ரோக்குன்னாங்க. கை வரலைன்னதுமே, 'ஐ யம் ட்ராப்டு. எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு!'னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். 'அப்டிலாம் சொல்லாதேள். நான் இருக்கேன்ல... நீங்க சொல்லச் சொல்ல... நான் எழுதித் தர்றேன்'னேன். அவருக்குக் கேட்கலியா, கேட்க விரும்பலையான்னு தெரியலை!

ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பார்த்துண்டேன். அவருக்கே அவருக்குனு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின்னுட்டு வந்துருவார். கேட்டா, 'எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாமச் சாப்புடுறது. இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்பமாக்கிடாது!'னு சிரிப்பார். நல்ல மனுசன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.

சின்ன வயசுல எல்லாம் அவ்வளவா காசு பணம் வரலை. ஆனா, ரிட்டயர் ஆனப்புறம் ரொம்ப ஷேமமாப் பார்த்துக்கிட்டார். என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்னப் பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா. இதைச் சொன்னா, 'அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம். அவாளுக்கெல்லாம் யங் ப்ரைன். உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து இல்லியா'ன்னுவார். அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும். அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாசுக்குப் போறதில்லை. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார். இனி எனக்கு என்ன இருக்கு. ஆனாலும் போகணும். அவர் இருந்தா, அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?'னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?

ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, 'ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..?'ன்னாரு.

தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா 'தேங்க்ஸ்' சொல்வார். 'எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்?'னு கேட்டா, 'உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே!'னு சிரிப்பார்.

ஐயோ! ஐ ஃபீல் கில்ட்டி... நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்! என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச்சிருக்க வேண்டாமா..!

'பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?'னு ஒருத்தர் கேட்டா. ஆமா, அவர் இப்ப 'பாடி' ஆயிட்டாருல்ல... இனி அவர் வெறுமனே 'பாடி' மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..?!''

சுஜாதாவின் இந்தக் கேள்விக்கு அந்த 'சுஜாதா' பதில் சொல்லி இருக்கலாம்!

-கி.கார்த்திகேயன்


Name
Comments
Ramesh
அவர் மறைந்துவிட்டாலும் நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

May his soul rest in peace... Truly a great loss for tamil culture and literature...
krishna
A BIG LOSS FOR TAMIL & SCIENCE WRITTER.
KRISHNAN
He was a versatile writer. He touched all the subjects including historical. His 'Ratham Ore Niram" is one of mater piece in historical novels. His noted contribution to tamil society was to fill up the knowledge gap of tamil people in Science and other field. Those who have conributed for the well being of human race and who have strive hard to improve the quality of human race will be remembered for ever. Sujatha will be remembered for ever.
sathees
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளராக வளைய வந்தவர் சுஜாதா. தமிழ் இலக்கிய உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா, முதல் முதலில் கம்ப்யூட்டர் மூலம் கதை, கவிதைகள் எழுதிய பெருமை சுஜாதாவையே சாரும்.இன்று கம்ப்யூட்டர் இல்லாத படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயமாகி விட்டது. இந்தப் புரட்சிக்கு சுஜாதாதான் முக்கிய முன்னோடி.பாமரரர்களும், அறிவுஜீவிகளும் ஒரே நேரத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியும். அந்த அளவுக்கு தமிழை திறமையாகக் கையாண்டவர் சுஜாதா. சுஜாதாவின் எழுத்தைத் தாங்காத தமிழ் இதழ்களே இல்லை எனலாம்.கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுஜாதாவின் படைப்புகள் அலங்கரித்துள்ளன. காரணம் வசீகரிக்கும் வகையில் அமைந்த அவரது தமிழ்.
gowri
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மறைந்தாலும் அவரின் புதகங்கள் மூலமாக எங்களுடன் என்றும் இருப்பார்
jaya
a great loss to tamil media.my deepest condolences.
PRAKASH
எனக்கு தமிழ் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்திய மிக முக்கியமான எழுத்தாளர் திரு.சுஜதாவின் மறைவு மிகப்பெரிய இழப்பு. ஓருவராலும் ஆவரது எழுத்தை மறக்க முடியாது. அவருக்கு எக்காலமும் அழிவில்லை.
ruk
a diverse character with a quality of mind that speaks with simple language was his real asset. his intellect is unmatched and his works live for him. may all our prayers add strength to the departed soul. my condolences to families, friends and readers missing this legend
gattu
HE THE MASTER WRITER IN SCIENTIFIC FICTIONS.I ENJOYED MUCH AND GOT VERY SOUND UNDERSTANDINGS FROM WRITER SUJATHA.I NEVER FORGET ABT HIM IN MY LIFE.GREAT N GENIUS WRITER.THE WAY OF WRITING IS A KILL..THAT ONE HE GOT..THATS THE IMPORTANT.I VE READ ALOT ABT HIS WRITINGS ABT VAISHNAVAM TOO.NOT ONLY THAT,, HE HAD DONE SO MUCH ABT NALVARS IN SAIVAM.HIS BOLD ANSWERS ARE VERY MUCH INTERESTING.HIS JOKES N HUMOURS ARE HIGHLY THINKABLE MATTERS.
s n
ஈடில்லா ஓர் இழப்பு
sundar
prakash wrote it very well. In short...... a great pisthaa.....simply we do not have a substitute. May it be love or humour or psychology without mentioning his science genius and the knack of presenting it one and all.simply no match. The greatest novelist in Tamil Sujatha is now no more. All good things have to come to an end., philosophically speaking. May his soul rest in peace. Somebody mail me his zodiac sign.
Seenu
Big Loss, Sujatha's unique narration and his style of dialogues are incomparable. Its his novels and writings that influenced me the habbit of reading, and many times i went to movies just because of his dialouges. He is a great inspiration for younger generation.
Kumaran
a genius... will be missed and will be remembered all thru life... Sir, we admire you as a person and your writings...
swaminathan
a greate creater flown to meet the GREAT CREATOR !
Senthilkumaran
விகடனில் வந்த சுஜதாவின் கட்டுரை அனைத்தும் மிக மிக பயனுள்ளவையாக இருந்தன. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மறைந்தாலும் அவரின் புதகங்கள் மூலமாக எங்களுடன் என்றும் இருப்பார்.
baskaran
We lost a great person.iam not taking about his writing only.we missed his scientific articles,which one all kind of people can read and understand very well.the cenima world also miss him very much.and what about ganesh&vasanth.we can forget them till the core.verymuch educated,verymuch genune,a great person.vikadan only used his knowage&excellency and expose him very well i guess..i have all collection of sujstha which came in anantha vikan.i iwish from my heart may his soul reat i peace!
Gunaratnam
பொறியியல் சொன்னவன், பொதுமறை சொன்னவன் இயந்திர கற்கையை கதையில் சொன்னவன் இதிகாச கதைகளை இலகு செய்தவன் இவன் கற்றதால் பெற்றதை இவனை பெற்றதால் கற்றனம் கோள விதிகளை விரிவுரை செய்தவா கால விதியினை விளக்கவா விலகினை
kumar
A great loss to the younger generations specifically those from villages, where they can able to read only popular tamil magazines. Sujatha have done excellent task of writing scientific novels, documents on the popular magazines, that helped a lot .. I'm the one of them benifited from his writings. I miss him very much .. May his soul rest in peace!.
Venkatraman
சுஜாதா ரங்கராஜன் மறைவு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் தமிழ் உள்ளவரை வாழும்.
Ram
He is the major contributor in connecting the high technology with common people. I personally felt the pain when I came to know his death. If I notice anything written by Sujatha in any of the magazines, which is first one that I always read? It's a huge loss to the society and mainly to his family. We don't know how long it'll take to identify another Sujatha. If any of his family members is really skilled like him, then he/she should come forward to fill the vacuum that is created by his death and to console his fans. I pray God for his soul to rest in peace.
Siva
Highly versatile writer. He was able to write on most of the topics in simple Tamil. I used to read his articles from my school days itself. Definitely we will be miss him. May his soul rest in peace.
Somu
A great writer A big loss for the entire tamil world. He introduced a new syle of writing and captivated the minds of millions of tamils all over the world. May his soul rest in peace.
Kam
Excellent Author. I still remember the story Juno is Anandha Vikatan. May his soul rest in peace.
Sundar
சுஜாதா இயைற்கை எய்தினார் என்ற செய்தி மன வேதனை அழித்தது. கல்லூரி வாழ்க்கையிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுகாலத்தில் நான் விரும்பி படித்த பல தமிழ் படைப்புகளில் சுஜாதாவின் படைப்புகள் ஏராளம். கல்லூரி நாட்களில் வகுப்புக்கு இடையே ஓடிச்சென்று விகடன் வாங்கி கரையெல்லலாம் சென்பகப்பூ படித்த நாட்கள் இன்றும் நினைவில். அறிவியலை சாமானியனும் எளிதில் புரிந்துகொள்லும் எளிய நடையில் சொல்லும் திறமை கொண்ட திருவாளர் சுஜாதா இன்று நம்மிடையே இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சுந்தர் டெக்சாஸ் அமெரிக்கா
Varadarajan
Sujatha Sir is a very good person. I enjoyed reading his "Kattradum - Pettradum" series and all other articles in Ananda Vikatan. His style of writing is very much appreciated and he made the technical nuances of Computers, Satellite, Physics etc to reach all other people who don't know about these by studying. His death is a biggest loss for the entire Tamil Nadu and all Tamil viewers / readers. May his soul rest in peace! I appreciate the initiative of Vikatan by providing a way for readers to convey their condolences for this great man over the Internet.
kamal
I pray Almighty for his soul to rest in peace.My deep condolences to Mrs.Sujatha and family members.My heart feels heavy to think that no more I can read his writings which is my favourite.
wahid
extrodinary writer sujatha"s cremation also falls on an extrodinary day// 29/02/2008 on leap year// for the writer who breaches leaps and bounds on his tamil writing ,my deepest condolences
Lakshmi
Sujatha-who brought lot of readers to reading habits and in any format whether it is weekly magazines or Internet or Cinema his contributions to tamil is really took Tamil to new heights. He is instrumental for bringing lot of new authors too. I remember, once Balakumaran wrote about his time spent with Sujatha about how to write (in his early days of writing) really helped him. I am expecting Sujatha should come back immediately and should write his last moment before death. A loss to tamil readers and my heartfelt condolences to his family and entire tamil reading community.
Nagaraj
சுஜாதா ரங்கராஜன் மறைவு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் தமிழ் உள்ளவரை வாழும்.
Sridhar
.He was my favorite writer.I like his marupadiyum ganesh, kanavu thozhitsalai,en iniya yanthira,karaiellam senkapapu and kattathum pettathum. vikatan gave him most freedam to write his own. our deep condolences to his family.
Sankar
சிலருக்கு மரணம் என்பதே இல்லாமல் இருந்தால் இவ்வுலகுக்கு நல்லது. அந்த சிலரில் சுஜாதா அவர்களும் ஒருவர்.
jaya
I am not emotional personal at all.But all day yesterday I felt so sad like losing a close friend.He should have lived atleast another 10 years.It seems that genius people die early. It is difficult to find genius people who are communicative.He may be the one person to born in 100 years .
kavitha
It's shocking and feeling very sad. This great writer and intellectual will continue to live with us through his writings. May his soul rest in peace.
Anand
அறிவியலை ஆனந்தமாக படிக்கவைத்தவர்...தமிழ் எழுத்து உலகத்திற்கு ஒரு மாபெரும் இழப்பு....
suresh
Initially, Many IT professionals were produced only from Trichy colleges in late 80's and early 90's, it spreaded to other areas of TN later and then other states. I remember he was a dean of the Tech department of Bharathidasan university. This is to tell you about one of his contribution to society. Sir, we miss you lot, but you live forever with us.
Sreedharan
சுஜாதா - ஒரு அற்புதமான எழுத்தாளர்.அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை ப்ரார்த்திப்போம்.
hariharan
Great man who yet again proved that Genius' are born not made.His writings inspired many readers and some of them started writing also.He always explained science related issues in short & sweet verse but with full clarity so that even a common man understood properly.I am one of his million fans who grew up reading his stories & novels and inspired to such an extent that i named my new born nephew way back in the 80s as VASANTH.His demise is an irrepairable loss to TAMIL & TAMIL community.But he will be immortal thro' his writings & he will also be remembered always for the EVM.
Madras
A Great Loss for tamilians.
Peri
A real genius. Versatile writer. Introduced various writing styles and techniques. From religion to relationships, he brought a new perspective. He influenced a whole generation of new writers. He may be gone, but his work will survive for a long time.
Ram
We miss you sir..thank you very much for all your works you have done to us.
Balachandar
அமைதியான நிறைகுடம் மறைந்து விட்டது. சுஜாதா அவர்கள் தான் அறிந்த அனைத்து விஷயங்களையும் பாமரனும் புரியும் படி விளக்கியவர். விஞ்ஞான மாற்றங்கள் அனைத்தையும் தமிழர்களின் உள்ளங்கையில் துனித்து உணர்ந்து முன்னேற செய்தவர். அவர் செய்த தமிழ் தொன்டினை தொடருபவர் யார்? இக்கேள்விக்கு பதிலே இல்லை. அரங்கனின் அருளால் உதித்து இன்று அவனுடன் கலந்த சுஜாதாவை வணங்குவோமாக.
Subramanian
கனெஷ்,வசந்த் பெயர்களுக்கு உயிர் தந்தவர்;அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
Singaravelan
ஏன்.. எதர்கு... எப்படி... உங்கல் மடியில் தவல்த மார்கழி பனியும், மக்ரோ சிப்பும் தவிக்கிர்ரன!!
Sridhar
I have been a fan of Sujatha ever since I started reading magazines. He will be missed by the tamil community for a long time to come.
kalaiarasu
I am feeling like I lost a close friend of mine. I'm still in shock and can't believe his death. May his soul rest in peace.
Srinivasan
Sujatha inspired millions of us in those pre-internet,satellite tv period (the eighties and the initial nineties) when information access was available only to the priveleged few. His silicon sillu puratchi opened my eyes to computer technology. His erudite prose, stories, novels engaged millions of readers like us and helped us face the world with greater logical and competent confidence that our academic system was missing to provide. Sir -- my tearfull farewell.
Prakash
ஒரு கட்டுரையின் முதல் பத்தியில் நானோ-டெக்னாலஜியும், அடுத்த பத்தியில் நாலாயிர திவ்ய பிரபந்தமும், உடனே அதற்கடுத்து இவையிரண்டுக்குமுள்ள தொடர்பும் பேசும் எழுத்தாளர்... எண்சீர் விருத்தத்திலேயே ஹைகூ முதல் "லிம்ரிக்" வரை எழுதும் ஆற்றல் கொண்ட கவிஞர்... புறநானூறில் ஜீன் தெராபியும் க்ளோனிங்கும் இருக்கிறது என்று அழகாக விளக்கி வாசிப்பவர்களை நம்ப வைக்கும் திறமை கொண்ட இலக்கிய விஞ்ஞானி... பாய்ஸ் மாதிரி படங்களுக்கு வசனம் எழுதும் 70 வயது விடலை இளைஞராக இருந்து கொண்டு, யாப்பிலக்கணத்தை நுணுக்கமாக கம்ப்யூட்டர் வல்லுனர்களுக்குப் புரிய வைக்கும் ஆல் ரவுண்டர்... பாவநாசத்திலோ, பிட்ஸ்பர்க்கிலோ, நியூயார்க்கிலோ, 2050-ல் திமலாவிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது ஸ்ரீரங்கத்திலோ அவர் சொல்லும் கதை எந்த ஊரில் நடந்தாலும் அந்த ஊருக்கே படிப்பவர்களை அழைத்துச் சென்றுவிடும் திறமையாளர்... குதிரை கடித்த வலியோ, பழைய காதலியை மற்றொரு அண்ணாசாமியின் மனைவியாகப் பார்க்கும் துயரமோ, நிகோட்டினின் தீமையோ, அல்லது வீட்டுக்கு வெளியில் கால்வாயில் மிதக்கும் பிணமோ, எதைப் பற்றியும் நகைச்சுவை ததும்பக் கூறும் நகைச்சுவையாளர்... எல்லாவற்றிற்கும் மேலாக... இன்றைய இளைஞர்களை தமிழ் வாசிக்க வைத்த கவர்ச்சிகர எழுத்துக்கு அதிபதி... இன்று நம்மிடையே இல்லை... அவரது ஆத்மாவுக்காகப் பிரார்த்திப்போம்...
Kannan
Big loss to the Tamil community. Nobody would have explained many things much simpler.... I feel like I have lost some one in my own family, even though I have met Sujatha only once.
Mugunthan
என் இனிய இயந்திரா போன்ற ஒரு நாவலை தமிழில் எழுதி அதற்கு பலத்த வரவேற்பைப் பெற்றது சுஜாதாவினால் மட்டுமே முடிந்த சாதனை. கணேஷ்-வசந்த் பாத்திரப் படைப்பைப் பின்பற்றி பின்னாளில் பல பாத்திரங்கள் வந்து விட்டன. ஆனால் 'விஞ்ஞான' எழுத்து என்கிற இலக்கியத்துறையில் இனி ஒரு நிரப்ப முடியாத வெற்றிடம் என்றும் இருக்கும்.
sivakumar
Really I can't believe it. He has done so much to tamil and tamil community. Big Loss...

இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதில் பெருமை கொள்வோம்.இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
Asokkumar
என்னுடைய கன்னிர் அஞசலி - சுஜாதா
Zahir Husain
திரு.சுஜாதா அவர்களின் இழப்பு தமிழ் எழுத்துலகிற்கு ஒர் மாபெரும் இழப்பாகும். விகடன் வாசகன் என்ற முறையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட இழப்பாகும். அன்னாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
P
அறிவியலாளர் தமிழிலக்கியத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு நம் சுஜாதா. உமது ஆத்மா சாந்தியடைவதாக!
murugan
சுஜாதாவின் மரணம் தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
saravanan
சுஜாதா எழுத்தாளார்களில் ஒரு விஞானி. விஞானிகளில் ஒரு எழுத்தாளார். ஆத்மா சாந்தியடைய இறைவனைப பிரார்த்திக்கிறேன்.
kadambi
ஒரு மாபெரும் சகாப்தம் முடிவடைந்தது.னம்ப முடியவில்லை.
murali
sujatha is such an amazing writer and has been admired a lot by 3 generations. It is a great loss to TN and my deepest condolences to his family
Ashok
Great writer. He's remained my favourite writer to this day. Especially loved his Ganesh-Vasanth novels. He will be missed.
sujanitha
சுஜாதாவின் மறைவு இந்தியாவிற்கும் ,திரை உலகிற்க்கும் ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு...சுஜாதவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்திக்கிரேன்.
Vimalan
அவரைப் போல வேறு ஒருவர் இருத்தல் இல்லை... அவரின் எழுத்தைப் போல வசீகரம் ஏதும் இல்லை.. மிக்க வேதனையுடன்..
Balaji
Sujatha is part of our life from the 70's. Like Sivaji Ganesan's influence, Sujatha's simple humor and youthful style is something that has also got into all of our personality. May his sould rest in peace with the Almighty.
suresh
we lost a scientific genius.
srikrupa
A great loss for Tamil Literature and the Tamil film industry. Am a great fan of his works right from my childhood days. Learnt a lot of tamil words from his works. I loved his En Iniya Iyanthira and Meendum Jeano. My heartfelt condolences for his family members. May his soul rest in peace.
Dhanasekaran
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.கணினி தமிழை எங்களுக்கு அறிமுகபடுதிய உங்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

Mr. Sujatha was a versatile person with knowledge about virtually any thing. He was getting older in his days only and was getting younger in his thoughts. Though he is not here now physically, I is always live through his creations. His loss is definitely big and his place could not be filled. I pray god that his soul rest in peace. My deep condolences to his family One of the Million fans of Mr.Sujatha R.Mohan
Muthuselvam
அறிவியலை பாமரனுக்கும் மிக எளிய நடையில் புரியச்செய்தவர்... ஓட்டு பதிவு இயந்திரம் வடிவமைத்தவர்... சிறந்த படைப்பாளி... அரிய வினாக்களுக்கும் எளிய விதத்தில் பதில் தருபவர்... எனது மனம் கவர்ந்த எழுத்தாளர்... அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்... அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.........
siva
இறைவா, எங்களை மகிழ்வித்த சுஜாதா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்தனை செய்கிறேன். இவர் எழுத்து நடையை யாரிடம் காண்போம் இனி? இறைவா, அவரை மறக்காத மனதை எங்களுக்கு கொடு.
swami
This is indeed a great loss to the Tamil Community. I am an ardent fan of his and have a huge collection of his books and I have been reading him probably for the past 30 years. He was able to connect with his readers in all his writings by his sheer honesty, attention to details and humour. He considered writing as a craft and was passionate about being sure of what he was writing(like the topology, language, distances between places so on so forth) More than the short stories/novels, his essays were more appealing to the readers since as he himself said, he was able to be even more honest/real in essays and choose the "words like weapon" and carefully using them all the time. His "Katrathum Petrathum" is a master-piece of his. I sincerely feel he never planned success. He was just passionate/committed/involved/dedicated to what he was doing all the time. Hence he produced the best. He changed the style of writing in 1960s - He wrote about science, crime, emotions, psycology, history - you name it - He left behind a legacy. He was appealing to youngsters in 1960 and he is equally appealing to youngsters today - ALL THIS IS BECAUSE HE JUST FOCUSSED AND FOCUSSED ON WHAT HE WAS DOING. Success just followed him as a by-product. Despite being so focussed, he once wrote that he did not believe that anybody's writing will live for 100 years including his own and never felt offended when editor's corrected his writings, though marginally. This only exhibits his confidence in his own writing and also his professional modesty. I have absolutely no doubt that the next 100 years people will continue to read his books and they will be fully relevent. Ironically his first short story got published in a magazine called "Shivaji" and the last film he wrote dialogues for was "Shivaji". I am sure many of the readers recall his essay on "death" - I think it was part of Katrathum Petrathum His death is a personal grief for me and so would be for lakhs of his fans and let all of us have the courage to accept this loss and I pray he goes to heaven as against his own wish of going to hell ("so that I could see many more interesting personalities"- to use his words). swami .
Srinivasan
துப்பரியும் கதையாக இருந்தாலும் சரித்திர கதையாக இருந்தாலும் வாசகர் வாசலுக்கு புதிய பாணியை அறிமுகபடுதியவன்.காதலுக்கு கூட விங்ஙான விவரம் தந்தவன்.மலையளவு பெருமைகள் சேர்ந்த போதும் எளிமை வாழ்க்கை வாழ்ந்தவன்.இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது
Sangeetha
We really lost one of the best author in Tamil. I recently got around 20 of his books from India and I just finished reading them. His "Srirangathu Devadhaigal" is my favorite. We will surely miss him and writings. I pray to God and May his soul rest in peace.
Ravikumar
சமகால தமிழ் இலக்கியவாதி திரு. சுஜாதாவின் பிரிவு மிகவும் பேரிழப்பு. பிரிவோம் சந்திப்போம் என்று சொல்ல முடியாத பிரிவு. சுஜாதாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எனக்கு குமுதத்தின் காலம் சென்ற ஆசிரியர் திரு.அரசுவின் பதில்கள்தான் நினைவுக்கு வருகிறது. அவர் சுஜாதாவைப் பற்றி சொல்ல சொன்ன விமரிசன்ம். "சுஜாதா....சகலகதா வல்லவர்." எனக்கு தெரிந்து இலக்கியவாதி அறிவியலிலும் சிறந்து விளங்கலாம் என்பதற்கு இவர் முதல் உதாரணம். இலக்கியத்திற்கும் சமகால அறிவியலிற்கும் இருந்த இடைவெளியை உடைத்தவர் இங்கு உள்ள இரங்கற் செய்தில் சுஜாதா எதை ரசிப்பார் என்று எண்ணிப் பார்கிறேன். திரு. வெங்கட் எழுதியுள்ள " போயிட்டு வாங்கா வாத்தியாரே..எல்லாத்துக்கும் நன்றி". ஒற்றை வரி ...அதுவே சரி.. .
Sundaresan
தமிழ் பாய்ஸ்க்கு அ ந் நியன் அறிவியலை அறிமுகம் செய்த ஜீனியஸ். கணேஸ்-வஸ ந்த் கல ந்து செய்த கலவை. உங்களிடம் நாங்கள் கற்றதும் பெற்றதும் ஏராளம். உங்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி..
venkatesan
It was a shock when I heard the news. My heartfelt condolences to his family.
Jerome
A versalite author who could elicit his thoughts in a erudite manner.May his soul rest in peace.
Logesh
சுஜாதாவின் மரணம் - தமிழுக்கு பேரிழப்பு!
Vinithra
We have lost a true genius.It is very sad....We will all miss him. The first thing that I always look for in Vikatan were his columns/stories.My thoughts are with his wife and family.
cts
தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
Dhinesh Kumar
நானோ டெக்னாலஜி முதல் சங்க இலக்கியங்கள் வரை இவர் எழுதாததே இல்லை. இவரது தனித்துவம் வாய்ந்த நடை மறக்க முடியாது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆண்டவன் இவரை பக்கத்தில் அமர்த்தி கதை கேட்க ஆசைப்பட்டானோ என்னாவோ? இவரே அடிக்கடி சொல்வது போல இவரது 15 நிமிடம் முடிந்து விட்டது. இவரது மறைவால் கலங்கி நிற்கும் இவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...
pal
Great loss to India
Deiv
It's a great loss to Tamil community. May his soul rest in peace...Sujatha Sir - We will be missing you...Come back again to TamilNadu.
ramaswamy
He is a genius who can write on any topic with fluency and clarity. I am an avid reader of his 'Katradum Petradum' which were very interesting, humourous and informative.He should be awarded Padma Vibhushan posthumously for his services to Tamil and also for his works in Electronic Voting Machine.I have never read another author who could be so versatile who can explain with amazing clarity either verses in Divya Prabhandam or rocket propulsion theory. I am sure his entry to Vaikuntam will be celebrated there with lot of joy. May his soul rest in peace. with Tears Ramawamy from Sydney Australia
BALA
great man & born genius. Thanks Sujatha for your great contribution to this country. I am unable to believe his departure to destiny. I pray for his soul rest in peace.
Sathiamoorthy
கடந்த 30 வருடங்களாக சுஜாதாவின் எழுத்துக்கும், பிற்காலத்தில் அவரின் திரை வசனங்களுக்கும் நான் அடிமை. நறுக்குத் தெறித்தால் போல் அவரின் கதாபாத்திரங்கள் பேசுவது எனக்குப் பிடித்த பாணி. "க்கினான்", "ந்தான்" போன்ற அரை வசனங்களாலும், இழையோடும் நகைச்சுவையாலும் எம்மைக் கவர்ந்த Sujathaa, truly one of a kind. May God keep him in His Abode. (Sorry for completing in English. The font would not go back to Thamizh).
Ravi
I feel like I lost one of my famiy members. A great witer who introduced lot of tamilians the art and science of reading.
Vengata
நவீன தமிழ் இலக்கியம் என்பது...எளிமையான சாமானியனுக்கும் எடுத்து சென்றவர்.....சிக்கலான அறிவியல் சார்ந்த விஷயங்களை சுலபமாக புரிய வைத்தவர்....அவரின் புதிய எழுத்துக்கள் இனி வர மாட்டா...என் நினைக்கும் போது....துக்கம் என்னைத் தாக்குகிறது....!
Balagurusamy
He was my favorite writer.I like his marupadiyum ganesh, kanavu thozhitsalai,en iniya yanthira,karaiellam senkapapu and kattathum pettathum. vikatan gave him most freedam to write his own. our deep condolences to his family.
kadhiravan
when i was styding 6th or 7th i read the Science Q & A which came in the Junior Vikatan on 1984 or 85, it was an amazing one, that was my first exposure to the writer, i had not read all the novels by him, but i like the way he writes, an excellent multifaceted personality. He contributed a lot to the Cinema industry also, his dialogues very much supportive for the movies like Mudalvan, Sivaji and many more... Dear Sujatha, you will always live in our hearts, always....
manimaran
பன்முகச்சிந்தனையாளர் என்பதற்கு சுஜாதா என பொருள். வணங்குகிறோம்
raghavan
I have gone through the condolense messages hereunder. I fully agree to those each comments. May his soul rest in peace.
murali
he was seriously ill two years back itself and he recollected his hospital experiences humoursly in one of his writeup to vikatan. I like very much his narration of TRICHY's in the late 60's since we also belong to his region.
ANNADURAI
தமிழ் இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு
VishnuChakravarthy
hearty condolences to his near n dear ones.may his soul rest in peace.

I started reading theses Tamil weeklys just for this gentleman. I truly miss him. Now there is a vast space of vaccum created in the tamil literature world. May the Almighty God rest his soul peace in heaven. Heartfelt condolences to his bereaved family members. Cry aloud for the man who is dead, for the woman and children bereaved" An old saying! Warmest gradtitudes and love to him forever! SAM Hong Kong samuzair@hotmail.com
Tamil_fm s'pore
I used to read whatever he writes from my childhood. He is the Great person. None of his stories, novels or scientific articles are boring to read. DEEP CONDOLANCE TO MR.RANGARAJAN FAMILY. HIS LOST IS BIG LOST TO WHOLE SUJATA FANS.
Ravi
எழுத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எழுத்தாளர்களில்முதன்மையானவர். விஞ்ஞானம் சினிமா ஆன்மீகம் விளையாட்டு இலக்கியம் என எதுகேட்டாலும் பதில்தரும் வல்லவனை இழந்துவிட்டோம்
Aravinthan
சுஜதாவின் மரனம் நமக்கு மிகப் பெரிய இழப்பு.அன்னாரின் குடும்பதினருக்கு எனது இரங்கல். 2025 வரை அவரின் ஆத்மா சாந்தியடையப்போவதில்லை..!
Karthik
Will this space enough to describe his all for Thamil literature? He is a real "GEM" of ThamilNadu....
lakshmi
Its a great loss to the indian community. Our heartfelt condolences to his family. May his soul rest in peace.
basker
there is no substitute for sujatha ..this is a big lose for tamil film industry
V
என்றும் மார்கன்டேய எழுத்தாளரான, தலைமுறை கடந்த பன்முக அறிவு ஜீவி சுஜாதாவின் இழப்பு மிகப்பெரிய நஷ்டம். எனது மனமார்ந்த அஞ்சலி. அவரின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்தனை செய்கிறேன்.
Ramesh
I started reading Sujatha during my highschool days and with that my reading habit started. I used to marvel at his stories such as Nirvana Nagaram, Vasanth-Vasanth, Moonru Nimisham Ganesh etc. I came to the conclusion that he is the best writer as far as detective stories are concerned and he proved me wrong with Pirivom Santhippom. It entirely changed my opinion and with Ratham Ore Niram (I forgot the order in which they came), I still beleive he is the best story writer in Tamil. I am sure Sujatha will be remembered by millions of his fans and he is one of the writer whom I would happily recommend for my son to read, to prove that there are excellent brainy tamil writers. Thanks Sujatha for all your contributions.
ARIVARASAN
A Versatile genius did lot of things to the community.We pray for his soul rest in peace.
sivakumar
He introduced me a lot of authors in tamil and english like a father does.He has created a thirst on me towards tamil and world literature.Let us name Feb 27th as writers day.
thangiah
The void he had left will difficult to be filled. Definetely he is a genius and it is a great loss to tamil nadu. May his soul rest in peace.
Prasanna
தமிழ் இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு
Christopher
நெல்லையில் நடந்த ஒரு நாள் கருத்தரங்கில், மதியம் வரை கணணித்துறை பற்றியும், பின் மாலை வரை தமிழ் இலக்கியம் பற்றியும் அவர் நிகழ்த்திய உரைகள், மற்றும் கலந்துரையாடல்கள், இந்த மனிதருக்கு உடல் முழுவதும் மூளையா என வியக்கவைத்தன. நிஜமாகவே ஒரு அறிவு ஜீவியை இழந்துவிட்டோம்.
sankar
This is greatest loss to tamilnadu and tamil film industry. Especially, Kamal lost his personal friend and he has to look another good writer like him. He is a great writer. Heartfelt condolense to his family members. May the almighty blesses the soul rest in peace.
Vadivelavan
He was a great writer...who applied scientific thoughts in to the literical world in most of his works. His loss will be a real sorrow for the readers,writers,movie world and to all.
Ambujavalli
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நான் அவரது படைப்புகளின் ரசிகை. விஞ்ஞானம், த்ரில்லர், நாவல்கள், ஆன்மிகம் என எந்தத்துறையையும் சுவைபடக் கையாளும் திறனுக்கு நிகராவார் ஒருவருமில்லை. இலக்கிய உலகுக்கு மாபெரும் இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்.
Subathra
I still cant digest the fact that Sujatha is no more with us. Such a versatile writer, I am going to miss his ''varam oru pasuram''. Who else can replace his place. His death has created a big vacum in contemprary tamil literature circle. I wish he somehow could come back alive and start writing! Will miss until we depart Sir.May your soul rest in peace!
Anand
My Deep Condolences to Mrs Sujatha Rangarajan and family. He is just physically away from us but his writings and the impact that has left in readers like us are going to live for generations.
Yahiya
The Physicist, Noble prize winner, Richard Fyenman use to mention, "if you can't explain a science phenomena to a child, it means that you did not understood the phenomena well". Writer Sujatha's depth of knowledge in science & technology is such that he can explain any complicated concept with ease even to a layman. It's honor to salute the soul of this great Writer.
venkat
போய் வாருங்கள் வாத்தியாரே...அனைத்திற்கும் நன்றி.
Sivakumar
Great Person... Great legend...Born Genius... We miss u sir..
Karthikeyan
We used to discuss Sujatha's articles, Q&A and stories in home. He was a icon for New Tamil Litreature. We are all missing him. Let his soul rest in peace. Our prayers for his family.
ARIVARASAN
A Versatile genius did lot of things to the community.We pray for his soul rest in peace.
Venkatesh
மிகவும் போட்ரதக்கவர்கலில் ஒருவரான சுஜதாவின் மரைவு ஒரு பெரிய இழப்பாகும்
Mohanakrishnan
A genius amount writers and a writer among the genius. He has many faces and it is great loss to the tamil computer community. His contribution to tamil linux, tamil word process are so on are great and there is no one to take such initiative. It is a great loss.
usha
I communicated with Sujatha through e mails. He was a gift to Thamil people. Huge loss but his work will survive for years to come. My condolences to his family and friends.
saravanan
Its a great Loss for Thamizh Language & Cinema,May your soul rest in peace!!!!
Samy
Sujatha was such a genius and so versatile in a wide varied topics. He had all my family members bound with stories of all different sorts. Introduced electronics and computing to common men in tamil articles. Has done so much in his entire life. Undoubtedly a genius. He had lived a life, praised and appreciated by everybody, a great achievement.
Ravi
எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வாசகர்கள் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒரு அற்புதமான எழுத்தாளர். சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்தவர். விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் கலந்து பல அற்புதமான படைப்புகளை தந்தவர். சினிமாவிலும் கதை வசனத்தில் புதுமையான பாணியைப் புகுத்தி வெற்றி கண்டவர். அன்னார் எமைவிட்டுப் பிரிந்தாலும்தமிழ் உலகில் இவரது ஆளுமை என்றுமே நிலைத்திருக்கும். அன்னாரின் ஆத்மசாந்திக்காகவும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்காகவும் எல்லாருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
Sankar
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப பிரார்த்திக்கிறேன்.
Raja
I should say that sujatha is one of the main reasons for my interests in reading tamil works. The touch of humour in all his works, sharing knowledge in a modest way, touching upon a wide array of subjects ranging from alwars to artificial intelligence, he is a class act, and can never be removed from the hearts of millions of tamil readers. May his soul rest in peace.....
sundar
இவருடைய அத்மா ஷாந்தி அடைய இரைவனை ப்ரார்த்திக்கிரேன்.
Rajmohan
This is greatest loss to tamilnadu. He is a great writer. Hearty condolense. May his soul rest in peace.
vasumathi
Really it is a very big setback for Tamil literature, Tamil cinefield. Big loss for all the Tamilians.
Ganesh
A genius who took computers and electronics to all levels of readers. I still remember reading his novels when I was studying at my fourth standard. Tamilnadu Government or Vikatan should give "Sujatha Award" yearly for best technical oriented novel writers. That is the best respect anyone can give to his contribution to the tamil literary world. My condolences to the bereaved family.
athisda
Sujatha touched people's heart by his writing style. His unique contribution to the Tamil society will always stay with his fans. - Athisda Govindarajah
Muthukaliannan
இது மா பெரும் இழப்பு.
Parthiban
jeno, ganesh vasanth what a charactors, Big lose for us. He is the one who started typing stories in laptop computurs.
Muruganandham
We lost a great scholar and a man with good humor.
Pat
சுஜாதா ஒரு சகாப்தம். அவருடைய எளிய தமிழ், வார்த்தை வித்தை, விஷய அறிவு இன்னும் பலப்பல பரிமாணங்களை ரசித்த கோடணுகோடி வாசகர்களில் நானும் ஒருவன். அவர் இன்று மறைந்தாலும் நம் உள்ளத்தில் இருந்து என்றும் மறையார். அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபன்கள்.
Sentil
ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Balasubramaniyam
A great for loss for the tamil world. I always used to wait for vikatan book to read his Katradhum Petradhum. A great human being !
NARAYANAN
எனக்கு புத்தகம் பிடிக்க(படிக்க) வைத்த அவருக்கு எனது நன்றி. அவரின் ஆன்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். -நாராயணன் , குட்றாலம்.
Sridharan
கலைக்னகூம்,எழுத்தாலனுக்கும் சாவில்லை.அவ்வர்கல் எப்பொழுதும் தஙகல் படுபுகலால் உஇர் வழ்கிரர்கல்
Rajeeshun
என் இனிய எழுத்தாளர் சுஜாதாவிற்கு என் கண்ணீர் அஞ்சலி தமிழ் எளுத்து நடையில் புதிய முறையினை புகுத்தி என் போன்றவர்களுக்கு வாசிகும் ஆவலை உண்டு பண்ணியவர், ஈழத்து இலக்கியத்தை தமிழ் நாட்டு இலக்கிய ரசிகர்களுகு அறிமுக படுத்திய ஆரம்ப கர்த்தாகளுல் முதன்மையானவர்... :என் கண்ணீர் அஞ்சலி
kannappan
தலை சிறந்த அறிவியல் அறிஞர், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை தயாரித்து நமது தேர்தல் முறையில் ஒரு புரட்சி ஏற்பட காரணமாயிருந்தவர். எளிய நடையில் போகிறபோக்கில் பல ஆழமான கருத்துக்களை அள்ளித்தெளித்துச் செல்லும் சரளமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். இவரது வாசகர்களில் பெரும்பாலோனோர் தங்களின் பேச்சில் கூட சுஜாதவின் எழுத்து நடை கலந்திருப்பதை காணலாம். என்னதான் சிறந்த அறிவியலாளராக இருந்தாலும், தமிழ் மேல் அவருக்கிருந்த ஆர்வம் சொல்ல முடியாதது. பல பைந்தமிழ் நூல்களை படித்து அவற்றின் சிறப்பை நம்மோடும் பகிர்ந்துகொண்டவர் அவர்.இவரிடமிருந்து விகடன் மூலமாக கற்றதும், பெற்றதும் நிறைய. எதிர்பாராத நேரத்தில் எமனின் அழைப்பிற்கு இணங்கி போய்விட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம். மண்ணில் இருந்து மறைந்தாலும், எல்லோரின் மனதிலும் என்றும் இருப்பார்.
Ram
I can't believe that one of the doyens who still made people read tamil literature or articles is no longer alive. I don't think this generation wud ever read tamil articles again as the person who made them read is alive. i still remember those series in JV/AV/Kumudam. who will his void?
sengottuvel.m
சுஜதாவின் மரனம் நமக்கு மிகப் பெரிய இழப்பு.அன்னாரின் குடும்பதினருக்கு எனது இரங்கல்.
Chithra
ஓரு மகத்தான அறிவு ஜிவியை இந்த உலகம் இழந்து வீட்டது.
sridevi
ஈடு செய்ய முடியாத இழப்பு. இனி அவருடைய புதிய படைப்புகளை படிக்க முடியாது என நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கின்றது.
ramanujam
எளிமையான நடையில் அறிவியல் சார்ந்த விஷயங்களை நமக்களித்த திரு சுஜாதாவின் மரணம் ஈடு செய்ய முடியாத ஒன்று. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Muru
I have been reading his navels, short stories, drama, question answer and all his writings including dialogue writing in movies. He has multidimensional face and very intelligent Man. Its big lose for Tamil readers. Thanks Murugu
Karthi
ஆழ்வார்களை அறிமுகம் செய்த இந்த நவீன கால ஆழ்வாருக்கு என் பணிவான வணக்கங்கள்.
Aravinthan
சுஜாதாவின் மரணம் சரி செய்யமுடியாத நஷ்டம் திரு.சுஜாதாவின் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த வருத்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன். கமல் சுஜாதாவின் வெளிவராத உரையாடல்கள வெளி கொணர்ர வேண்டுகிறேன்.
Ilamurugu
சுஜாதாவின் தமிழ் சேவை அளப்பறியது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
A
யாரும் ஈடு செய்ய முடியத இழப்பு.
A
தமிழ் சமுதாயதிரற்கு மிக பெரிய இழப்பு. சுஜாதா இடத்தை வெறு யாரும் ஈடு செய்ய முடியது.
Sathya
We will miss you...
Subramanian
ஒரு இளமையான எழுத்தாளரை இறைவன் அழைத்து விட்டான். திரு ரங்கராஜன் (சுஜாதா) அவர்களின் கணினி புலமையும் ,வியக்க வைக்கும் எழுத்து திறனும் காலத்தால் என்றும் நிற்கும்.
Saleem
25 வருடங்கலாக சுஜதாவை படித்து வருகிரென்.No words and tears cannt comfort this tragic loss.He is a versatile genious.He elevated tamil novels in a remarkable place.He simplified and conveyd his hitech knowledge to tamilians. entire tamil community indebted for him.
B.
லியனார்டோ டவின்சி, பெஞ்ஜமின் ஃப்ரான்க்ளின் போன்று பொறியியல், அறிவியல், எழுத்து, இலக்கியம், திரைப்படம் என்று கால் பதித்த துறைகளில்லாம் வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர் சுஜாதா. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Shankar
Sujatha's death is a big loss to Tamil literature. I grew up reading his stories, especially in my formative years. I'm proud that we studied in the same college, though 36 years apart. Sujatha graduated Electronics Engineering from MIT, Madras in 1955 (5th batch), I did in 1992 (41st batch). We met him once in the summer of 1991 when we went on a class tour to Bangalore. May his sould rest in peace.
Duraimurugan
Its a great loss to Tamil Community and who love his writings. His contribution to scientific tamil is invaluable. May the lord bless his soul to rest in peace.
Vahees
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவால் வாடும் அன்னாரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
Balaji
தமிழில் எழுதிய விஞ்ஞானி. உங்கள் எழுத்து எப்போதும் உங்கள் பெருமையை சொல்லும். உங்கள் காலத்தில் வாழ்ந்தது எங்களுக்கு பெருமை. இன்னும் ஒரு பத்து வருடம் எங்களுக்கு எழுதி இருக்கலாம். கடவுளுக்கு என்ன அவசரமோ உங்களை அழைத்து கொண்டார். உங்களை பிரிந்து வாழும் உங்கள் குடும்பதிற்கு எங்கள் அனுதாபங்கள்.
akilan
We will miss you in our life ...
lakshmi
ஒரு அரிவு ஜீவியின் பயணம் முடிந்துவிட்டது. ஐயோ அவர் இருந்த பொழுது அவருக்கு தகுந்த பட்டங்களை கொடுத்து பாராட்டாமல் போய்விட்டதே இந்த தமிழ் சமுதாயம்? ஏன் இந்த முழு பாரதமும்தான்? மிகவும் மனத்திற்க்கு வருத்தமாக இருக்கிறது அவருடய பிரிவு செய்தி. என்னை மாதிரி பெண்ணையெல்லாம் கணேஷ் வசந்த் என்ற பாத்திரத்தில் வசந்த் மேல் புத்தகம் படிக்கும் பொழுதே காதல் கொள வைத்த தத்ரூப எழுத்தாளர் அல்லவா சுஜாதா! இனி அவரை மாதிரி யார் எழுதப்போகிறார்கள்? கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் பதில் சொல்ல போகிறார்கள்? எனக்குத்தெரிந்து ஆக்கம், அறிவு இரண்டுமே சுஜாதா அவர்களுடனேயே முடிந்தும்விட்டது. அதுதான் நிதர்சனமான உண்மை. ஐயா உங்களை பிரிய முடியாமல் வாடும் எத்தனையோ கோடி வாசகர்களில் நானும் ஒருத்தி. லக்ஷ்மி
Saravana Kumar
A very good Novelist, and dialogue writer. Haa... I am amazed always at your IQ level and the ease with which you explained difficult science concepts in Tamil. Thank you sir for all your contributions for Tamil language.
Hari
Tamil community will never have another multi-faceted writer like Sujatha, ever. Personally, I grew up with his writings. It is unbelievable that time has grabbed him away from us, while he still had so much to offer. As it is rightly mentioned in Vikatan's tribute, he had inspired a whole generation to read tamil books. His writing style had also influenced so many who have ventured to write in tamil. He sure was a rare gem.
karthic
sujatha is a greatest writer .but very simple person. irrepairable loss for their family&nation latha baskaran
kandiah
கணையாழியின் கடைசிப்பக்கத்தில் எழுதியே எம் மனதில் முதற்ப்பக்கத்தில் இடம் பிடித்தவரே, என் வாழ்வின் கடைசிப்பக்கம் வரைக்கும் உங்கள் படைப்புகளதும், உங்களதும் நினைவிருக்கும். "ஐயனே போய்வா" உலகெங்கிலும் பரந்துவாழும் உங்கள் வாசகர்கள் சார்பில் எல்லோர்க்கும் பொதுவான இறைவனை, உங்கள் ஆத்மா வீடுபேறடைய வேண்டுகிறேன். ஓம் ஸாந்தி ஸாந்தி ஸாந்தி.
Madhu
சுஜதா எழுத்துலகில் ஒரு புதிய சகப்தம் படைதவர். தகவல் தொழில்னுட்பத்தை எளிய மற்றும் வசீகர வார்த்தைகளால் அனைவருக்கும் சென்றடைய செய்தவர். அவருக்கு நிகர் அவரே. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோமாக.
rajkumar
சுஜாதா ரங்கராஇஜன் கதைகளை நைலான் கயிறு காலத்தில் இருந்து படித்து வருகிறேன். ஒரு genre முடிந்து விட்டது. ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் சொந்த இழப்பு. அவ்ரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.
Lakshmi
சுஜாதா அவர்களின் மறைவிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
subramanian
I was shocked when i read the webnews. I really worried. It is very rare to get next sujatha to the tamil world and my deep condolence his family and relatives.
Saravana
நன்பனை இழந்தது போல நெருடுகிரது!!! தமிழ் இலக்கியத்திர்கு சுஜாதா-வின் பங்கு அதிகம்.
kannan
Writer Sujatha passed away.It is a really sad news to all the tamil speaking world. Still i can remember the day we(myself,my friend Arul) met him in his home at bangalore when i was doing my project at ITI(1993).He patiently answered all my questions. His wife gave us a full filter coffee.He asked me weather i am going to publish the interview,i told no. Second time,when he came to salem for tamil sangam function,i got his autograph passing through a rush of people. I miss him a lot. He will be ever remembered for his short story "nagaram",novel "privom santhipom",his translation of "thirukkural","divya prabandham","sangam songs","katrathum petrathum","kanayaliyin last pages". He did a major boost to tamil by his simple science articles. He made fun of him when he was admitted to apollo last time(his article in Anandha vikatan),such is his light humour in all his writings.He wondered how can he repay all these people right from nurse,doctor for their service,such a wonderful person. He admitted graciously when his elder son married a japanese girl,such a open minded person. He did a major contribution to the electronic voting machine in tamilnadu when he was the manager of R&D division of BEL. He is truly a multi-facited personality,he can pilot a small aircraft,he can play a guitar,he can write(almost all the versions,short story,novel,drama,cinema dialogues). A true legend. Tamil literary world will really missing him forever. May his soul rest in peace.God bless his family.
S.
I am extremely sorry to hear the loss! He has been the motivation for many young tamil folks to get into techhnology (myself included). Pray for his soul to rest in peace. Murali
Ramamurthy
An irreplaceable loss to tamil readers. I should have read "En edhaRku eppadi" at least a 100 times. Sujatha's presentation style and simplicity has influenced me so much, that my communication approach changed totally. I now remember his short story "mahA bali" and his first katturai in "katRadhum pEtRadhum" about his hospitalization experience, among the many other master pieces that he created. I think he will live as long as tamil lives.
Mani
You have made us proud by EVM. You have made entire tamil speaking world proud by 'Kanaiyazhi' in 'Kadaisi Pakkam'. Your Thrillers and Sci-Fi writings were awesome and in 70's and 80's you were like a Super Star in Weekly's. You have been an inspiration for fellow writers. Millions of people have admired you and they still do. Your Writings will be cherished forever. Thank you for your work. We will pray to god to send you back again. Till then Good Bye 'Sujatha'.
Suresh
சுயாதா எணும், திரு.ரங்கராஜன் அவர்களின் மறைவு தமிழ் உலகத்துக்கே பேரிழப்பு. இதை நான் ஒரு மரபுக்காக சொல்லவிலை. கல்கி எப்படி சரித்திரத்தை கலந்து தமிழ்தொடர்களை படைத்தாரோ, அதைப்போல் நவீனத்தை நயத்துடன் புகுத்தியது சுஜாதாதான்! தமிழ் உள்ளவரை உமது புகழ் இருக்கும் ஜயா!. எமது ஈழத்தில், கல்கிக்கு பின், சுயாதா மிகவும் பிரபல்யமானவர். எமது நாட்டுப்படைப்புகளை, ஒரு குழந்தயின் முயற்சியை எப்படி ஒரு பெரியவர் உற்சாகப்படுத்துவாரோ, அது போல் பராட்டிய பண்பாளர். அவரை இழந்து தவிக்கும் திருமதி.ரங்கராஜன், மற்றும் இரு புதல்வர்க்கும் எனது ஆ௯ழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய நான் தினம் வணங்கும் நல்லூர் கந்தனை வேண்டுகிறேன்.
sankaran
Sujatha explained science even to a lay man in simple terms. He wrote stories in simple tamil and made the characters like next door neighbors.....And his loss is felt like one in your family.
Ram
தமிழ் பத்திரிக்கை உலகின் மிக சிறந்த எழுத்தாளர்களில் எப்போதும் நீஙகாத இடம் பிடித்தவர் சுஜாதா. கடந்த சில வாரஙளாக விகடனில் அவர் எ௯ழுதாதது விகடனில் ஒரு குறையாகவே இருந்தது - இனி எப்போதுமே அவர் புதிதாக எழுத மாட்டார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அனைவரும் இஙகு எழுதி இருப்பதைப்போல ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
Niraja
கற்றதும் பெற்றதும் நிறைவடைந்து 6 மாதங்கள் ஆகி விட்டதே, அடுத்த தொடர் பற்றிய அறிவிப்பை எதிர் பார்த்திருந்த எனக்கு இவரது மரண செய்தி மாபெரும் அதிர்ச்சி. Rather than the fact that he wrote in Thamizh, the fact the "he wrote" inspired me to read Thamizh. He reached out to the lay man on the streets and inspired them to read with his interesting style and choice of topics. It hurts to think that He is never going to write again. My heartiest condolenses to his family and friends.
Premraj
இனி யார் வருவார் இவர் போல், மனியனுக்கு பிரகு உலகம் போய் வந்தவர் இவர் போல் யார் வருவார்
Easan
தமிழ் உலகம் ஒரு உன்னத அறிஞனை இழந்துவிட்டது. அமரர் சுயாதாவின் குடும்பத்திற்கு எனது அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறேன்!
Sangeetha
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் .. we really missed one good soul..
Alfred
A great trend setter in Tamil language is gone. May God bless his soul and give him rest.
ramnath
Shocked and speechless
Balaji
சுஜாதா யென்ர மனித உடல் தான் மரைந்தது. அவரது படைப்புகலான நாவல்கல் கட்டுரைகல் அரிவியல் வினா விடைகல் யென் யெதர்க்கு யெப்படி நாடகம்கல் தமில் சினிமா கதை வசனம் சிரு கதைகல் வாக்காலர் யெவ்வலவு அரியும் கருவி இவை அழியாது.
Packiarajan
இங்கெ போதும் என்ட்ரு மேல் உலக வாசகர்களை மகிவிக்க சென்ட்ரு விட்டாயோ... வளர்க உன் புகல்...
Anandh Babu
We lost a wonderful real multifaceted personality who use to write everything from poem to technology. We expected that his Katrathum Petrathum will continue..But it is very sad to know that now it will be "Mutrum". His sense of humour is some thing great. Even for the condolences for him he will say from the Heven "Jalliyadai vithai ellam vendam". Thats Sujatha! Pirivom santhipom, Geno, Ganesh Vasanth, Katrathum Petrathum, Srirangathu devathigal, purananooru, kanaiyazhi, Voting machine, Bharathi movie (under his production, the so called risky movie in commercial point of view!)....the list continues when we think about Sujatha. We request Vikatan to publish a special issue on the memories of SUJATHA.
parasuraman
Iam still trying to believe this shocking news. Words cannot express my emotion, its a Great Loss!!!. He will Live Forever in His Books and Readers like all of us. May His Soul Rest in Peace.
Vijai
எழுத்தொன்றின் மூலம் எத்தனையோ உள்ளங்களை கொள்ளை கொண்ட கோமகனின் மரணம் செய்தியை ஏற்றுக்கொள்ள ஏனோ மனம் தடுமாறுகிறது. அவர்தம் அறிவுக்கும், ஆற்றலுக்கும் வணக்கம். தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு. ஆன்மா சாந்தி அடையட்டும்.
Pal
ஈடில்லா இழப்பு...
sampath
ஒரு நல்ல நட்பை இழந்தது போல உணர்கிறேன். அவர் எழுத்துக்கள் அவரை நம்மோடு என்றும் இருத்தி வைக்கும். திரு ரங்கராஜன் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
rajaram
சுஜாதா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்.சுஜாதா ஒரு சஹாப்தம்.திரு. சுஜாதா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக....
Bergin
இது ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பு. நான் அவர் எழுதிய கற்றதும் பெற்றதும் தொடரை வாசிக்க தவரியதில்லை. மவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிரேன்.
arul
He lives for ever with us through his writtings
jummakhan
Sujatha proved that an engineer could be a top tamil writer. I am 38 years old, and with out a trace of doudbt he is THE BEST of tamil writers in the last 38 years. Tamil literary world has lost its great writer.
James
He ia a great writer and it is a big loss for tamil readers. All his stories(Karaiyellam senpagappu, hostel days and nirvana nagaram etc.) are ever green The way how he wrote the science novels, even layman can also understand ver easily.
Ravi,Dallas, USA
சுமார் 24 மணிநேரங்களாக நான் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை! சுஜாதாவின் மரணம் என்னை சத்தியமாகவே பாதித்து விட்டது! "ஃப்ரீஸ் ஃப்ரேமில்" இருப்பது போன்ற ஒரு உணர்வு! இப்போது நினைத்து பார்த்தால் புரிகிறது! என் கணிணி ஆர்வத்தை - அதுவும் 16 வயதில் - ஊட்டிவிட்ட ஒரு "வர்சுவல்" ஆசான் அவராக இருந்திருக்கிறார்! அதைப்போல, இலக்கிய ஆர்வம் இல்லாத அதே சமயம் பாமரத்தனமான எழுத்துக்கள் பிடிக்காத எனக்கு நல்ல ஒரு நடையை "பொருளை" அறிமுகம் செய்து தமிழை எனக்குள்ளே வளர்த்திருக்கிறார்! என்னை அறியாமலேயே வாரப்பத்திரிக்கைகளில் அவர் எழுத்துக்களை தேடச் செய்திருக்கிறார்! சத்தியமாக சொல்கிறேன்! நான் மட்டும் அல்ல; பல ஆயிரக்கணக்கான - லட்சக்கணக்கான என்றும் தைரியமாக சொல்லலாம் - இளைஞர்களுக்கு கணிணியை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர் இந்த தமிழர் என்று நினைக்கும்போது பெருமையாகவும் அதே சமயம் அவர் இழப்பில் உண்டான வெற்றிடத்தை நினைத்து மயங்குகிறேன்! நாம் எல்லாரும் கணிணியில் தமிழ் எழுதுவதற்கு காரணமான ஆசானின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்!
Ganesakalai
May God rest his soul in peace.
Sivanandam
Irrecoverable loss to Tamil literature.He opened the new doors of science fiction to Tamil stories.May his soul rest in peace. Our hearfelt condolence to his family.
Atham
தமிழ் பத்திரிக்கை, இலக்கிய, மற்றும் திரை உலகிற்கு ஏற்பட்டிருக்கும் ஈடு செய்ய இயலா இழப்பு திரு.சுஜாதாவின் மரணம்.தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை தூய தமிழில் தந்தவர்,அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Ravi
நல்ல நகைச்சுவை உணர்வு. எளிமை. வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வம். இந்தியா முழுதும் வாழ்ந்த அனுபவம். எல்லாவற்றையும் கற்கும் ஆர்வம், திறமை. கடும் உழைப்பு. என்றும் 25 வயதான மனம். இவை அனைத்தும் ஒருவரிடத்திலா? முழு நேர உயர் அதிகாரி இவ்வளவு எழுத முடியுமா? முடியும் என்று காட்டி பிறரையும் ஊக்குவித்தவர். வெளி நாடுகளில் கூட பத்து பேர் செய்த சாதனையை ஒரே ஆளாய் தமிழில் செய்தவர். ஒரு இந்தியன் பத்து வெள்ளைக்காரனுக்கு சமம். ஒரு சுஜாதா பத்து இந்தியனுக்குச் சமம். இப்படி இன்னொரு எழுத்தாளர் வரமுடியுமா என்று பிரமிப்பாக உள்ளது. மிக்க்க்க்க நன்றி அய்யா! ரவி
Rajagopal
A loss to Tamil. He lives in his writings. What ever he did he did perfectly well. May his Soul rest in peace.
Singaravelan
Its unbelievable. I never ever had such huge impact on me when a public figure died.
Natarajan
Just unable to accept the fact that Sujatha is no more with us. I finished reading Srirangathu Devadhaigal 4th time yesterday night only and I am totally shaken now. I have met him 2 times and remember those memorable moments, my condolences to their family. It is a big loss for us... Natarajan from London
Uday
We lost a genious who took tamil literature several generations ahead!
Nanda
சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு! அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
Dwarakanath
My deepest condolence to Mr.Sujatha's Family. We really miss you sir.
Ram
This is a terrible loss to tamil literature, I feel so sad and at loss of words. Sujatha was simply a superb writer, I've been amazed by his knowledge and writing skills. Been posting my condolenses in all possible sites, which I've never done to any public figure so far. That shows the amount of spirit he had injected through his writings. I have no words to express my condolenses to his family, family and fellow tamizhans. Hope that TamilNadu Govt does something in remembrance of such a great personality. Sujatha we will miss you. We need to have a clone.
Karthik
Good people don't live for long. He was extrodinary human and was thinking ahead. It was good to be part of his thoughts and thanks for his fabulous contributions. I guess he must have thought about the next birth before he die. His soul may be looking for the right people to reborn, where he can start his second innings. Will that soul brings the same thoughts or same contributiont to the world on the next birth? God only knows.... Hats of you for this birth!
Chandran
ஜீரணிக்க முடியாத பேரிழப்பு.இள வயதினருக்கும் சக வயதுடைய எழுத்தாளரை இழந்து விட்டதாகவே தோன்றும். அது தான் சுஜாதா அவர்களின் சிறப்பு. பயணத்தின் போது 'கற்றதும் பெற்றதும்' படிக்க நேர்ந்தால், நிதழோரத்தில் தோன்றும் சிரிப்பை மறைக்க திணறுவதை மறக்க முடியாது.இனி யார் நமக்கு நடப்பு விவகாரங்களையோ அறிவியல் செய்திகளையோ நையாண்டியுடனும், நகைச்சுவையுடனும் சொல்லப் போகிறார்கள்? அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Saianand
You drained your brain for the gain of our people wealth. in knowledge You made a sense in science and created vision in our life & science. We miss you sir,We Salute you for your peerless contibution to us.
vellayanv
௯அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர். மறுபடியும் கற்றதும் பெற்றதும் இல்லை என்பதை சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
rajik
எல்லா துறையிலும் கால் பதித்து சாதித்தவர், அவர் வயது 73 என்று என்னால் நம்பமுடியவில்லை.அவரின் இழப்பு நிஜமாக ஈடு செய்யமுடியாதவை
ramesh
He is a legend, This is really a big loss for all.
Nana
There are no words to express his depth of his knowledge, wisdom and foresight. It is a great loss to his family and all of us. My sincere sympathy to his family. God bless his family and may find peace in time. Nana and Sundar
ramanan
What a Great writer. His style was impressive and he definetly started an era in tamil literature. His fame will be felt for the next centuries and he will be remmbered as a mile stone in Tamil development. Long Live SUJATHA
p
The demise of Writer Sujatha is a great loss. Tamil literature and cinema has lost a great soul.Our thoughts and prayers go to his family.
ajit
I learnt to read and enjoy tamil stories because of writer Sujatha. How can i forget Srirangathu Devadigal. If anyone wants to know about Srirangam 50yrs ago, we have to but just read this series, we will be transported in time. Not to mention the EVM. What a great man, What a great loss. He will always live in his stories for ever.
Anandaraj
நான் அவரின் ரசிகன். It is very sad he is not with us anymore. But his creations will be with us always.
Bala
This is an irreparable huge loss to Tamil print media and Tamil filmdom. He did yeomen service to the language and may his soul rest in peace. My deepest condolences to the bereaved family.

சுஜாதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Arul
பெரும் இழப்பு தமிழ் சமுதாயத்திற்கு.... ஆத்மா சாந்தி அடையட்டும்....
Veeraraghavan
நாங்கள் வாழ்கிற வாழ்க்கையெல்லாம் உங்களுடையது ! உங்கள் கதாபாத்திரத்தின் வாழ்க்கை தான் நாங்கள் வாழ்வது ! ஒரே ஒரு ஆசை ! இவருக்கு திருவரங்கத்தில் நினைவு மண்டபம் கட்டனும் ! இது ஒன்று தான் அவரை திருப்தி படுத்தும் ! சுஜாதா பைத்தியம்.
fairose
I felt like I lost someone from my family..it is a personal loss for all the vikatan fans..May God rset him in peace..
Kailash
கடினமான தலைப்புகளையும் எளிய வார்த்தைகளால் சாமானியனுக்கும் புரிய வைத்தவர்
Praneel
சின்ன வயதில் சுஜாதா என்றால் கணேஷ் வசந்த் வைத்து தான் கதை இருக்கும் என்றெண்ணி இருக்கிறேன். வளர வளர அவரின் மற்ற படைப்புகளையும் ரசித்து எந்த மாதிரி மனிதர் இவர் என்றெண்ணி வியந்து இருக்கிறேன். கற்றதும் பெற்றதும் நாங்கள் பெற்ற வரம். நல்ல எழுத்தாளர் மட்டுமல்லாமல் நல்ல விஞ்ஞானி. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் படைப்பாளி. ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்.
Nataraja
வார்த்தைகளிழந்து தவிக்கிறேன். என் வாழ்வின் ஒரு அங்கம் என்னைவிட்டுப் போனதாய் உணர்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Balaji
அருமையான மனிதர் நல்ல படைப்பாளி அவரின் இழப்பு ஒரு மாபெரும் இழப்பு அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை ப்ரர்த்திக்கின்றேன்
Murugiah
சுஜாதா பன்முகத் திறமை கொண்ட ஒரு அரிய எ௯ழுத்தாளர். பொறியியல், விஞ்ஞானம், கணினி, சமூகம், மதம், திகில் என்று அனைத்து ரகக் கதைகள், தொடர்கள், கட்டுரைகள், பெருங்கதைகளை தமிழர்க்குத் தந்தவர். தமிழ் திரைத் துறையிலும் தடம் பதித்தவர். புதிய கவிதைகளிலும் கவனம் செலுத்தியவர். சரளமான, படிப்பதற்கு சுகமான தமிழ் நடை. // இன்று நாம் பயன் படுத்தும் கணினி வாக்குப் பதிவு பொறியை தந்ததிலும் அவர் பங்குண்டு. // பொறியிலாளர். தமிழ் எழுத்தாளர். அப்துல் கலாம் அவர்களுடன் திருச்சி புனித வளனார் கல்லூரியில் பயின்றவர். பின்னர் கலாம் அவர்களூடன் இணைந்து விண் வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியவர். // இவ்வாறு பல் திறன் கொண்ட எழுத்தாளர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். // சுஜாதா திருநாடு அலங்கரிக்கச் சென்று விட்டார். // அவர்தம் எழுத்துக்கள் தாய்த்தமிழுக்கு அலங்காரம். // ஆத்ம சாந்திக்கு அரங்கனை வேண்டுகிறேன்.
SARAVANAN
சுஜாதா இறந்த செய்தி என்னைப் போன்ற வாசகர்களுக்கு பேரிழப்பு. இந்த பேரிழப்பு ஈடு செய்ய முடியாதது. சுஜாதா இல்லையென்றால் என்னைப்போன்றோர்க்கெல்லாம் இந்த வாழ்க்கையே இல்லை. ஏனெனில் நான் முதுகலை பட்டம் (எம்.சி.ஏ) பெற்ற கல்லூரி திருச்சிக்கருகில் உள்ள புத்தனாம்பட்டி கல்லூரியில் நான் படித்த கணினி துறை வருவதற்கு உதவி புரிந்தவர் சுஜாதா. அவர் எந்த நோக்கத்தில் அந்த கல்லூரிக்கு உதவி புரிந்தார் என்றால் இதைப் போன்ற மிகவும் சிறிய கிராமத்தில் கணினி துறை வந்தால் கிராமபுறத்திலும் கணினி பற்றிய அறிவு வளரும் என்ற நோக்கத்தோடு. அவர் கண்ட கனவை மெய்ப்பிக்கும் லட்சக்கணக்கான கிராமபுறவாசிகளில் நானும் ஒருவன். சுஜாதா வெறும் எழுத்தாளர் மட்டுமன்று அவர் என்னைப்போன்றோரின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த பெருமை கொண்ட ஒரு மனிதர். சுஜாதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Mahesh
எவராலும் நிரப்ப இயலாத வெற்றிடம். அவரின் மறைவு.அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
latha
I and my Wife are ~30 years readers and no one has even close to Sujatha in Tamil. His exposure and clarity and wide depth in Science to Genric and historical is beyond compare. "Srirankatthu devan" Sujatha Long live in his fame and rest in peace. He acheived also in Voting machine that politions should thank him always. With deepest condolences to his family and especially all his readers - Arul & Hema
Anitha
He is a Great Writer. Sooo Sad
shanmugam
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அழிவில்லை.சுஜாதா எழுத்துக்களும் அப்படித்தான். ஆன்மா அமைதி பெற பிராத்திப்போம்.
arun
I was deeply shocked to hear the loss.He was so talented and intelligent person.He had the art of mixing science,fiction,romance and values of life in his stories.I felt the pain as if I had lost one of my family memeber. Let his soul rest in peace.Our sincere condolonces to his family and let us pray for them.
pal
சுஜாதா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்.அவர் ஒரு சஹாப்தம். அவர் நினைவு தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.
GURU
என்னை போன்ற இளைஞர்களுக்கு தமிழ் மீது பற்று வர காரணம் சுஜாதா. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய அரங்கனை பிரார்த்திக்கிறேன்
Krish
சுஜாதாவின் இறப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். - கி. ரமேஷ்குமார்
balaji
சுஜதாவின் மரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு மாபெரும் இழப்பு. ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
Gopi
Since from my age of 10 I am his reader and fan. His writings was major inspiration and was always very young. You will be remembered forever.
BALASUBRAMANIAN
Sujatha is one of the most multi-faceted writers in Tamil. Sujatha was certainly a genius. Great loss for Tamil world.
Sivaprakash
It really is very sad to realize that a great writer and knowledgeable person is no more among us. I am sure that many of you will agree with me about missing his simple and wonderful writing. Our thoughts are with his family and pray that his sould will rest in peace.
Radha
Irrecoverable loss for all tamil people. We have lost one of the genius who made very easy for us to understand about science and fiction. May his soul rest in peace.
akilan
One of my favourite writers in Tamil. He is very intelligent and smart writer, His knowledge in every aspect of life is incredible. I am shocked to hear about his sudden demise. Its a huge loss for all tamil people. May his soul rest in peace.
Venkatakrishnan
We lost a great Scientist-writer who spread science among people thru simple language and made understanding easily. He is Hirudite with great authority in all subjects. His fictions carried science and hence generated enormous readership of his books and writings. The Void left by him will be difficult to be filled. "Vasanth" and "Ganesh" lost their mentor. Vikatan has a tribute to this great person should bring compliations of Vasanth and Ganesh Stories. May His soul rest in peace and my Condolensences to the Bereaved Family.

Sujatha, 74 years young man simplify the science and technology in his writing. He was fame for his "advanced thinking" and "so near by truth" writings. Unfortunately nobody in Tamil to write the spritual, science, literature things in humorous and simpleway like him. We lost the "one and only". Through Vikatan we got the lot of information from him like "katradhum petradhum", "ean etharku epadi"; lot of stories like "pudhia neethi kathaikal", "srirangathu thavathaigal" etc., Totally we lost 3 persons.... Sujatha and Ganesh-Vasath. Among the Tamil readers a scientific revolution made by Suja"thoughts" ! I salute Sujatha with tears...!!! Fan of "the Master", Ashok.
Indu
Nobody can fill his place , a great loss. Our deepest sympathy
Mannai
மிக மிக பெரிய இழப்பு இது, இனிமேல் அம்மா மண்டபத்தையும், திருவரங்க மதில்களையும்,லச்சுமி மாமியையும்,ஜீனோவையும்,கணேஷ்யும்,ஊழலையும், இவரை போல சிலாகித்து எழுத யாரு இருக்கா இங்க...அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
p.kannan
சுஜத மிக சிரந்த மனிதர்.எலுதுலகின் ஆசான்.
Vijayganesh
அவருடய குடும்பதாருக்கு என் ஆழ்ந்த அனுதாபஙல்.
muthu kumar
Deepest condolence to Sujatha family. AS a writer he did lot of changes in his writings as per the reader's taste and according to the generation. In film industry from"gayathiri" to "sivaji" are good examples, which showed him as a "EVERGREEN" writer. Eventhough the developed nations are using "paper" method for voting till now, we INDIANS are using a electronic voting machine, which was one of his acheivements in life. Till now its hard to believe about his death.May his soul rest in peace.
Gunalan
உங்கள் இழப்பை ஈடுகட்ட இன்னும் எத்தனை பேனாக்கள் வேண்டும். சுஜாதா குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
Saravanan
சுஜாதா ஒரு அற்புதமான எழுத்தாளர். மிகவும் எதார்த்தமான நடையில் அறிவியல் கதைகளை எழுதினார். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.
Govendha Raja
சுஜாதாவின் நித்திரை... நம் கண்களில் நீர்த்திரை..!
Gowth
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
MURALI
மிகவும் நல்ல மனிதர் புத்திசாலி எதார்த்தமானவர். சரி செய்யமுடியாத நஷ்டம் நமக்கு. ஆத்மா சாந்தி அடையட்டும்.
Shajahan
பொறியியல் படித்து தமிழ் மறக்கும் சமூகமே.. தமிழ் அறிஞன் இவன் ஒரு பொறியாளன் என்பதை மறந்து விடாதே.. - என் கண்ணீர் துளியை உன் பாதத்தில் சமர்பிக்கிறேன்.. அ.ஷாஜகான்,கூழமந்தல்
Appu
This was huge loss to Tamil world.His style was simple and will self understandable by any one ... It will hard belive that he was no more ..
Sri Ganesh
India's greatest human - a thorough professional; amazing writer; superb analyst - yet all a simple human. A genius who gave the nation the Electronic Voting Machine. Simply irrepairable loss. A role model for every Indian and A perfect person to be awarded the Bharath Rathna.
jayamala
Sujatha introduced new style in writing. Intelligent writing delivered in a simple, informal and humorous form. A Great Loss !!!!
Arun
சுஜாதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Mallika
மதியம் செய்தி நெட்டில் பார்த்ததும் அதிர்சி. உன்மையை எட்ருக்கோல்ல முடியவில்லை இன்னமும். எதையும் சிம்ம்பிலாக சொல்வது, நகைசுவை,எல்லா வயதினருக்கும் பிடிதமாதிரி எழுதுவது பட்டியல் நேலும். குடும்பத்திர்க்கு ஆழ்ந்த அனுதாபகல்
V
தமிழில் ஒரு எழுத்து கண் மூடிக்கொண்டது. யாராலும் நிரப்ப முடியாத பிரமாண்ட வெற்றிடத்தை ஏற்படுத்தியது காலமா? காலனா? பல விழிகளை எழுத்துச் சாவியால் திறந்த விரல்கள் மவுனமாக யார் காரணம்? மரணமே நீ தானே? ஆகவே மரணமே உன்னை சபிக்கிறேன். உயிர் எழுத்தின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
ashok
I belong to the generation which used look at awe, Sujatha's writings.I think no other Tamil writer has captured public imagination as Sujatha did.I felt lumps in my throat when I came to know of the great writers demise.An unimaginable loss to all his fans and to the language.Ratham ore niram will still kindle the same emotion if I read it even now.Not to mention of sree ranga thevathaikal,katradhum petradhum.I share the grief with the family members and all the fans, tears in my eyes.
syed
தமிழ் வாசகர்களுக்கு பெரும் இழப்பு...பெரும் ரசிகர்களை கொன்ட சிறந்த எழுத்தாளர்...அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...ஆப்ரிக்காவில் இருந்து ஹோஷ்மின்.
ravi
சுஜாதா ஒரு சஹாப்தம். அவர் நினைவு தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.
ram
ஈடு செய்ய முடியாத இழப்பு,தமிழ் இலக்கியதிகு மட்டும் அல்ல,தமிழகத்துக்கும் மட்டும் அல்ல,பாரத நாட்டிர்கெ ஒரு மாபெரும் இழப்பு,அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லம் வல்ல் இரைவனை ப்ரார்ஹ்டிப்பொர்ம்...
prabu
தமிழ் எழுத்துலகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும்,விஞ்ஞானத்துறைக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு திரு.சுஜாதாவின் மறைவு. உடலால் மறைந்தாலும் தன் எழுத்துக்களாலும்,சிந்தனைகளாலும்,சாதனைகளாலும் நம்மோடு என்றும் இருப்பார் திரு.சுஜாதா. அவரது மறைவிற்கு இதய அஞ்சலிகள். திரு.சுஜாதாவை அதிகம் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்த் 'விகடன்' மூலமாக அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதே அவருக்கு அளிக்கும் தகுந்த மரியாதையாக இருக்கும். த‌.பிரபு குமரன் மதுரை.
Vaishnavi
அணுவைப் பற்றியும் எழுதினார், சினிமாவிலும் முத்திரைப் பதித்தார், பாசுரங்களையும் விளக்கினார்... அவரது தமிழ்ச் சேவை என்றும் நிலைத்து நிற்கும்.
usa
திரு. சுஜாதா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
Bhuvana
எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
Arulkumar
Tamil literature and cinema lost a prolofic writer.Our deepst condolence for his demise.
srinivas
உண்மையான அழகிய தமிழ் மகன் உறங்கிவிட்டான். இந்தியாவின் தொழில் வளர்சிக்கு எழுத்தின் மூலம் வித்திட்டு எழுத்தின்மூலம் விஞ்ஞானத்தின் நுட்பங்களை விளக்கிய மேதை. மிகைபடுத்தாமல் மென்மையாக கருத்தை சொல்லும் மென்பொருள் விஞ்ஞானி. எல்லா துறையில் எழுதி இளைத்த இனிய தமிழன். ஜாதி அரசியலால் கவனிக்கபடாத இன்னொரு உ வே சா அவனுக்கு என் கண்ணீர் அஞ்சலி.
saro
திரு.சுஜாதா அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
manickam
ஜுனோ! போன்று மீண்டும் உயிர்த்தெழ மாட்டாயா? அடுத்த தலை முறைக்கு உன் போன்று யார் விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் கொண்டு செல்லப் போகிறார்கள். ஆமாம், எல்லா வலியையும் எழுதிய நீ! மரண வலியை எழுதாமல், கொடுத்துச்சென்றாயே!!!. வலியுடன் தியாகா.
Govindarajan
Shell shocked. Unbelievable. Void that CANNOT be filled for a long time. Sujatha was a mulifaceted writer and appeled to all age groups. People like Sujatha are born once in a century. May his soul rest in peace. HE WILL CONTINUE TO LIVE WITH HIS WRITINGS
rajesh
Its a monumental loss to tamil community.I felt like I lost somebody I loved very dearly.May the almighty bless his sould to rest in peace.
Kannan
சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு! அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
Surya
கல்கிக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்ந்த ஒரே எழுத்தாளர் சுஜாதாதான். போலித்தனம் சிரிதளவும் இல்லாத ஒரு நல்ல மனிதரை, அற்புதமான எழுத்தாளரை தமிழுலகம் இழந்து விட்டது!
hariharan
சுஜாதாவின் இழப்பு மிகப்பெறிய இழப்பு.தலை சிறந்த சாதனையாளரின் ஆன்மா சாந்தியடய அரந்கனாதனை பிராத்திபோமக.
Mohamed Iqbal
தமிழ் எழுத்துலகில் புதிய பாணியை ஆரம்பித்தவர். விறுவிறுப்பான தனது நடையில் வாசகர்களை கட்டிப்போட்டவர். விஞ்ஞானத்தின் சிக்கலான விஷயங்களையும் தனது எளிய நடையில் விளங்க வைத்தவர்.அவருடைய நளினமான நகைச்சுவையை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.அவருடைய குடும்பத்தினரின் துயரத்தில் தமிழ் வாசகர்களுடன் நானும் பங்கு கொள்கிறேன்.
bala
சுஜாதா எஙல் சிரந்த எல்லுத்ஹல்லர் இதய அஞல்லி பலசுப்ரமனியம் ஷென்னை
ALEXIS
ஒரு அறிவுப் பெட்டகம் அமரராகி விட்டது.
Palanichelvam
இவர் ஒரு சாதனையாளர். தமிழர்களுக்கு அறிவுபூர்வமான விஷயங்களையும், பொழுது போக்கான விஷயங்கள் போன்றவைகளையும் கொடுத்து வியக்க வைத்தவர். சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கும். இவரது இழப்பு தமிழர்களுக்கு ஒரு மிகப் பெரிய சோகம்தான். இவரது பெயர் எழுத்துலகில் என்றும் மறையாது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Thameem
திரு.சுஜாதா அவர்களின் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அறிவு ஜீவியின் இழப்பு ஈடு செய்ய இயலாதது.
Srikanth
திரு. சுஜாதா அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரது ஆத்மா சாந்தி அடைய அவர் நேசித்த அந்த அரங்கநாதன் துணை புரிவான்.
N
மரணம் ஒரு மகத்துவமான மாமனிதரை தன்னிடம் இழுத்துக்கொண்டு விட்டது. பிரிவோம் சந்திப்போம் ! காதல் கொண்ட அத்தனை இளைஙர்களையும் அழ வைத்தது, சிந்திக்க வைத்தது ! கரையெல்லாம் சென்பகப்பூ ! மனதை வருடித்தந்தது ! ஜூனோ கதாபாத்திரம் யாரால் மறக்க முடியும் ! ரகு மதுமிதா கதாபாத்திரத்தை மனதுக்குள் பதிவு செய்தார். அவர் கற்றதும் பெற்றதும் மற்றவர் மூளைக்குள் முளைக்க வைத்தார்! கணிப்பொறிக்காற்றை காவேரிக்கரைப்பக்கம் அழைத்து வந்தவர்..இயந்திர மனிதனுக்கும் இலக்கிய நயம் ஊட்டியவர் ! இன்று நம்மை விட்டுப்பிரிந்தாரா ? அய்யகோ எப்போது சந்திப்பது மீண்டும் !
AKM
அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக....
Sivalingam
ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. திரு.சுஜாதாவின் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த வருத்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.சுஜாதாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
Sirajudeen
Really we are loss one good and best writter in Tamil launguage..
Arumugam
மிக அரிதான மற்றும் அற்புதமான தமிழ் எழுத்தாளர். எனது ஆழ்ந்த இரங்கல்.
Ayub
திருவாளர் சுஜாதா அவர்களின் ஆத்மாவிற்கு எனது அஞ்சலி.
selvakumar
சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு தமிழர்களூக்கு !!
thiru
தனி அறையில் அவர் எழுத்துக்கள் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தன. வாழ்க்கையின் கோரமான அழுத்தங்களிலிருந்து மீட்டு மெதுவாக ஒரு தாயணைப்பை அங்கதமாகவே தாலாட்டிக் காட்டியவர். எதார்த்தங்களின் கோர நர்த்தனங்களை இவ்வளவு நையாண்டியாகக் கண்டிக்க முடியும் என்று வரைந்து காட்டியவர். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவியல் உலகத்தில் அன்னைத் தமிழை என்றும் உயர்த்திப் பிடித்தவர். என்ன மரணம் இது? என்றும் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றிய முடிவைச் சொல்ல எத்தனிக்கிறது?
Senthil
நகரம் சிறுகதையை படித்து அவரது எழுத்தின்பாற் ஈற்கப்பட்டு, ஏன்? எதற்கு? எப்படி? படித்து அவரது எழுத்திற்கு அடிமை ஆனேன். கற்றதும் பெற்றதும் 3-ம் பாகத்துக்காக காத்திருந்தேன். ஏமாற்றி விட்டார் (இறைவன்). அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்தனைகள்.
jas
தமிழ் எழுத்துலகத்திற்கு மிக பெரிய இழப்பு.சுஜாதா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Sivakumar
நான் உறைந்த்து போனேன்...போய் வாருங்கள் அய்யா...
Padmanabhan
I was shocked when I heard the news in the morning and yet to fully come out of it. I was eagerly awaiting another series of "Kattradhum Petradhum" in Ananda Vikatan. My deepest condolences to his family.
S
பாமரமக்களும் வின்யான தொளில்னுட்பத்தை எலிய முரையில் தெரிந்து கொல்ல சுஜாதாவின் பஙகு பெரும் சாதனை. தமிளர்கலுக்கு இது பெரில்ஹப்பு.
survi
I am deeply shocked to hear the news. Our heartfelt condolences to the bereaved family. Sujatha was our favourite and all his stories and articles are still itched in our memory. He will ever live in our heart. His articles are the first we look to when reading vikatan. Very hard to find another like him - who is so knowledgeable.
srinivasan
it was really shoking when i heard in the sun news. he is a great human being.... It is a big loss to all. Though his body is no more with us his presence will be felt by all the tamil readers.
varadharajulu
வாழ்க்கையில் கலர் கலர் கனவு காண்பது எல்லோருக்கும் சாத்தியம்தான் என்பதை உணர்த்தியவை அவருடய கதைகள் என்று சொன்னால் மிகையாகது
jbarani
விகடனில் 'கற்றதும் பெற்றதும் ' நின்ற போதுஅவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும், கண்டிப்பாக திரும்ப வந்து அந்த அனுபவங்களையும் எழுதுவார் என்று நினைத்திருந்தேன். தமிழ் எழுத்துலகத்திற்கு மிக பெரிய இழப்பு.
Joe
சுஜாதா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். சுஜாதா அவர்களின் கதை கட்டுரைகளை படித்து வளர்ந்தவன் நான். அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Ezhil
One writer who has passion in writing scientific stories in Tamil. His Great question Answer series Yen ? Yetharkku Yeppadi ? will be in our mind for long period. We cant bear his loss in Tamil Society.
Raj
சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு! அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Gopinathan
he is the one of an excellent writer in new genration writers. really vikatan will find difficulty to replace an another energetic writer for its magazines.
Palanivelrajan
மிகவும் வருந்தத்தக்க நிகழ்சி. he was working with shankar in such latest movie as Sivaji and still writing in magazines. could not believe this news. His novels such as En Iniya Iyandhira and Meendum Geeno were some of my favourites.
Geetha
It is a real shock to me this morning. My deepest condolence to his family. Tamil readers will really miss his work in the future. Nobody can replace him. He was old only physically and metally he stills was a youth.
kumar
சுஜாதா அவர்கள் தமிழ் எழுத்துலகின் சகாப்தம். அவரின் நாவல்கள் எத்தனையோ பேரை தமிழ் படிக்க வைத்து இருக்கிரது. அறிவியல் எழுத்தாளர்கலுக்கு அவர் ஒரு வழிகாட்டி.
bharathi
சுஜாதா தமிழக எழுத்தாளர்களில் அற்புதமான நடையை அறிமுகப் படுத்தியவர். தொழில்நுட்ப விஷயங்களை எளிதில் புரியும்படி எழுதியவர் சுஜாதா. வாசிப்போரை வசிகர எழுத்துக்களால் கட்டிப் போட்ட சுஜாதா காலத்தில் நிலைத்து நிற்பார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Ramkumar
சுஜாதாவின் மறைவு, தமிழ்கூறு நல்லுலகுக்கு ஒரு பேரிழப்பு...!
Thameez
My deepest condolence to his family members and all the avid Tamil readers and community. A great shcok to me in the morning still I had not overcome in my busy schedule of my office weekend work. Which novel to mentioned about his praise, Yen, Yetharku, Yeppadi which was first published in JV some years ago, I used to collect all the pages and made a file of it which is still my possession. The innovations which had been invented should be delivered to Tamil fraternity hereafter very lately without Sujatha.
britto
ஈடு செய்ய முடியாத இழப்பு - பத்திரிகை உலகுக்கு சுஜாதா பிரியன் சரவணன்

சுஜாதா பற்றி திரு.அப்துல் கலாம்

நேற்று சிங்கப்பூர் ஒலி வானொலி வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் சுஜாதா பற்றி ( ஒலி வடிவில் )

ஒலி துண்டை இங்கே டவுன் லோட் செய்துக்கொள்ளலாம்

(  நன்றி: ஒலி வானொலி )

சுஜாதா பற்றி பாலகுமாரன்

null

சுஜாதா பற்றி பாலகுமாரன் அவர்கள்

சில நினைவுகள் இருக்கின்றன. அவர் மறைவு செய்தியைக் கேட்ட பின் உள்ளுக்குள்ளே அவை மெல்ல சோகத்தோடு மலர்ந்தன.

அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிக்கையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

மண்டபம் முழுக்க அடர்த்தியான கூட்டம். புதிய உரைநடை எழுதுபவர்கள், புதுக் கவிஞர்கள், சிவப்பிலக்கிய எழுத்தாளர்கள், காதல் கதை எழுதுபவர்கள், துப்பறியும் கதை செய்பவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் திரு. மெளனி அவர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் திரு. மெளனியிடம் திரு.சுஜாதா போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திரு. மெளனி அவர்கள் நாங்கள் உங்கள் எழுத்தை படித்ததில்லை, உங்களை பற்றி இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வந்தேன் என்று சொல்ல, சற்றும் தயங்காமல் நான் உங்கள் எழுத்தை படித்திருக்கிறேன். எனக்கு அது பேருதவி செய்திருக்கிறது என்று சிறிது கூட சலனமில்லாமல் உண்மையான பணிவோடு பதில் சொன்னார். தொட்டதெற்கெல்லாம் சீறி விழும் எங்களை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு அந்த பணிவு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கவிதையில் உள்ள ஆளுமை போல சிறுகதையில் வரவில்லை. சிறுகதை சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லை என்று நான் கேட்க, இது ஒன்றும் கடினம் இல்லை. நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி ஒரு நேரம் குறிப்பிட்டார்.

நானும், அமரர் சுப்ரமணியராஜூவும் அவருடைய தமையனார் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் காத்திருந்தோம்। எழும்பூரில் டாக்டர் நாயர் பாலத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய புல் திடல் இருந்தது। அந்த புல் திடலில் நின்றபடி வெகு நேரம் இலக்கியம் பேசினோம். மறுபடியும் சிறுகதை எழுதுவது எப்படி என்று கேள்வி கேட்க, முதல் வாக்கியத்திலேயே கதையை ஆரம்பித்து விட வேண்டும்.

"நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை" .இது முதல் பேரா.

அடுத்த பேராவில் "அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।" என்று எழுது அல்லது "அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது" என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும்.

பொல பொலவென்று பொழுது விடிந்தது. “சார் போஸ்ட்” என்ற சத்தம் கேட்டது. நாளை விடிந்தால் தீபாவளி என்றெல்லாம் எழுதாதே என்று சொல்லிக் கொடுத்தார். என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசி என்று விவரித்துக் கொடுத்தார். எனக்கு அந்த சந்திப்பு மிக உபயோகமாக இருந்தது.

பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு கால கட்டத்து இளைஞர்களை வெகு அழகாக தமிழ் இலக்கியத்திற்கு இழுத்து வந்தார். கட்டுரையாயினும் சரி. கதையாயினும் சரி. படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமான கட்டளையாக ஏற்று எல்லா படைப்புகளையும் மிக நேர்த்தியாக நெய்து வந்தார்.

எழுத்தாளர் திரு। சாவி அவர்களுடன் பெங்களூருக்கு ஒரு சுற்றுப்பயணம் போனோம்। அதில் எழுத்தாளர் ராணி மைந்தன், சுப்ரமணியராஜூ, விசிட்டர் அனந்த், நான் என்று பலர் இருந்ததாக நினைவு। நாங்கள் எல்லோரும் திரு. சுஜாதா வீட்டிற்கு ஒரு காபி குடிக்க போய் அவரோடு பேசி விட்டு வந்தோம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு பத்திரிக்கையில் எழுதுவதற்காகப் போனதாய் சம்பவம் உண்டா. இது போல் முன் எப்போதும் நடந்ததில்லை. இனி நடக்குமா என்றும் தெரியவில்லை.

அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும் இருந்தது. சுஜாதாவின் மறைவு தமிழ் உரைநடைக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு. சுஜாதா ஸ்தூலமாக இல்லாது போனாலும் எவரெல்லாம் நல்ல தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடைய நெஞ்சில், அவர்கள் ஆசையில் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பார்.

( நன்றி: பாலகுமாரன் )

வாத்தியார் (http://lakshmansruthi.blogspot.com/2008/03/blog-post.html)

கொஞ்ச நாளாய் தமிழ் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘சுஜாதா இறந்துட்டாரே தெரியுமா' என்று கேட்டபடிக்கே இருந்தேன். சொன்னவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவை ஏதோ ஒரு ரூபத்தில் பரிச்சயபடுத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் கரையெல்லாம் செண்பகப்பூ சொல்ல, இன்னொருவர் ரோபோ பற்றி சொல்ல, மற்றொறுவர் நகரம் பற்றி சொல்ல, எங்கும் பாரபட்சமில்லாமல் நிறைந்திருந்தார்.

எனக்கு முதன் முதலில் சுஜாதாவை அறிமுகபடுத்தியது, அப்பா. அப்போது வந்திருந்த ரத்தம் ஒரே நிறம் தொடர். வாரபத்திரிக்கையில் வந்த தொடரை எல்லாம் மொத்தமாக பைண்ட் செய்து வைத்திருந்தார். படிக்கும்போது கிட்டதட்ட 14 வயதிருக்கும். வெறும் ஆனந்த விகடன் படித்த நேரத்தில் முதல் நாவலாக படித்தது இந்த ரத்தம் ஒரே நிறம். அப்போதைய படித்ததின் மனநிலை இப்போதைக்கு நியாபகம் இல்லை. இருந்தாலும், அப்பாவின் TVS Champன் மீது உட்கார்ந்து கொண்டு ஆடிகொண்டே பல மணி நேரம் படித்தது நிழலாடுகிறது. சுஜாதா ஈர்ப்புவிசை அப்போது ஆரம்பித்தது. பிறகு நீண்ட காலம் தொடரவெல்லாம் இல்லை. ஆனால் சுஜாதா என்ற அறிமுகம் இருந்தது.

பிறகெல்லாம் எல்லாரும் போல நானும் கற்றதும் பெற்றதும், சீரங்கத்து தேவதைகள், சில சிறுகதைகள், சில நாவல்கள் படித்ததுண்டு.
எந்த வார்த்தையிலும் அல்லது படைப்பிலும் மிதமிஞ்சிய செண்டிமெண்ட் இருக்காது. எதையுமே maturedஆக பார்க்கும் ஒரு எழுத்து. இவரின் எழுத்துக்களில் பெரிதாய் மேதாவித்தனம் இருக்காது. ஆனால், அதை லேசாக தொட்டுவிட்டு போகும் பலம் இவருக்கு உண்டு.
வைரமுத்துவில் தொடங்கிய என் மெலிதான புத்தக பழக்கம், அடுத்ததாக நகர்ந்தது இவரின் பக்கம் தான். சுற்றி சுற்றி எல்லாரும் இவரையே பரிந்துரை செய்தால் வேறேன்ன செய்துவிட முடியும்.
ஓரளவுக்கு விபரம் தெரிந்த நேரத்தில் நான் படித்தது “ஆ” நாவல். இதன் ஆதாரம் எல்லாம் ஒரு சின்ன வியாதி. மூளைக்குள் நடக்கும் சில விஷயங்கள். ஒரு எழுத்தாளராக இவருக்கு அதில் இருந்த கதைக்களன் இது மட்டுமே. அதன் அறிவியலை விளக்காமல், கதையோடு கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டி வெட்டி பரபரப்பு கூட்டி இருப்பார். அதன் பிறகு, இவரின் எந்த நாவலாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் படித்திருக்கிறேன்.
கமல், அவரின் சுஜாதா இரங்கலில் சொல்லி இருந்த விஷயம் சத்தியமானதாக பட்டது. சினிமாவில் சுஜாதா, என்பது ஒரு சமரசம் மட்டுமே. எழுத்தில் இருந்த அத்தனை பட்டாசுகளும் திரையில் வெளிபட்டதாக எனக்கு தெரியவில்லை. சில படங்களை பார்த்த பின்பு, இது சுஜாதா என்று சொன்னபின்பே தெரிந்தது. இவருக்கான களம் இல்லை சினிமா, எனக்கு தெரிந்தவரை. அல்லது, இவருக்கு தீனி போடும் அளவுக்கு நம் சினிமா இன்னமும் நகர்ந்து விடவில்லை.
எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை கவனம். ஒவ்வொரு விஷயமும் கவனிக்கபட்டால் மட்டுமே எழுத்தாக்க முடியும். இந்த பதிவாளரின் சுஜாதா பற்றிய பதிவு அதை தெளிவாக சொல்லும்.
அவரின் உடல்நிலை சரியில்லாத விஷயத்தையே நகைச்சுவையாக சொன்ன மனிதர் இவர். ரொம்ப கஷ்டப்படாமல் சுவாசம் நிறுத்தி இருப்பார்.
மரணித்தவர்கள் ஒரே ஒரு முறை எழுத ஒரு வாய்ப்பு அமைக்கபட்டிருந்தால், இவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கபட்டு எழுதப்படும் அந்த இரண்டு பக்க கட்டுரை படிக்க கண்டிப்பாக ஆவலாயிருப்பேன். இவரை விட மரணத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட யாராலும் முடியாது.


http://www.kumudam.com/magazine/Reporter/2008-03-06/pg4.php

வெறும் பத்து நாளில் ஒரு பழக்கம் அழுத்தமாக மனதில் படிந்து விட்டது. தூர்தர்ஷனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அகிலனின், ‘பாவை விளக்கு’ படத்தைப் பகுதி பகுதியாகக் காட்டினார்கள். அந்த மகாநடிகனின் ஒவ்வொரு கையசைவிலும் கண்ணசைவிலும் கட்டுண்டு, தினசரி ராத்திரி ஒன்பது மணிக்கு டி.வி. முன்னால் உட்கார்ந்து விடுகிற பழக்கம் போன வாரம் முழுக்க என்னைப் பிடித்து இருந்த ஒன்று. அப்படி அரைமணி நேர அற்புத உலகத்தை எதிர்பார்த்து புதன்கிழமை இரவு சுவிட்ச் போட, வேறு ஏதோ கறுப்பு வெளுப்பு உலகம். ‘பாவை விளக்கு’ முந்தைய நாள்தான் முடிந்து போனது என்பதை எப்படி மறந்து போனேன்?

சிவாஜியும், , சி.எஸ்.ஜெயராமனும், மருதகாசியும் ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ என்று விசாரித்தபடி கொலம்பியா இசைத்தட்டாக மனதில் சுழன்று சுழன்று வர, சுற்றி கனமாகக் கவியும் வெறுமை. மேஜை மேல் வைத்த மொபைல் சத்தமில்லாமல் அதிர்கிறது. இதுதான் இதுதான் என்று ஏதோ துக்கத்தை எதிர்பார்த்து எடுத்த கை நடுங்குகிறது. “சுஜாதா சார் காலமாகி விட்டார்.’’ நண்பரான பத்திரிகை ஆசிரியரின் குரல் எதிர்முனையில். தொடர்ந்து பேச ஏதுமில்லாததுபோல் நீண்ட நிசப்தம். ‘சரி’. எதுவும் சரியில்லைதான். ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டுமே, சொல்கிறேன்.

ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் என்ற சுஜாதா, என்னை விட இருபது வருடம் மூத்த இளைஞர்.. குமுதத்தில், ‘நைலான் கயிறு’ என்று ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்தபோது துணிச்சலான, நவநாகரிகமான ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்தேன். முதல் ஷாக், சுஜாதா மாணவ மாணவியரைச் சந்தித்தது தினமணி கதிரில் புகைப்படத்துடன் வந்திருந்தது. ‘ரொம்ப சாதாரணமா, எலெக்ட்ரிக் ட்ரெயின் பிரயாணி மாதிரி இருக்கீங்களே’ என்று ஒரு மாணவி கேட்க, பக்கத்தில் மீசை இல்லாத சாதுவான சுஜாதா என்ற ஆண் படம்.

அப்புறம் கோடாலி மீசை, கொம்பு மீசை எல்லாம் வைத்துக்கொண்டு எலெக்ட்ரிக் ட்ரெயினில் வம்பு வளர்க்கும் சக பிரயாணி பற்றி கதிர் தீபாவளி மலரில் (‘குரலா அது? டி.எம்.எஸ்.ஸுக்கு ஜலதோஷம் பிடித்த மாதிரி’) சுஜாதா கதை எழுதினார். கூடு விட்டு அவர் கூடு பாய, கதை சொல்கிற இளைஞர். ‘நான் இறங்கி பிளாட்ஃபாரத்தில் நடந்து போவதைப் பார்த்தேன்’ என்று முடிக்கிற, திரும்பத் திரும்பப் படிக்க வைத்த அந்த வரியும் கதையும்தான் நான் முதலில் படித்த மாஜிக்கல் ரியலிசம். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸைப் படிக்க, என் மாஜிக்கல் ரியலிச நாவலை எழுத எனக்கு அதற்கு அப்புறம் முப்பது வருடம் கடந்து போனது.

இடைப்பட்ட இந்த நீண்ட காலகட்டத்தில் இலக்கியப் பத்திரிகையில் கவிதை எழுதினேன். வெகுஜனப் பத்திரிகையில் அதை சிலாகித்தார் சுஜாதா. அதன் மூலம் பரவலாக வெளியே தெரிய வந்தேன்.

முந்தைய பாராவை எழுத்துப் பிசகாமல் அப்படியே எடுத்து தமிழில் ஒரு நூறு எழுத்தாளர்கள், கவிஞர்களாவது தங்கள் கட்டுரைகளில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். கொள்ள வேண்டும். அந்த நன்றி மறந்தால், எங்க வாத்தியார் பாணியில் சொல்வதாக இருந்தால், ‘இன்று ராத்திரி சாப்பாடு கிடைக்காது.’

மூன்று தலைமுறைகளைத் தொடர்ந்து வசீகரித்து வரும் சுஜாதாவின் எழுத்து ரகசியம் என்ன? எழுத்தில், இலக்கியத்தில், அறிவியலில் அவருக்கு இருந்த தீராத காதல். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படிப்பதில் காட்டுகிற அதே ஈடுபாட்டை நானோ டெக்னாலஜியின், ஸ்டெம் செல் உருவாக்கும் மருத்துவ நுட்பத்தில் காட்டுவார் அவர். காலத்தோடு கைகோத்துச் செல்லும் எழுத்து பாணி அவருடையது.

மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டர் கற்பழித்தது என்று கதை எழுதி, தலையில் ராட்சத பல்புகள் சுழல ஒரு யந்திரம் நடந்து வருவதாகப் படம் போட்ட காலத்திலேயே, அவர் கதையிலும் கட்டுரையிலும் நாம் தொட்டு உணரக் கூடிய கம்ப்யூட்டரைக் காட்டினார். பஞ்சாயத்து போர்ட் நூலகத்தில் பத்திரிகை படிக்கக் கிடைக்கிற கிராமப்புற, சிறு நகர இளைஞர் கூட்டத்துக்கு அவர் இப்படிக் காட்டியது கம்ப்யூட்டரை மட்டுமில்லை. ஷியாம் பெனகலின் ‘அங்கூர்’, பாபு நந்தன் கோடுவின் ‘தாகம்’ போன்ற ஆர்ட் சினிமாக்களை, ஞானக்கூத்தன் கவிதைகளை, எம்.பி.சீனிவாசன் சேர்ந்திசையில் ஆயிரம் கார்ப்பரேஷன் பள்ளிச் சிறுவர்களை. ஒரே குரலில் ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்று பாரதி பாடலைப் பாடவைத்த அற்புதத்தை, சால்வடார் டாலி, பிகாசோவின் ஓவியத்தை, பீட்டில்ஸின் ‘செர்ஜண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட் கிளப்’ இசை ஆல்பத்தை, ஹோலோகிராமை, ஆழ்வார் பாசுரத்தை.

எதைத்தான் விட்டார் அவர்? எழுத அவரும், படிக்க நாமுமாகத் தொடர்ந்து கொண்டே போகும் இது என்று தோன்றியது. நேற்று தூர்தர்ஷனில் ‘பாவை விளக்கு’ முடிந்து போனமாதிரி சட்டென்று மனதில் அழுத்த, திரும்ப ஒரு வெறுமை எங்கும் நிறைகிறது.

எனக்கு அண்மையில் ஒரு இ_மெயில் அனுப்பியிருந்தார். ‘என்னது? ஐம்பத்து ரெண்டெல்லாம் வயதில் சேர்த்தியா? ஏன் அதற்குள் வேலைக்கு குட்பை சொல்லி விட்டு இலக்கிய சேவையில் முழுமூச்சாக இறங்க நினைக்கிறாய்? எழுபத்துரெண்டு வயதில் இன்னும் நான் பார்ட் டைம் கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்கிறேனே? வேறு எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டில் மனைவிக்கு ஒரு ஏழெட்டு மணி நேரம் தனிமையில் நிம்மதி கிடைக்குமில்லையோ?’

நாலு வரிக் கடிதத்திலும் இந்த நகைச்சுவைதான் சுஜாதா. For me, he goes on for ever.
இரா. முருகன்

Thiruppur Krishnan:

“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் - என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!

கணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.
-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்

கேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே?

பதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.


ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா
ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.
உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.


வாக் போகையிலே… - மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா?””ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”

சுஜாதா மறைவு குறித்து - மனுஷ்ய புத்திரன்

சுஜாதா:நம் காலத்து நாயகன்
( 1935-2008 )

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.

 

சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.

( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )


 

சுஜாதா: ( 1935-2008 ) நவீனத் தமிழின் அடையாளம்

இந்தக் குறிப்பு சுஜாதாவின் எண்ணற்ற வாசகர்களின் இடையறாத தடுமாறும் தொலைபேசி குரல்களுக்கிடையே எழுதப்படுகிறது. இந்த குறிப்பினால் அந்தக் குரல்களின் ஆழம் காணமுடியாத துயரத்தின் நடுங்கும் நிழல்களைத் தொட முடியாது. நமது கனவுகளோடும் சிந்தனைகளோடும் வெகு ஆழமாக உரையாடிய மகத்தான கலைஞனின் நீங்குதல் நமது அந்தரங்கத்தின் ஒரு பகுதியை இழப்பதாகவே இருக்கிறது. சுஜாதா அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசகனின் அந்தரங்கம். தமிழில் வாசிப்பு பழக்கமுள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கத்திலும் கனவிலும் ஏதாவது ஒரு மூலையில் அவர் படிந்தே இருப்பார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது கூறினார் ‘மனித வாழ்வின் தீராத புதிரும் விசித்திரமும் என்னவென்றால் மனிதர்கள் இந்த வாழ்க்கையிலிருந்து திடீரெனெ காணாமால் போய்விடுவதுதான்’ என்றார். சுஜாதாவும் இப்போது அந்த விசித்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார்.

மொழியை வெறுமனே பயன்படுத்தும் கலைஞர்களுக்கிடையே தான் புழங்குகிற மொழியைப் புதுப்பித்து அதற்கு புதிய உள்ளோட்டங்களை வழங்குகிறவனே மகத்தான கலைஞனாகிறான். 20ஆம் நூற்றாண்டில் பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழில் உருவாக்கிய நவீனத்துவத்தின் பேரலைகள் மொத்த படைப்பியக்கத்தையும் மாற்றியமைத்தது. அதற்குப் பின் தமிழ் உரைநடைக்கு புதிய வேகமும் வண்ணமும் கொடுத்த பேரியக்கம் சுஜாதா. கடந்த ஐம்பதாண்டு காலமாக சுஜாதாவின் இந்த எழுத்தியக்கம் தமிழ் உரைநடைக்கு எண்ணற்ற புதிய சாத்தியங்களை வழங்கியது. தமிழ் வெகுசன எழுத்தின் அசட்டு மிகை உணர்ச்சிகளையும் பாசங்குகளையும் சுஜாதாவின் வருகை துடைத்தெறிந்தது. குடும்பக் கதைகளும் வரலாற்று புனைவுகளும் நிரம்பிய பரப்பில் அறிவுணர்ச்சி மிகுந்த ஒரு நுண்ணிய அழகியலை உருவாக்கினார். சுஜாதா தமிழுக்கு வழங்கிய இந்த புத்துணர்ச்சி தமிழில் படைப்பிலக்கியம் சார்ந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு பெரும் உத்வேகம் வழங்கியது. சிலர் அதை தங்கள் இலக்கிய பாசாங்குகள் காரணமாக வெளிப்படையாக அங்கீகரிக்க மறுத்தனர். ஆனால் எழுபதுகளுக்கு பிறகான தமிழ் புனைகதை பரப்பில் சுஜாதா உருவாக்கிய தடங்கள் அழுத்தமானவை. மீறிச் செல்ல முடியாதவை.

ஒரு எழுத்தாளனின் அக்கறைகள், ஈடுபாடுகள் எவ்வளவு பரந்த தளத்தில் செயல்பட முடியும் என்பதற்கு அவர் ஒரு தனித்துவமான உதாரணம். சங்க இலக்கியம், புதுக் கவிதை, நாட்டார் பாடல்கள், ஹைக் கூ என கவிதையின் அத்தனை வடிவங்களோடும் அவர் தீவிரமான அக்கறை கொண்டிருந்தார். தமிழ்க் கவிதை இயக்கத்தை வெகுசன தளத்தில் கொண்டுசென்றதில் அவரது செயல்பாடுகள் முக்கியமானவை. உரைநடையை தனது பிரதான வெளிப்பாட்டு முறையாக கொண்ட சுஜாதா கவிதை மீது காட்டிய இந்த தீவிர அக்கறை நவீன கவிதை இயக்கத்தை நோக்கி புதிய வாசகர்களை தொடர்ந்து உருவாக்கியது. அவர் உண்மையில் தீவிர இலக்கிய இயக்கத்திற்கும் வெகுசன வாசகர்களுக்குமிடையே பெரும் இணைப்புப் பாலமாக இருந்தார். ஒவ்வொரு இளம் எழுத்தாளனைப் பற்றி அவர் எழுதினார். தமிழில் வெளிவந்த பல கவிதை நூல்கள் குறித்த முதல் குறிப்பை அவர் எழுதியிருக்கிறார்.

சுஜாதா அறிவியலை தமிழில் எழுதுவதன் சவால்களை மிக வெற்றிகரமாக கையாண்டார். அறிவியலை தமிழில் மொழிபெயர்ப்பதல்ல; அதை ஒரு சிந்தனை முறையாக உள்வாங்கி எழுதியதன் வழியாக சுஜாதா தமிழ் அறிவியல் எழுத்துக்களின்  அடையாளமாக மாறினார். அவரது புனைகதைகள், அதன் நுண்ணிய சித்தரிப்பு சார்ந்த அழகியலுக்காகவும் உயர்குடி மத்தியதர மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் வீழ்ச்சிகளை, பாசங்குகளை காட்டும் யதார்த்தத்திற்காகவும் நவீனத் தமிழிலக்கியத்தில் காலத்தால் அசைக்க முடியாத இடத்தைப் பெற்று நிற்கின்றன.

அவர் எந்த அளவு பிரபலமாக அறியப்பட்டாரோ அந்த அளவு விலகியிருப்பவராகவும் தனிமை உணர்ச்சி கொண்டவராகவும் இருந்தார். தனது படைப்பு சார்ந்த தனிமையை ஆரவாரங்கள் தீண்டக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். எழுதுவது ஒன்றே அவருக்கு பெரும் போதமாக இருந்தது. புகழ் சார்ந்த எந்த பலவீனங்களும் பதட்டங்களும் அவருக்கு இருந்ததில்லை. அவருடைய புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு அவரை மிகவும் வற்புறுத்தியே அழைத்து வந்திருக்கிறேன். புகழுரைகள் அவருக்கு அலுப்பையும் மிகுந்த கூச்சத்தையும் உண்டு பண்ணின. ‘பத்து நிமிட புகழுக்காக இந்த உலகில் மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பார்’ என்பார் அடிக்கடி. தமிழ் இலக்கிய உலகின் ஊழல்களால் அவருக்குரிய மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் இங்குள்ள இலக்கிய அமைப்புகள் முற்றாக மறுத்தன. அவருடைய அஞ்சலி குறிப்பில் குறிப்பிட அவருக்கு வழங்கப்பட்ட இலக்கிய விருதுகளின் பெயர் ஏதும் இல்லை. ஆனால் அது அவருக்கு என்றுமே அவசியமாக இருந்ததுமில்லை. அவர் இலட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்துடிப்பினால் இயங்கிய கலைஞன்.
 
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே நிகழ்ந்த போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு அவரது இறுதி மூச்சு அதிர்ந்துகொண்டிருந்த மருத்துவமையின் அறையில் ஒரு கணம் நிற்க முடியாமல் மனம் கலைந்து வெளியே வந்தேன். அது நான் அறிந்த சுஜாதா அல்ல. அவர் தான் ஒரு போதும் அப்படி பார்க்கப்படுவதை விரும்ப மாட்டார். அவர் அருகில் இருந்த நண்பர் தேசிகன் என்னிடம் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒன்று இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய முடியுமா’ என்று கேட்டார். நான் சுஜாதாவுக்கு எத்தனையோ முக்கியமான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இது அவருக்காக அல்ல, அவரின் பொருட்டு நான் கடைசியாக வாங்கிய புத்தகம்.

( நன்றி: இந்தியா டுடே 12 மார்ச் 2008,  மனுஷ்ய புத்திரன் )

சுஜாதா புகழ் அஞ்சலி கூட்டம் - படங்கள்/விடியோ

சுஜாதாவிற்கு நேற்று புகழ் அஞ்சலி கூட்டம் நடந்தது. அதன் படங்களை indiaglitz போட்டிருக்கிறார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் இதே இடத்தில் விடியோ பதிவும் போடுவதாக சொன்னார்கள்.

பிரிக்க முடியாத மௌனம்

(பிரிக்க முடியாத மௌனம் - எஸ்.ராமகிருஷ்ணன் அஞ்சலி கட்டுரை )

நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது.

கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு இல்லையா என்று ஆதங்கத்துடன் சொன்னான். நிஜம் அது.

 
 
 
 
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.

படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள்.

இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது.

ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது.

எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.

ஒரு எழுத்தாளராக அவரது புனைகதைகள் உருவாக்கிய வாசகர்கள் ஒரு பக்கம் என்றால் அவரது விஞ்ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிமுகத்தின் வழியாக
தங்கள் வாழ்வை உருவாக்கி கொண்டவர்கள் மறுபக்கம். இரண்டிலுமே அவருக்குத் தனியிடமிருக்கிறது.

சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் அளவு கன்னடத்தில் கூட வேறு எவரும் எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை.

நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது.

ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார் என்று.

ஒரு முறை லேண்ட்மார்கினுள் அவர் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்து பார்த்தேன். அவர் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தவுடனே தீர்மானித்துவிடுகிறார். சில நிமிச நேரம் கூட தேர்வு செய்ய யோசிப்பதில்லை. எப்படி சார் அது என்று கேட்டவுடன் தாழ்ந்த குரலில் பட்சி சொல்லுது என்று சிரித்த முகத்தோடு சொன்னார். அவருக்குள் இருந்த பட்சி கடைசி வரை சரியாகவே சொல்லிக் கொண்டிருந்தது.

தமிழ் கதையுலகில் அவரது எழுத்து விசேசமானது. இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்பதற்கு அவரது நடையே உதாரணம். சொற்களை அவர் பயன்படுத்தும் விதம் ஆச்சரியமளிக்ககூடியது. குறிப்பாக அவரது வர்ணனைகள். சொல்லை உடைத்து சுருக்கும் லாவகம். அதை சவுக்கடி வசனநடை என்று சொல்லலாம். ஒரு சொடுக்கில் தாவிச் செல்லும் அற்புதம் கொண்டது.

சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியத் தேர்ச்சியும் தமிழ் கவிதைகளின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் மிக முக்கியமானது. அவர் கவிதைகளை உணர்ந்து வாசிப்பதையும் தான் உணர்ந்தவற்றை உலகிற்கு அடையாளம் காட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இன்று பிரபலங்களாக உள்ள பல முக்கியக் கவிஞர்கள் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அதுவும் அவர்களது முதல் தொகுப்புகள் வெளியான நாட்களில் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டவர்கள்.

அவரது கவிதைரசனை மொழிக்கு அப்பாற்பட்டது. சங்கக்கவிதையை ரசிப்பது போலவே ஹைகூ கவிதைகளை ரசித்திருக்கிறார். அவருக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் பிடித்திருக்கிறது இன்னொரு புறம் மகுடேஸ்வரனையும் பிடித்திருக்கிறது.

அவருக்குள் எப்போதுமே ஒரு கவிஞன் இருந்தான். அவன் மிக தன்னடக்கமானவன். எழுதி தன்னை காட்டிக் கொள்ளாதவன். மாறாக கவிதையை ரசிப்பதையும் கவிதையின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதிலும், கவிதை வாசித்தலின் வழியாக தியானநிலையை உணர்ந்தவனுமாக இருந்திருக்கிறான். பகடிக்காக அவர் எழுதிய மரபுக்கவிதைகளில் கூட இலக்கணம் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கணிப்பொறியியல், இலக்கியம் நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞான கதைகள், சிறுகதைகள் குறுநாவல்கள், இசை என்று அவர் தொடாத துறைகளே இல்லை. எதிலும் அவர் நுனிப்புல் மேயவில்லை.  சிறிய உதாரணம், ஒரு முறை அவரோடு நீலி கதை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு நிமிசம் இருங்கள் என்றபடியே அவரது புத்தக அடுக்கிலிருந்து நுறு வருசங்களுக்கு முன்பு வெளியான பெரிய எழுத்து நீலிகதையை கொண்டு வந்து வாசித்து காட்டி விளக்கினார். அவர் தேடுதலில் கொண்ட நாட்டம் ஆச்சரியமளிக்க கூடியது. அதே நேரம் தனக்கு தெரியாதது தொடர்பாக அவர் உடனே ஒத்துக் கொள்வதோடு அதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்பதற்கும் தயாராக இருப்பார்.

தமிழ் சினிமாவில் அவரது கதைகள் முறையாகப் படமாக்கபடவில்லை என்ற குறை அவருக்குள் நெடுங்காலமாகவே இருந்து வந்தது. ஆனாலும் தான் வசனம் எழுதுகின்ற படங்கள் பற்றி அவருக்கு ஒரு குறையுமில்லை. அத்தோடு ஐம்பது வருசமாக எழுதப்பட்டு வந்த அடுக்குதொடர் வசனங்களும் கண்ணீர் மல்கி பெருகும் நீண்ட பிலாக்கணங்களையும் விலக்கி அவர் எழுதிய நறுக்கு தெறித்த வசனங்கள் இன்று என் போன்றோருக்கு முன்னோடியாக உள்ளன.

அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது.

எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.
சுஜாதாவின் எழுத்து மூன்று தலைமுறைகளை தாண்டி இன்றும் தொடர்ந்த வாசிப்பிற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அவரது ஆளுமை எண்ணிக்கையற்ற வாசகர்களை உருவாக்கியிருக்கிறது. மேம்படுத்தியிருக்கிறது. அவர்களில் நானும் ஒருவனாகயிருக்கிறேன்.

சுஜாதா அதிகம் பேசக்கூடியவரில்லை. பொது விழாக்களில் கூட அவர் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் கொள்வார். அவர் பேசுவிரும்பியதெல்லாம் எழுத்தானது. சர்சைகள் விவாதங்கள். பாராட்டுகள் யாவற்றையும் மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இனியும் அவரோடு பேசிக் கொள்ள அவரது எழுத்து மட்டுமே இருக்கும். அவரது மௌனம் கவிதையைப் போல எங்கும் எப்போதும் நீக்கமற்று நிறைந்திருக்க கூடும்.

பின்குறிப்பு. இதைக் கணிப்பொறியில் எழுதும் போது கூட முதல்முதலாக கணிப்பொறியில் எழுதியவர் சுஜாதா தான் என்ற நினைப்பு மேலோங்குகிறது. அவரைப்போல கணிப்பொறியில் எழுத வேண்டும் என்ற ஆசை சமீபமாக தான் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக நானும் சொல்லிக் கொள்கிறேன்.

போய் வாருங்கள் வாத்தியாரே.
எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்.
 
( எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றி )


சுஜாதா பற்றி ஜெயமோகன்

சுஜாதா: மறைந்த முன்னோடி

ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்திருக்கிறார்.

என் தலைமுறையைச்சேர்ந்தவர்கள் இலக்கியத்தில் நடை என்ற ஒன்றின் தனித்த வசீகரத்தை சுஜாதா மூலமே துல்லியமாக உணர்ந்திருப்பார்கள். அன்று சாண்டில்யன், பிவிஆர், அகிலன்,நா.பார்த்தசாரதி போல பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும்தான் வாசகர்களைக் கவர்ந்தார்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.

என் பள்ளிநாட்களில் குமுதத்தில் தொடராக வந்த ‘அனிதா- இளம்மனைவி’ நாவலை மீண்டும் மீண்டும் வாசித்தது இபோதும் நினைவுக்கு வருகிறது. பாலு என்பவர் வரைந்த நீளமுகம் கொண்ட கணேஷ்! [அப்போது வசந்த் இல்லை]. அக்கதையின் சித்தரிப்புமுறை அளித்த வசீகரத்தை இப்போதுகூட அதே உணர்வுடன் மீட்ட முடிகிறது. அதேபோல என்னை அப்போது கவர்ந்த இன்னொரு படைப்பாளி அசோகமித்திரன். ‘நானும் ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்துஎடுத்த சினிமாபப்டம்’ இலாரியா’ போன்ற கதைகளை குமுதத்தில் பலமுறை வாசித்து அந்த நுண்ணிய எளிய மொழியின் புதுமையில் மயங்கினேன். ஆனால் பெயர் நினைவில் இல்லை. பத்துவருடம் கழித்து அசோகமித்திரனைப் படிக்கும்போது அக்கதைகளின் வரிகள் எல்லாமே அப்படியே நினைவில் இருப்பதை உணர்ந்தேன். அவரா இவர் என்று பிரமித்தேன்.

அனிதா இளம் மனைவியை பதினைந்து வருடம் கழித்து மீண்டும்படித்தபோதும் சுஜாதாவின் நடை அதே துள்ளலுடன் இருந்ததை உணர்ந்தேன். அதில் நான் கவனித்த நுட்பங்களை இளமையிலேயே ரசித்திருந்தேன். கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா?’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார். அதில் மோனிகா அறிமுகமாகும் காட்சியில் அவளுடைய குணச்சித்திரம் ஏழெட்டு வரிகளுக்குள்ளாகவே உருவாகி வரும் மாயம்.!

சுஜாதா அன்றும் இன்றும் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவரது எழுத்துக்கு ஆழம் இல்லை என்று இன்று எனக்குத்தெரியும். அது முற்றிலும் மேற்தளத்திலேயே நிகழ்ந்துமுடியும் எழுத்து. அதன் இலக்கியத்தன்மை அதில் உள்ள அபாரமான சித்தரிப்புத்திறனால் மட்டுமே உருவாவது. மொழியால் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா. அவரிடமிருந்து நான் கற்றவை ஏராளம். ஆகவேதான் என் முதல் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் [திசைகளின் நடுவே] என் முன்னோடிகளாக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருடன் சுஜாதாவையும் சொல்லியிருந்தேன். சிற்றிதழ்ப்புனிதங்கள் கறாராகப் பேணப்பட்ட அன்று அது ஒரு விவாதமாக ஆகியது. என் ‘விசும்பு’ அறிவியல் புனைகதைகள் நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம்செய்திருந்தேன்.

சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே. புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பலவகையிலும் நிகரானவை அவை. தமிழில் குறைவாகவே கவனிக்கப்பட்ட அவரது எழுத்து நாடகங்கள்தான். யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். மேலும் நாடகங்களில் அவர் தனக்கு மிக அந்தரங்கமான ஒரு தளத்தையே எடுத்துக் கொள்கிறார். மத்தியதர வைணவ பிராமண குடும்பம்.பதன் தர்மசங்கடங்கள், தடுமாற்றங்கள்.

சுஜாதாவை தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சிசித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப்பொருந்திவருபவை. சிறுகதையின் செவ்வியல் வடிவம் சரியாக உருவாகி அவ்ந்த சிறுகதைகள் அவை. அவற்றை இரண்டாகப்பிரிக்கலாம். ‘குதிரை’ போன்று சிறந்த நகைச்சுவைப்படைப்புகள் ஒருவகை. ‘எல்டொராடோ’, ‘மாஞ்சு’ போல நடுத்தர வற்கத்தின் அன்றாடவாழ்க்கையின் ஒரு தருணத்தை முன்வைக்கும் துல்லியமான யதார்த்தக்கதைகள் இன்னொருவகை.

ஆனாலும் சுஜாதாவின் நடையே அவர் தமிழுக்கு அளித்த முதல்பெரும் கொடை. தமிழ் இலக்கியவரலாற்றில் அவரை நிலைநாட்டும் அம்சமும் அதுவே. சொல்லப்போனால் தமிழ் உரைநடையில் புதுமைப்பித்தனுக்குப் பின் நிகழ்ந்த முக்கிய்மான அடுத்த பாய்ச்சல் என்று அதையே சொல்லவேண்டும். அது ஒருவகை முன்னோடிவகைமை- ‘டிரென்ட் செட்டர்.

சுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராயவேஎன்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்ல அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம். பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.

இரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும். அதுவே அவரது பலவீனமும் கூட. அவருடைய படைப்புலகில் அவரை மீறி நிகழும் எதுவும் இல்லை. நெகிழ்ச்சிகள் கவித்துவ எழுச்சிகள் எதுவுமே இல்லை. ஆழ்மனம் நோக்கிய பயணமே இல்லை. ”எனக்கு எழுத்துமேலே இமோஷனல் ஈடுபாடு கெடையாது” என்று ஒருமுறை சொன்னார். ஆனால் அங்கதத்துக்கு அந்த மூளைத்திறன் பெரும்பலம்.

நான் நாலைந்துமுறையே அவரைச் சந்தித்திருக்கிறேன். பொதுவாக அதிகம் பேசாதவர். ஆனால் முசுடு அல்ல. பேசும்தருணம் வாய்த்தால் பேசிக் கோண்டே இருப்பார். வண்ணதாசன் மகளுக்கு திருமணம் நடந்தநாளில் மண்டபத்தில் அவர் என்னிடம் வைணவம் பற்றி விரிவாக பேசியதை நினைவுகூர்கிறேன்.1997 ல் விஷ்ணுபுரம் எழுதிய பின் அதை நவீன இலக்கியம் அறிந்த வைணவ அறிஞர் ஒருவரிடம் காட்டவேண்டுமென்று தோன்றியதும் அவரை அணுகினேன். அதைப்பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். திருவட்டாறு கோயிலுக்கு ஒருமுறை வர விரும்பியதாகச் சொன்னார். இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஆதவன்,சுஜாதா, இந்திராபார்த்த சாரதி ஆகியோரைப்பற்றி எழுத திட்டமிட்டிருந்தேன்.

சுஜாதாவின் முகங்கள் பல. உள்வாங்கும் குணம் கொண்ட, அனுபவவாத அறிவியல் நோக்கு கொண்ட , தொழில்நுட்பக் காதலரான மனிதர். நவீன அறிவியல் மட்டுமே உலகை மீட்கும் என்ற எண்ணம் கொண்டவர். நான் அறிந்தவரை சாதிமத நோக்குகளுக்கு அப்பாற்பட்டவர், குடும்பமும் அப்படியே. அதற்கு அப்பால் அரங்கன் மீது மட்டும் உணர்வு ரீதியான, அவராலேயே விளக்க முடியாத, ஆழ்ந்த பிரேமை இருந்தது. அதற்கு அவருடைய இளமைப்பருவம், ஆழ்வார்களின் தமிழ் மீது அவருக்கிருந்த அடங்காத காதல் போன்றவை காரணம்

அவரைப்புரிந்துகொள்ள முக்கியமான ஒரு நிகழ்வு உதவும். திருச்சிபக்கம் பின்தங்கிய வணிக ஊர் ஒன்றில் போலியோவால் கால்களை இழந்து ,கல்விகற்பிக்கக்கூடப் பொருட்படுத்தப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, சுயநம்பிக்கையே இல்லாமல் தனக்குள் சுருண்டு வாழ்ந்த முஸ்லீம் இளைஞன் ஒருவனின் சில கவிதை வரிகள் வழியாக அவனைக் கண்டுபிடித்தார் அவர். இருண்ட உள்ளறைக்குள் நாள்கணக்கில் வாரக்கணக்கில் அவன் வாழ்ந்த அந்த உயரமான பிசுக்கு படிந்த பழங்காலக் கட்டிலை நான் கண்டிருக்கிறேன். அவன் அறியாத ஓர் உலகிலிருந்து சுஜாதா அவனை நோக்கி கையை நீட்டினார். அவனுக்கு தன்னம்பிக்கையை அளித்தார். அவன் வெளியுலகைப் பார்கக்ச்செய்தார். வெளியுலகம் அவனைப் பார்க்கும்படிச் செய்தார். படிப்படியாக அவனை ஒரு முக்கியமான கலாச்சாரச் சக்தியாக தமிழ்ச்சூழலில் நிலை நாட்டினார். மனுஷ்யபுத்திரன் சுஜாதா தமிழுக்கு அளித்த கொடை. அவரது எழுத்தில் அதிகம் தெரியாத அவரது அகம் எத்தகையது என்பதற்கான முக்கியமான ஆதாரம்.

முன்பொருமுறை எழுதிய கடிதத்தில் கீதைபற்றிய என் கேள்விக்குப்பதிலாக, விவாதத்தை முடிக்கும்முகமாக சுஜாதா ‘அறிதலின் எல்லைகளை உணர ஒரு வயது இருக்கிறது. இந்த புரோட்டீன் காலிஃப்ளவர் சலித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அது அதை மீறி எதையாவது அறிய ஆரம்பிக்கிறது” என்று எழுதினார்.

எல்லையில் ஞானத்தன் ஞானமஃதே கொண்டு
எல்லா கருமங்களும் செய்து
எல்லையில் மாயனைக் கண்ணனைத்தாள்பற்றி
யானோர் துக்கமும் இலனே



சுஜாதாவுக்காக ஓர் இரவு

ஒரு மரணத்திற்கு எதிர்வினையாக நாம் குறைந்தபட்சம் வைக்கக் கூடியதென்ன? ஓர் இரவின் துயில் நீத்தலே. இன்றும் ஏராளமான பழங்குடிச் சமூகங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. இரவு நம்மைச்சூழ்ந்து அமைதியாக இருக்கையில், செயலழிந்த பிரபஞ்சம் ஒன்றை உணரும்போது, நாம் மரணத்தின் இருண்ட வெளியை மிக அந்தரங்கமாக அறிகிறோம். அது ஒருவரின் இழப்பு என்பதைத் தாண்டி மரணம் என்ற பிரபஞ்சநிகழ்வாக ஒருகணமேனும் நம்மை அடைகிறது.

இன்றிரவு முழுக்க விழித்திருந்தேன். படுத்தும், எழுந்தமர்ந்தும். சுஜாதாவின் எந்த நூலையும் படிக்கத்தோன்றவில்லை. அவை ஒருவகை கொண்டாட்டங்கள். இத்தகைய மனநிலைகளுடன் இயைவன அல்ல. இயல்பாகவே நாடி நாலாயிர திவ்யபிரபந்தத்தை படித்தேன்.

சுபமங்களாவின் நிகழ்ச்சி ஒன்றில் கோமல் சுவாமிநாதன் துணையுடன் சுஜாதாவை நான் முதலில் சந்திக்கும்போது என்னிடம் அவர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசித்ததுண்டா என்றார். அத்தகைய நூல்களை வாசித்ததுண்டு என எப்படிச் சாதாரணமாகச் சொல்ல முடியும் என்று கேட்டேன். வாசித்துக் கொண்டே இருக்கிறேன் என்றேன். அந்தப் பதில் சுஜாதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லா மனநிலைகளிலும் அவ்வப்போது அதைப்பிரித்து எதையாவது படித்து சரியான வரிகள் கண்ணில்பட்டதும் மூடிவிட்டு அதைப்பற்றி எண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

கோமலுக்கு வைணவ இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடும் தொடர்ந்த வாசிப்பும் நல்ல சேகரிப்பும் இருந்தது என்பது பலர் அறியாத தகவல். மூவரும் அன்று அதிகமும் நம்மாழ்வார் பற்றியே பேசிக் கோண்டிருந்தோம். பிற்பாடு நான் விஷ்ணுபுரத்தில் நம்மாழ்வார் சாயலில் ஒரு கதாபாத்திரத்தை கேலிச்சித்திரமாக எழுதிவிட்டேன் என்று சுஜாதா மிகவும் மனம் வருந்தி அந்நாவலை முழுக்கப் படிக்க மறுத்துவிட்டார். நெடுநாட்களுக்குப் பின்னர் நம்மாழ்வாரை நான் தமிழின் மாபெரும் கவிஞர்களில் ஒருவராக கருதுகிறேன் என்று எழுதியிருந்ததை வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசினார். [ கபிலர், ஔவையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ, திருவள்ளுவர், கம்பன், நம்மாழ்வார்]

”ஏன் அப்படி எழுதினீர்கள்” என்றார் சுஜாதா, ஆழ்ந்த வருத்ததுடன். ”அது அந்த நாவலின் இலக்கிய உத்தி மட்டும்தான் சார். அதில் ஒட்டுமொத்தமாகவே உயர்தத்துவம் மீதான ஒரு அங்கதம் அப்படி பல கோணங்களில் வெளிப்படுகிறது” என்றேன். சுஜாதாவால் இறுதிவரை அதை ஏற்க இயலவில்லை. ஆனாலும் மீண்டும் நம்மாழ்வார் பற்றி பேசினோம்.

”ஆண்டாளை விடவா?” என்றார் சுஜாதா. அதே கேள்வியை ஆண்டாளின் தீவிர ரசிகரான வேதசகாயகுமார் பலமுறை கேட்டிருக்கிறார். ஆண்டாளிடம் நெகிழ்ச்சியும், தன்னைமீறும்கவித்துவ வேகமும் இருக்கிறது. பெரியாழ்வாரிடம் நெகிழ்ச்சியின் உச்சநிலைகள் உள்ளன. ஆனால் பெருங்கவிஞன் என்பவன் ஆழ்ந்த அறிவுத்தளமும் கொண்டவன். அவன் தத்துவஞானியும் கூட. நம்மாழ்வாரின் கவிதைகளில் விரிந்த தத்துவநோக்கும், கல்வியும் சுத்தமான பித்துநிலையுடன் பிறிதிலாது முயங்குகின்றன. பறவைகள் பறப்பது அழகு. யானை பறக்குமென்றால் அதுவே அற்புதம்.

இன்றிரவெல்லாம் விட்டுவிட்டு நம்மாழ்வாரையே படித்துக் கொண்டிருந்தேன். மேலே எழுப்பி காற்றில் உலவ விடும் ஒரு வரியுடன் வீட்டுக்குள் உலவி டீ போட்டு குடித்து சற்று நேரம் படுத்து மீண்டும் நூலைப்பிரித்தேன். அரவிந்தர் கவிதையின் மொழிவெளிப்பாட்டை Poetic utterance - கவித்துவ உளறல் என்கிறார். கவிதையின் உச்சம் Supreme poetic utterance என்கிறார். அந்நிலையில் மொழி மொழியாக மட்டுமே நின்று பேருவகையை அளிக்கிறது. ஒரு சொல்லிணைவு அதற்கு அப்பால் சிந்தனை நகர முடியாமல் நிறுத்திவிடுகிறது. பலசமயம் உச்சகட்ட கவித்துவநிலைகள் பிரமிப்பு நெகிழ்வு ஏக்கம் போன்ற ஆதி உணர்ச்சிகளில் நேரடி வெளிப்பாடுகள் மட்டுமே. ஆகவே அவை வெறும் வர்ணனைகள் அல்லது கூச்சல்களாகவே சாதாரண வாசிப்புக்குத் தென்படுகின்றன. விளக்க முடியாத ஒருமொழிநுட்பமே அவற்றை என்றுமழியா கவிதையாகவும் ஆக்குகிறது.

ரத்தினங்கள் கூழாங்கற்களாக இடறும் ஒரு நிலவெளியில் விழிபிரமித்து நடப்பது போன்றது நம்மாழ்வாரின் கவிதை. இந்த இரவின் தனிமையில் வெளியே தென்னையோலைகள் மேல் கோடைமழையின் தூறல்ஒலி தவளைக்கூச்சலுடன் சேர்ந்து ஒலிக்கும்போது என் தமிழ் ஒரு மொழியென்ற நிலையையே இழந்து தூய ஆனந்தவெளியாக முன்னால் நிற்கிறது.

”அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகமர் சூழொளியன்…”[2410] ”அழகமர் சூழொளி” என்ற சொல்லிணைவைத்தாண்டிச் செல்ல இயலவில்லை. சச்சிதானந்தம் என்ற கலைச்சொல்லின் ஒரு தமிழ் வடிவம் என ஒருவகையில் சொல்லலாம். அழகும் சாரமும் ஆன ஆனந்த வெளியானவன். ஆனால் அழகு அமர் சூழ் ஒளி என்ற சொல்லிணைவு அது மட்டுமல்ல. அந்த சொல்லிணைவு அந்நாவில் அமர்ந்த தருணத்தை சென்றடையும் வரை நம்மை இட்டுச்செல்லும் பயணம் அது.

”துளிக்கின்ற வானிந்நிலம்”. [2223] வைணவர்களின் வழக்கமான வாசிப்பிலும் உரைமரபிலும் பக்தி மற்றும் வேதாந்தம் சார்ந்து வரும் பொருள்கோடல்களைத் தாண்டிச்சென்று மதம்சாராத பக்திசாராத தூய கவிதைவாசிப்பொன்றை நிகழ்த்தினால் சடகோபனின் கவிதையில் திறக்கும் வாசல்கள் பல. கவிதையில் ஒட்டுமொத்த பாடலின் பொதுப்பொருள்தளத்தைவிட்டு எடுத்துக்கூட நாம் சொல்லிணைவுகளை நம்முள் விரித்துக் கொள்ளலாம். துளிக்கின்ற வானமே இந்நிலம். வானின் ஒருதுளி. இதன் அனைத்து இழிவுகளுடனும் இது வானமே. அளிக்கின்ற மாயப்பிரான் பள்ளி கொள்ளும் விசும்பு.

கருமை என்ற பொருள்நிலையை ஒரு பேருருவகமாக ஆக்குகின்றன வைணவ இலக்கியங்கள். ஒரு கருத்துநிலையாக ஒரு பிரபஞ்சநிலையாக இறுதியில் ஒரு பிரபஞ்ச அனுபவமாக. ‘மைதோய் சோதி” [2283] கருமையடர்ந்த பேரொளி. கருமையே பேரொளியாக ஆனது. பேரொளி என்பதே கருமையின் ஒரு நிலைதானா? மீண்டும் மீண்டும் பலநூறு முறை இந்த முரண்களுக்குள் சென்று வருகின்றன ஆழ்வார் பாடல்கள்.

நம்மாழ்வாரின் பாடல்கள் நெகிழ்ச்சியின் எல்லைகளுக்குள் முழுமையாக வருவது தலைவி,செவிலித்தாய் பாவனைகளில் பாடப்பட்ட பதிகங்களில். தமிழின் மகத்தான காதல்பாடல்கள் பல இவற்றில்தான் உள்ளன. சங்ககாலம் தொடங்கி அறுபடாது வளர்ந்து வந்த தமிழ் அகமரபின் உச்சநிலைகள் என ஏராளமான பாடல்களைச் சொல்ல முடியும். மிக எளிமையாக வெளிப்படும் உணர்ச்சிகரம் அந்த நேரடித்தன்மையாலேயே கவிதைவாசகனை தோயவைத்துவிடுகிறது. ”நின் பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்தென் நெஞ்சமே” [2436]ஆவிதழுவுதல் என்ற சொல்லை பல்லாயிரம் முறை சொன்னாலும் இணையாகாத உருவகம்.

காமம் பக்தியாக உன்னதப்படுத்தப்பட்டிருப்பது[Sublimation] உலகமெங்கும் உள்ள பக்திப்பாடல்களில் காணப்படுகிறது. கவிதை எல்லாவற்றையுமே உன்னதப்படுத்தும் கலை என்ற நோக்கில் இக்கவிதைகளின் மதிப்பு மிக அதிகம். தமிழின் மிக்ச்சிறந்த காதல்வெளிப்பாடுகள் நம்மாழ்வாரின் கவிதைகளில் உள்ளன. அவை மானுடக்காதலென்னும் நிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு காதல் என்ற தூயநிலையாக ஆக்கபப்ட்டவை. அவற்றை பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளின் உன்னதமாக்கலுடன் ஒப்பிட்டு வாசிக்கும் வாசிப்பு பல புது அனுபவங்களைத் திறக்கக் கூடும்.’அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதா என்னும்’ [2449]காதல்வேகத்தை கவிதையின் வழியாகவே அறிய முடியும்.

பக்தியின் உச்சநிலையை புரிந்துகொள்ள இன்றைய வாசகனுக்கு இருக்கும் இடர்கள் பல. கவிதைகளின் வழியாக அங்கே சென்றுசேர ஒரு வழி உள்ளது. உலகமெங்கும் எல்லா கவிதைகளிலும் காணப்படும் ‘தன்னை இழந்து பெரிதொன்றில் கரைவதற்கான’ மனநிலையை ஒரே மைய உணர்வாக உருவகித்து அதன் ஒரு பகுதியாக பக்தியையும் எடுத்துக் கொள்வதே அந்த பாதை. அந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதக் கவிதைகளில் உள்ள இயற்கையும் ,இருபதாம் நூற்றாண்டு இருத்தலியல் கவிதைகளில் உள்ள காலமும் ஒன்றே. அதையே விண்ணளந்தோன் என்றும் அம்பலத்தாடியவன் என்றும் வானுறை பிதா என்றும் கவிஞர் சொல்கிறார்கள் என்று கொள்ளலாம்.

நம்மாழ்வார் கவிதைகளின் பக்திவேகம் இரு எல்லைகளைத் தொட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. அந்த முதல்முழுமைக்கும் தனக்குமான தொலைவை உணரும்போது வரும் ‘அக்கணமே அழிந்துமறையத்துடிக்கும்’ ஆவேசம் ஒருபுறம். அந்த முதல்முடிவிலா வெளியை தானறியும் தன்மையுடன் சொந்தமாக்கிக் கொண்டுள்ள பரவசம் மறுபக்கம். ”நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை” [2464] என்று பெருமாளை சொந்தமாக அருகில் வைத்திருக்கும் அந்த நிலையை ஊகித்து இரவின் தனிமையில் புன்னகைசெய்துகொண்டேன்.

இன்றிரவு முழுக்க நம்மாழ்வாரின் சொற்கள். நூற்றுக்கணக்கில். விடிந்து வெகுதொலைவில் பறவைகள் எழும் ஒலி. ”பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்!” புவனமுழுதையும் ஆளும் பறவைகள் சொல்கின்றன விடிந்துவிட்டதென்று. இந்த இரவு சுஜாதாவின் நினைவுக்கு.

அதுதான் கடைசிப் பக்கம்...

(அதுதான் கடைசிப் பக்கம்... கி. கஸ்தூரி ரங்கன் தினமணியில் எழுதிய கட்டுரை)

அறுபது ஆண்டு பந்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே என்று மனதில் சோகம் நிரம்பி வழியும் இத் தருணத்தில் பழைய நினைவுகள் அலை மோதுகின்றன.

ரங்கராஜன், சுஜாதாவைக் கைப்பிடித்து அதே பெயரில் பிரபல எழுத்தாளராகப் பிரகாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1950ம் ஆண்டுகளில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ரங்கராஜனின் அண்ணன் என் வகுப்புத் தோழன். அப்போது ஏற்பட்ட நட்பில் தியாகராய நகர் மூஸô சேட் தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அவன் அப்பா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளர். மாடியும் கீழுமாகப் பெரிய வீடு. ரங்கராஜன் அரை டிராயரில் காட்சியளிப்பான். அவன் தம்பி ராஜப்பா, அண்ணன் கிச்சாய் அக்கம் பக்கத்து விடலைப் பசங்கள் எல்லாரும் மாடி வராந்தாவில் கவர் பால், அரை மட்டை சகிதம் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த இடத்தில் தடுப்பாட்டம் தான் ஆட முடியும். பந்தை ஓங்கி அடித்தால் அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்துவிடும். எனவே அரை மணியில் அலுத்துவிடும். ஆட்டம் முடிந்தது என்று கலைந்து செல்வோம்.

நானும் ரங்கராஜனும் ஏதாவது விஷயம் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இருவருக்கும் பொதுவாக இருந்த எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகைகள் பற்றிப் பேசுவோம். அப்போதே ""குப்பை பத்திரிகை''களுக்கு மாற்றாக வித்தியாசமான பத்திரிகை வெளியிட வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.

அதற்கான சந்தர்ப்பம் வெகு ஆண்டுகள் கழித்து இருவரும் வேலை நிமித்தமாக தில்லியில் குடியேறியபின்தான் வந்தது. ரங்கராஜன் மதறாஸ் இன்ஸ்டிடியூட்டில் எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு தில்லியில் சிவில் ஏவியேஷன் துறையில் வேலைக்குச் சேர்ந்தான். நான் ஜர்னலிஸம் படித்துவிட்டு நியூயார்க் டைம்ஸ் நிருபரானேன். பிரம்மச்சாரிகளாக இருந்தவரை இருவரும் வேறு சில தனிக் கட்டைகளுடன் அறை ஒன்றில் தங்கியிருந்தோம். இருவருக்கும் குடும்பம் என்று ஏற்பட்ட பிறகு கரோல்பாக்கில் வேறுவேறு வீடுகளுக்கு மாறினோம். அப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு.

மீண்டும் பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை பலமாகப் பிடித்துக் கொண்டது. ""நீ தைரியமாக ஆரம்பி. நான் எழுதுகிறேன்'' என்று சொன்னான். நானும் 1965 ஆகஸ்டில் "கணையாழி' மாத இதழைத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று அவனுக்குப் புனைப்பெயர் சூட்டி கடைசிப் பக்கம் எழுத வைத்தேன்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இடையிடையே நீண்ட இடைவெளி விட்டு ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசிப் பக்கம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. 2006ல் கணையாழி நின்று போயிற்று. அவனுடைய விருப்பத்தின் பேரில் கணையாழியின் பழைய பக்கங்களை மீண்டும் வெளியிட முயற்சி மேற்கொண்டேன். சித்தன் ஆசிரியர் பொறுப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ""யுகமாயினி''யில் கடைசி 16 பக்கங்களை கணையாழி பக்கங்கள் என்று அறிவித்து, அதில் மீண்டும் சுஜாதாவின் கடைசிப் பக்கத்தைத் தொடங்கச் செய்தோம்.

துரதிர்ஷ்டவசமாக சுஜாதா ஓர் இதழில் மட்டுமே எழுத முடிந்தது. திடீரென்று நிமோனியா ஜுரத்தில் படுத்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து மீண்டுவரவில்லை. அவருடைய கடைசி எழுத்து கணையாழி கடைசிப் பக்கத்துக்கு எழுதியதாகத்தான் இருக்கும்.

100 நாவல்கள், 250 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், ஒரு டஜன் நாடகங்கள், அரை டஜன் வெற்றிப் படங்கள் என்று எழுத்துலக சகலகலாவல்லவனாகத் திகழ்ந்த போதிலும் சுஜாதாவுக்கு ஓர் ஆதங்கம் இருந்தது. தமிழ்நாட்டில் தனக்கு உரிய இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். அதைக் கடைசியாக எழுதிய கணையாழி பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

முதிர்ந்த வயதில் அவருடைய ஈடுபாடு திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும், திவ்யப் பிரபந்த பாசுரங்களிலும் சென்றது. அவற்றில் மூழ்கி ரசித்து சிறுசிறு கட்டுரைகளில் தந்திருக்கிறார். மாணவர்களுக்கும் புரியும்படி திருக்குறளை எளிய தமிழில் தந்திருக்கிறார்.

இலக்கியத்திற்கு அப்பால் அவர் நிகழ்த்திய சாதனை அவர் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த ""அம்பலம்'' இணையதளம். மற்றொரு மகத்தான சாதனை தேர்தல் நடைமுறையை எளிதாக்கியிருக்கும் வாக்குப் பதிவு இயந்திரம். இதற்காகவாவது அவருக்கு ஒரு பத்ம விருது வழங்கியிருக்கலாம்.

(கட்டுரையாளர்: தினமணியின் முன்னாள் ஆசிரியர்)

( மெயில் அனுப்பிய உமா மகேஷ்வரனுக்கு நன்றி)

இன்று நடந்த இறுதி அஞ்சலி புகைப்படம், மற்றும் வீடியோக்களை Indiaglitz எனக்கு மெயிலில் Links அனுப்பியிருக்கிறார்கள்.. என்ன இருக்கிறது என்று இன்னும் நான் பார்க்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.

Tribute To Sujatha
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/14577.html

Kamal's Tribute To Sujatha
http://www.indiaglitz.com/channels/tamil/article/36903.html

http://www.indiaglitz.com/channels/tamil/article/36890.html

Press சரியாக கவரோஜ் கொடுக்கவில்லை என்று சிலர் கமெண்ட் மற்றும் மெயிலில் தெரிவித்திருந்தீர்கள்.  சில இடத்துக்கு பிரஸ் ரிப்போட்டர்ஸை அனுமதிக்கவில்லை. அதே போல் சில பேட்டிகள் கேட்ட போது மறுத்திருக்கலாம். இன்று பிரஸ் மற்றும், போலீஸின் ஒத்துழைப்பை வெகுவாக பாராட்டலாம். 

Indiaglitz காத்திக்கு நன்றி.


in_memory_of_writer_sujatha.jpg

இங்கு தான் அனைத்துமே
போவதென்ப தெவ்விடம்
உமது நல்ல சீடருள்
அவர்கள் புனையும் கதைகளுள்
பல்கி வாழ வாழ்த்துவேன்
அந்தம் அறு ரங்கராஜனை !!

http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html

A really intelligent writer. I really loved his work in Mudhalvan and also some of his literary work.

May God give his family the strength to cope up with this loss.

LKS


Gravatar LG,
thanks dude,
really a touching tribute thx on behalf of all the fly and well wishes.

The obsequcies are scheduled for Friday the 1st March.


Gravatar Sry
Friday 29th Feb i meant,


Gravatar சுஜாதாவின் 'கடவுள்' கட்டுரை தொகுப்பிலிருந்து

மனிதனைப் பொறுத்தவரை உயிர் என்பது உடல் இயக்கமா ? அவன் நினைவுகளா ?........
உயிர் என்பது என்ன அன்று ஆதாரமாக சிந்திக்கும் பொழுது, நம் ஞாபகங்கள் தான் உயிர்...



btw that was a good tribute-tribute.


Gravatar Kamal wrote that small piece of poetry on Ananthu.

I just changed it for Sujatha.


Gravatar Sujatha's contributions were remarkable.

He was the one to start with for any novice tamil readers. He know to feed all type of audience.

We lost an enthusiast. Let his journey be peaceful.


Gravatar May God give his family the strength. Loss for tamil literature.


Gravatar I have read only some portion of Sujatha's writings. But his diversity, his style and pioneering efforts have left an indelible mark in my heart. Words aren't sufficient to describe him.

Waiting to hear Kamal's reaction...

All film buffs out here: get his Thirakkadhai Ezhudhuvadhu Eppadi. Simple and brilliant, as always!

Hats off, LG! You did what I thought you would.


Gravatar I am an ardent reader of Sri.Sujatha(Rangarajan) since 1968. This void can never be filled. We are not going to see another versatile genius writer like this for a long long time.I pray Lord Arangan to give his family the strength to bear this irrepairable loss as well as for his millions of fans.


Gravatar hmmmmmmm.....

ennaththa solla?


Gravatar En iniya iyandhira, Srirangaththu Devadhaigal, Aen Edharkku Eppadi were are all gems from him. Am sure Sujatha would be a role-model for many current and future writers (tamil or otherwise). Avar pughazhal endrum nilaikkattum.


Gravatar May S. Rangarajan soul rest in peace, but writer Sujatha will be there always with us through his great contribution to Tamil.

Every Tamil hearts salutes his soul.


Gravatar May this great writer soul rest in peace.


Gravatar இரங்கல் சொல்ல இடம் தேடிய எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. சில இழப்புகளை மட்டும் ஏன் நமது மனது சுள்ளென்று உணர்கின்றது என்பதற்கு விளக்கம் சொல்ல இயலவில்லை. அப்பட்டியலில் இதுவும் ஒன்று.


Gravatar It could be a Personal loss to
all those who atleast spend an hour a week to read tamil literature.He was such a prominent writer in Tamil literary world.Be a serious reader or a casual one, they must have across Sujatha and must be feeling the loss.

Not only that he was good at writing, he was able to identify potential writers and encourage them.

His genius and versatilty are incomparable.


Gravatar Words fail me ! On seeing the ticker on Sun News yesterday night flashing that Sujatha is no more, I was disturbed. I always will consider him my greatest teacher. His works will be treasured for generations to come. I will always equate him with Isaac Asimov for his prolific output on all things under the sun.


Gravatar

நீவிர் மறையவில்லை ஐயா!

தமிழ் உள்ளவரை வாழ்வீர்!!

உம் புகழ் வாழும!்

உம் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும்

ஓர் அன்பு ரசிகன்


Gravatar More than a prolific writer, he was a prolific reader. The versality of his reading never ceased to amaze me, until today.

It would not be an exaggeration to say that some of us learnt to love Tamil writings and the language itself thanks to his efforts more than anything else.

We will sorely miss him.


Gravatar Couldn't imagine he is no more.


Gravatar Words fail me.

May his soul rest in peace.


Gravatar My heart feels heavy ... i will miss his writings for sure.

RIP Sir.


Gravatar வாழ்க்கையிலும் VCR-ல இருக்கறது மாதிரி ஒரு rewind button இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்

- முதல்வன் படத்தில் சுஜாதா


Gravatar Its tough to believe that he is actually no more. So many times he has made me laugh and think. I feel very sad.

Knowing him as someone who has done so much on earth, I'm sure he will do much more on heaven. Rest in Peace Sir.


Gravatar இப்பிடி விட்டுட்டு போய்ட்டையே வாத்யாரே


Gravatar It is difficult to imagine that Sujatha is no more.


Gravatar உங்களின் இழப்பு தமிழனுக்கும் தமிழுக்கும் பேரிழப்பு....


Gravatar இனி எங்கே கற்பது அல்லது எங்கே பெறுவது.

தெளிவாய் அறிவியலை விளக்குவது யார்
....


Gravatar It is a big loss to the Tamil literary world. It is a very sad news. My his soul rest in peace.

Regards

Balaji


Gravatar really sad.. dont feel like writing anything at all..


Gravatar what a loss!
irreplaceable and irreparable loss! no words more..


Gravatar How can we forget Vasanth's wooing and Ganesh's brillance?

How can we forget his 'Sreerangathu Devadaigal'?

How can we forget Thoondil/Mathyamar Kathaigal?

How can we forget his dialogues in Indian / Muthalvan / Kannethire Thondrinaal?

Sujathavidam 'Katrathum' / 'Petrathum' Nirayya!

May His Soul Rest in Peace!


Gravatar Enna sir avasaram...who will write abt. Ganesh&Vasanth???Science non-fiction essays inimey yarru eludha pora...Got a call frm "Sri Vaikuntam" uhhh...u should have asked them to wait...hmmmmmm

We will miss u SIR!!!!


Gravatar RIP Sujatha. Words fail to express the loss.


Gravatar sujatha..sujatha....a genius..in this fastly changing world i really dont know wheather we will get a author like him..........


Gravatar May God Bless him. God takes away good souls soon.


Gravatar I jus can't believe this. Tell me this is a prank.


Gravatar The passing of a truly great man; his life and his works must be celebrated for generations to come. RIP Sujatha.


Gravatar oru maa perum vazhi kattiyai izhandhu nirkiradhu tamil nadu.oru sadharana ennai pol town peoples living with confidence,that only one reason thats writer sujatha...
ini veru yaaral avar pola ezhutha mudiyum? samakaala thamizh janarajaka ilakkiyathin iidu inaiyatra ezhuthaalar,
vaazhvil irul kavinthuvittathu.oru vetridam vizhunthuvittathu.MAY HIS SOUL REST IN PEACE.


Gravatar Ariviyalai adupangarai varai kondu serka yarundu inimel yarundu...
Ilakkiangalai elidhil vilakida yarundu ini yarundu....


Gravatar தமிழ் படிப்பதையே சுவராசியமாக்கியவர்.அது தந்த போதையில் பலரை எழுத வைத்தவர்.

சுஜாதா நிச்சயம் இருப்பார், அவரது நிஜமான சீடர்களின் எழுத்தில்.


Gravatar "Vaazhkailayum oru rewind button irundhaa evlo nallarukkum"

eppo edhana time waste panninaalo, edhana mukkiyamaana vela mudikka delay panninaalo, illa edhana thappa senjalo nyabgathukku varra mudhal "pazhamozhi" idhuthaan.

En naikuttikku mudhalla naan yosicha peyaree "Jeeno" thaan
Thiru.Sujatha ungalthaakam endrum engalidam undu!!!


Gravatar May God Bless him. God takes away good souls soon.


"Meendum juno" Endrum Engalidam Erukkum.

Ganesh & Vasanth -Always With Us.

Hi-Khoo vai Arimuga Padithiyavan-Nee
Unakku Anjali
Solla ellai varthai -Enaku


Gravatar It is heartening to know that legend has stopped its breath. So courageous, so cute in his writing. we can write at length about his genius and service to tamil literature. Tamiz pesum anaithu nallulagathil vazzum anaithu tamizarkalin uaermuthu indru nindru vittathu. Let us give courage to their family and friends.

Join the spirit of sujatha alias rangarajan, a literary giant who has taught us how to read and view and sense the world

with tears in memory of legend

kumar, chennai


Gravatar The Man of Acheivements is no More

Urs,
gv


Gravatar He has started a new journey.
All the best Sir!


Gravatar I can't forget the sujatha's articles on Katrathum-Petrathum and so many films. I realy miss him. I pray for his family.


Gravatar Great loss.He is the gift to tamil literature. He is the one introduced the science fiction to the tamil. A man with astonishing experiences in all fields.

may his soul rest in peace.

Madusudanan.R


Gravatar It feels very sad. He has enriched my life in several ways.


Gravatar itz a very big loss to our tamil literary world... may his soul rest in peace...


Gravatar very Sad news - nethu dhaan pirivom sandhipom padichu mudichein :(

may his soul RIP


Gravatar 1000 ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி என்று எழுதிய மாமனிதர் 73 ஆண்டுகளில் மறைந்தது தமிழுக்கு இழப்பு.
அவர் ஆன்மா சாந்தி அடைய நம்மால் செய்ய முடிவது ஒன்றுதான்.; அவரது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
என்னால் முடிந்ததாக என் மகளுக்கு தமிழை இரண்டாம் பாடமாக ஆக்கியிருக்கிறேன். சற்று தமிழ் கற்றபின் என்னிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களையும் அவளை படிக்கவைக்க வேண்டும்.

பத்து கட்டளைகளில் சிலவற்றையாவது practice செய்ய வேண்டும்.


Gravatar Annbu sujatha,


Un aathma santhi adaya vendum un iniya rasigan.


P.Karthick


Gravatar its a big loss for all tamils... he will live thro' his writings.. may his soul RIP. condolences to his family


Gravatar நம்ப முடியவில்லை

http://xavi.wordpress.com/2008/0.../02/28/sujatha/


Gravatar Shocking.

I pray God for his soul to rest in peace.


Gravatar அவர் கதைகளையெல்லாம் அலசி ஆராயும்போது வாய் ஓயாமல் பேசும் எனக்கு, இப்போது வார்த்தை வரவில்லை. அனிதா; இளம் மனைவி நாவலில் ஆரம்பித்து அவர் எழுத்தின் மீது வைத்த காதல், இனி எப்போதும் குறையப் போவதில்லை.


Gravatar it is the great loss for the writers and the fans (like me)


Gravatar Being a Tamilian frm Blore, I have never been able to read much Tamil, though I have always wanted to leanr Tamil to read his books. But have heard a lot abt the most prolific writers of our times in Tamil, its a great loss not just to the literary world but also to the filmdom. Wonder whom will Mani Ratnam, Shanker and Bharathiraja turn to now for their scripts.


Gravatar http://www.kadudhasu.com/2008/02...ujatha-no-more/


Gravatar இன்று காலை அஞ்சலி செலுத்த அவர் இல்லம் சென்றிருந்தேன்.நாளை தான் இறுதி சடங்குகள் என்பதால் இன்னும் அவர் பூத உடல் வீட்டிற்க்கு கொண்டு வரப்படவில்லை.ஒருவேளை இரவு ஆனாலும் ஆகலாம்.

நான் தமிழனாக பிறந்ததிற்க்கு பெருமையும் கர்வமும் கொள்ளச் செய்த சில காரணங்களில் சுஜாதாவும் ஒருவர்.

அன்னாரின் "நகரம்" சிறுகதை உலகத்தின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

அவரிடம் ஒருமுறை "உங்களுக்கு மட்டும் சுவாரசியம் என்ற இங்க் எங்கிருந்து கிடைக்கிறது?" என்று நான் வினவிய பொழுது ஒரு புன்முறுவலே பதிலாக கிடைத்தது.

அன்புள்ī


Gravatar அன்புள்ள ரங்கப்ரசாத்,நீங்கள் "அன்புள்ள அப்பா-II" எழுதியே ஆகவேண்டும்.உலகத்தில் மிக சிலருக்கே உங்களுக்கு கிடைத்ததை போன்ற தந்தை கிடைப்பர்


Gravatar I have been very disturbed to read this news. He is a legend. He is a wealth of knowledge. Take any subject, he will be able to give the answer. Likes to pass his knowledge to the next generation is a great achievement. It is very sad. very sad.......


Gravatar Some things just come to a sudden halt... really!

It is just too tough to take this.

Sad day for the world of tamil literature and Cinema!

:(


Gravatar Saagara naal therinjitta vazhara naal naragamyeedum......

Sila dhinangal mun varai than ezhuthukkaaga uzhaithavar...
(Was working in Aanandha Thaandavam, Robo scripts)
No one is there to fil this space....

This is a personal loss for all fans of Sujatha......

Kalvi karpitha aasaanai ezhandhu thavikkum maanavargalil oruvan.


Gravatar I grew up reading his writings.Am choked.Once I called him to request his contribution for our portal and when he refused,I was elated for the simple reason I was able to talk to him over the phone.We are all definitely going to miss him.Its a personal loss for us all.


Gravatar Shocking. Though I was aware of the fact that he was not doing well through Desikan's blog, this news came as a complete shocker to me. Words fail me when I try to express the kind of impact Sujatha has had on me. Rest in Peace Sujatha sir. We will miss you, forever.

Kanda kanda naayellam 90,100 vayasu varai irukkum bodhu, ungaluku enna sir avasaram? Tamizh koorum nallulagu irukkum varai ungal per nichayam pesappadum.

Grief stricken,
varutham thoindha rasigan,
Krishnan


Gravatar You made me love the language.
And you made me want to be a writer. Goodbye Sir.
"வாழ்க்கையிலும் ஒரு rewind button இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?"

Vasanth, Ganesh and even Pugalenthi and Sivaji will keep you alive. It will keep you immortalised with each of the pages flipped and with each of the scenes revisited.
As long as Tamil stories continue to be spun, you will not be forgotten.
இயற்கையின் நியதி புரிந்த அதே மனதிற்கு, உனது வார்த்தைகள் இனியும் பிறக்காது என்பதை ஏற்றுக்கொள்ளும் சக்தி இல்லை.

~இரங்கலுக்கு வழிவகுத்த இணையத்திற்கு நன்றி~


Gravatar http://madippakkam.blogspot.com/...og- post_28.html


Gravatar Great loss!

May his soul rest in peace.


Gravatar who will write book with our APJ???
really some vacuum got created...

We miss U Sir.


Gravatar I continued my reading, only because of him. I learned a lot, or to put it in a better way, it taught me a lot. Will miss him.

With tears,
Gops.


Gravatar Dear friends and fans of Thiru. Sujatha Sir,

It is a great shock to know that he has passed away, but his words and writing will never go please all read his books once again and i think this is my way of saluting,

DEAR SUJATHA SIR WE ALL MISS U


Gravatar He is really intellegient writer I dont need to tell. We will miss his technical writing.


Gravatar Sujatha was the one who introduced Haiku and Puthu Kavithai to me. In a dingy lending library at Kutchery Road, I discovered his slim volume on Introducing haiku to novices.
His writings never had any assumed brilliance. He just extended his brilliance into his writings as well.

May his soul rest in peace.


Gravatar My Dear Sujatha,
Even when struck with grief of your demise, I still think that you are there to share my grief and somehow I think in the next week Kumudham or Anandha Vikatan..you will write " En Maranathirku Pin"....
You can never die man..cannot afford to!
Let me record this way as Engels did for Marx...
"Since 29th Feb 2008, Sujatha stopped thinking".....
It pains though...


Gravatar unga ezhutha padichithanga nanellam vigjanam arinthen naan migavum athirchi adainthen


Gravatar SUJATHA NEVER BORN NEVER DIED ONLY VISITED THIS MESMERISING TAMIL PLANET AND SIGNED OFF 27.02.2008.

WE HAVE TO TAKE HIS ENERGY AND DEDICATION TO THE NEXT GENERATION. ALL TAMIL SPEAKING AND READING FRIENDS LET US UNITE IN SALUTING THIS MAN WHO HAS SHOWN THE LIFE FOR MANY OF US IN A DIFFERENT ANGLE.

VORACIOUS READER WRITER COMMENTOR.

SUJATHA SIR WE NEVER FORGET U. U LIVE IN OUR SOULS AND DIE IN OUR SOULS

WITH TEARS

D.KUMAR
CHENNAI


Gravatar ......
May his soul rest in peace...
Thanks Mr Sujatha


Gravatar A great personality...may his soul rest in peace...

He made me feel proud about Tamil and Trichy...


Gravatar A great writer. MAY HIS SOUL REST IN PEACE.


Gravatar Sujatha, along with Kalki, was one of the primary reasons I got interested in reading Tamil works (fiction and otherwise). It is a big loss to the writing fraternity. Heartfelt condolences to his family.


Gravatar Sujatha was the primary reason why I started reading Tamil. His demise leaves a void which will never be filled.
RIP Sujatha a.k.a Rangarajan.


Gravatar He may not be with us in this world physically but his works and the light he passed to this generation and future will be there forever !!

Truely, no words to explain the loss. May God give enough strength to his families and his fans !!


Gravatar என்னவென்று சொல்வது? மிகப்பெரும் இழப்பு. தமிழில் இவரது இடத்தைப் பூர்த்தி செய்வதற்கு இனிமேல் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். இளைய தலைமுறையை தமிழ் இலக்கியத்தின் பால் ஈர்த்தவர். இவரது இடம் இனிமேல் வெற்றிடம்தான்.


Gravatar மார்க் ட்வைன் சொன்னது போல "DEATH,THE ONLY IMMORTAL.." அது யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை.இன்று அது தமிழின் மாபெரும் எழுத்தாளனையும் தன்னோடு அள்ளிக்கொண்டது.

சுஜாதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


Gravatar Avar aanma santhi adaiya iraivanai vendukiren.


Gravatar Will never forget "En Iniya Iyandhira" and "Meendum Jino". The only sc fi writer in Thamizh is dead. It is a big loss and I am totally shocked by this loss to Thamizh literary world. I dont know if he believes in reincarnations, but for once I feel he should be born again as himself and write more and more for the sake of his countless fans who must be wondering why the sky hasn't fallen yet.


Gravatar He made us proud to be Tamils, and proud to be watching Tamil movies on par and better than other languages. He is a great citizen of India and an icon for all Tamils. His life shall be remembered in his stories, poems and literature and his science columns that many readers would remember him with. God Bless.


Gravatar i was very much shocked to hear the news and feltas if some one of my family member has passed. there will be no replacement. he is one of those person whom i wish death should not come. he is an allrounder. may his soul rest in peace.


Gravatar May his soul rest in peace


Gravatar Here was an unique person who wrote on many things. I wonder whether there would be any other person of his age with as much knowledge and information as he has on IT,electronics & communication Physics, bio science etc. He kept updating his knowledge constantly. Above that,he had the skill to write that in a simple language even for a layman to understand. He is simply great. Sujatha sir, we will miss you.


Gravatar It is a great loss to the Tamils across the world...avar iruntha idathai yaravathu nirappa vendukiren!


Gravatar talented Short story writer.Had great and encyclopediac source.


Gravatar What a significant loss! I am sad.

He introduced computers to me in his ‘Silicon sillu puratchi’ [a silicon revolution] 20+ years ago. He knew how to convey binary and xor gates to even a 10 year old. Towards the end, he was instrumental in getting tamil i18n in linux. He was writing about XML / RPC and such even as late as this year.

Both me and my mom are fans of his writing. It was one of the few things we both could discuss without a generation gap. He knew how to appeal to her as well as me as well as to Gen X-ers.

I am truly going to miss his writings. Truly.


Gravatar A Great writer; Intellectual; Agnostic. He is no more now. If there is God, he will be received by him. He will be remembered as long as Tamil(s) lives.


Gravatar both my husband and myself were really shocked on hearing the news. we r finding it extremely difficult to acccept the fact/or to even come to terms with the fact that he is no more . a versatile writer, voracious reader, a simple man, a person who reached the readers who were even
40 -50 yrs younger to him..... many more attributes/adjectives can be on added to this list . he may not be with us any more but through his literary work he will always be cherished . our heartfelt condolences to his family and friends.may his soul rest in peace.

lavanya sundaram.


Gravatar What a loss! I am sad.
He introduced Computer,sicence fiction stories in Tamil Stories,he is the first writer to do so,both me,my mom,sister were great fans. His writings were such that you cannot move from that place after reading the small portion of the book,because his writings will make u to complete the full story and then only we can do any work. He is a gem of Tamil Nadu. His writings were inspired my many Youths,even at the age of 72 his writings were like by many Youths.


Gravatar We will definitely miss a greate writer.... May his soul rest in peace..


Gravatar LG,
Thought must share this with you
have a couple more will one day sit and sort out my gmail sure has a lot of gyan of him to me on blogging,relegion,capitalpunishment etc etc.
Felt you must read this one , in fact a few mails similar to this on you.

-----
Venkat
Lazy geek who wrote that blog is a software person from Seattle and an
ardent fan
your quote from Bradbury is apt I have been prolific and because of that
still unforgotten and in a position to write what I want .when I want. I
dont need blogs and websites to announce myself
Ranga is more or less adjusted to Chennai and is now unravelling its strange
vocabulary

Rangarajan

>From: venkat raghavan
>Reply-To: venkat raghavan

>To: Rangarajan S
>Subject: Re: From chitppa
>Date: Sat, 21 May 2005 21:00:56 +0530


>
>Dear chittappa,
>I know your ISP would have the latest spam filters thus most mail to you
>might end up in your junk box did you check out
>http://www.lazygeek.net/archives/2005/05/06/ sujatha_forgets_ramya_krishnan.htmlthis
>guy has asked you some many questions!!!!
>
> Ray Brad Bury once wrote, "Quantity produces quality. If you only
>write a few things, you're doomed :) "
> Take care of your health,luv to chitthi and ranga.
> Cheers
>Venkat
> P.S: I swear i will wait for your 2010 on kashmir, i am still unhappy
>with
>your answer & attitude on "Cut Loss" :)
> P.P.S: *Mark Twain* "Most writers regard the truth as their most valuable
>possession, and therefore are most economical in its use."


Gravatar It was when I was 12 or 13, I started reading him, thanks to my friend’s sister who meticulously had clipped and preserved his "JK", "Vaanamenum Veethiyile" and "Sorkatheevu" - serial stories from "Dhinamani Kathir"(then a paid, big sized weekly magazine, not a free weekly supplement). I was inspired right away and would use every opportunity to read his articles without fail thereafter.

In my opinion he did not just write stories, but brought us the real feeling of being there - his ability to bring visuals, voices, the smell of the surroundings whether it be a story happening in a village, a city or an auto workshop and their vernaculars or the portrayal of different personalities or articles about his move to Madras or his child hood cricket matches in Srirangam (very comical) or about his weekly visits to Salem to see his ailing dad or religious articles with a different perspective in “Gnaboomi”..... ., it was beyond any comparison and I am yet to read something like that again.

For those of us who started reading him in the mid 70s and continued to read him during the 80s, his impact was very large in us - we were mentally changed, inspired fully by his intelligence and smartness that he portrayed through his characters, forgetting our selves, living, talking and walking like his characters (my fav. one in "Kanavu (th) Tholirchalai - the hero - a cinema hero to his preaching manager-"Don't talk like Desai" - referring to the Morrarji Desai days).

As any true pioneer, he shared and taught aspiring young writers the secrets and techniques of good writing through many of his articles.

There are some things that hurt us more for reasons beyond the obvious, that we do not know and his passing is one for me. It really hurts - I mean REALLY - to see him go, but let us cherish his contribution to the Tamil readers.

I wish to express my deepest condolence to his family and thank them for the support they extended to him, that allowed him to write.

Man, Sujatha, Rangarajan, Iyengar (as he called himself defending to criticisms about JK) – you did your job very well and you will be missed a lot, by many.


Gravatar neenkal oru sahaptham //oru mgr //oru sivaji//oru sujatha


Gravatar i am Shocked and speechleess... still unbeleivable .. a real loss for tamil litrature and film industry ..no one can replace his place .. we have lost our living encyclopedia . my heart condolences for all his fans around the world and his family ....... Now its our responsibility to take his writing to the upcoming generations... we miss u sujatha sir....


Gravatar Sujatha and Bala Murali were my two eyes. I belong to Srirangam. To think that Sujatha is no more I feel that I have lost the living part of my life. I have the habit of quoting his lines and I am sure those will be coated with sadness ever.I really pray for the real Sujatha - his wife now.


Gravatar No words to express our sorrow to a brilliant person .
We will miss you


Gravatar Got to know abt Sujatha Sir's demise
from a friend..I refused to accept it..
checked the websites helplessly praying that
that it should not be true..but....

He made a whole generaion of people
to read Tamil.Something about Sujatha
will come during the discussions wiht my friends..Such is the way he occupied our lives..
It is hard to believe that there will be no Katrathum Paetrathum, no more
Ganesh-vasanth novels.....
A great loss to Tamil people and Tamil..
Good bye Sujatha Sir....


Gravatar ஆழ்ந்த இரங்கல்கள்.

மிகவும் வருந்துகின்றோம்.


Gravatar ஒவ்வொரு விரலும்
எழுத்தாணியாக
பத்து விரல்களாலும்
எழுதியவர் சுஜாதா

http://anbudanbuhari.blogspot.co...- post_7099.html

தமிழின் தங்க விளக்கு
அது அணைந்தது என்பது
அழுகைதான் என்றாலும்
எத்தனை யுகங்களானாலும்
இவரின் வாசனை மட்டும்
தமிழ் முற்றங்களில்
நீங்குமா

தன் நாள்
நெருங்கி வருவதை
அறிந்தவராகவும்
அதை நமக்கெலாம்
அறியத்தந்தவராகவும்
இருந்தார் சுஜாதா

பலகோடி தமிழர்களின்
கண்ணீர் அஞ்சலிகளால்
அவர் வழியனுப்பப்படுவார்
என்றும் அறிந்திருந்தார்
சுஜாதா

அனைத்தும் அறிந்த
அந்த அறிவுச் சுடருக்கு
நம் அஞ்சலிகளை
கண்ணீரோடு சமர்ப்பிப்&


Gravatar நினைவலைகள் - சுஜாதா......

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைக்கு காத்திருந்து விகடன் வந்தவுடன் பிறருக்கு தெரியாமல் அதை லவட்டி, பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகுமுன் சுஜாதா கதையை படித்தால்தான்( சில சமயம் அந்த 20 – 30 நிமிடங்களுக்குள் 2- 3 முறை படித்ததும் உண்டு) உயிர் இருக்கும் என்றிருந்த காலம் அது.

கணேஷ், வசந்த் தான் அன்றைய நேரத்து ஹீரோக்கள்!

அந்த கணங்களில் அந்த வார்த்தைகள் தந்த அந்த சுகம் என்றும் மறக்க முடியாது.

அவருக்கு 45- 50 வயதான நேரத்தில்தான் அவர் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். என்றாலும் என்ன ஒரு இளமை அவரது எ


Gravatar ஓட்டுகளைக் கணக்கெடுத்துச் சட்டெனச் சொல்லும் கணினி எந்திர உருவாக்கலில் பங்கெடுத்தவர், அவரின் அஞ்சலிகளைக் கணக்கெடுத்து அனுப்பச் சொல்லிவிட்டுத்தான் போயிருப்பாரோ !


Gravatar Elundhu vara mudiatha idathirku chendralum... Ezhuthukkalai endrum engaludane....
Sigarathai paarthu piramikkum..
Mouna malaigalai....
Thangalin Adutha payanathirku...
Mouna vaazhthukkal..
-----Sujatha Living Here---------
N.R.Senthil Kumar


Gravatar Sujatha was like a family member to us. If there are people who have contributed to our immense learning process, Sujatha is surely prime among them.

We feel that he is still amongst us through his immortal writing.

With Deep Condolense

Ravi Srinivasan
Rukmani
Krish Prasanth


Gravatar All this and more.
no more words to describe this misery.


Gravatar Many a people will be jack of all trades, and king of one, but to me, Mr.Sujatha stands out because king of many (Engineering, Technology, Fiction, Literature, Story Writer etc etc) which is purely divine, very rare to witness such a great person. Its a great loss to Tamil Community and India.

We are all very fortunate to witness such a person.

Though everyone knows about his tremendous, iam just penning a few lines....


He's the pioneer for designing and producing Electronic Voting Machine thats in practise during voting at his tenure as General Manager at BEL.

Being a Electronics and Communication Graduate from MIT, Madras in 70's, he's highly tech savvy , demostrated strong knowledge of engineering and technology (very visible in his stories) and elucidates clearly in his writing even that
can be understanble by common man.

His writings created revolution in short stories arena and recieved strong accolades from all age groups and attracted youth.
he has touched upon science fiction, fiction, novels, family drama,wit and humour. His stories are really learnings and wealth of knowledge, experience and information.


He's been story wwriter in Tamil Cinema right from 80's up to the latest films like Roja, Indian, kannathil muthamittal, anniyan, boys, sivaji etc.

His demise is great loss to India and especially to Tamil Nadu and Tamils. He's been great inspiration to younger generations.

My deep condolences to his beloved family , may his soul rest in peace.

Mr.Sujatha is no more, but his writings, his contributions will be ever etched in memory lane. On going by his own quote in one of the story
ullam thuranthavum (excellent novel), life is nothing but soul, and body is just a shirt, his soul always remains with us through his dialogues and writings.


Regards
Subramanian.R


Gravatar May god bless his soul to rest in peace and bring back us with as many Sujatha's.....


Gravatar சுஜாதா மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரின் புத்தகங்களின் வாயிலாக...எனது குழந்தைகள் புத்தகம் வாசிக்க பழகும் போது அவரின் புத்தகங்களை சிபாரிசு செய்து அடுத்தாடுத்த தலைமுறைக்கும் அவரை அறிமுகம் செய்வேன்

கண்ணீருடன்
பொன்சந்தர்


Gravatar சுஜாதாவின் சுகத்தமிழில் உலகம் கற்றுக் கொண்ட பலரில் நான் ஒருவன்.

சுஜாதாவின் மறைவு, கனவு போல இருக்கிறது. "கற்றதும் பெற்றதும்" இனி வராது என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், "செத்தபின் சில சிந்தனைகள்" என்று குமுதத்திலோ அல்லது ஆனந்த விகடனிலோ எழுதுவாரோ என்றும் மனசுக்கு தோன்றுகிறது.

தமிழ்க் கவிதை உலகில் பாரதிதாசன் பரம்பரை என்று ஒரு கூட்டம் இருந்த மாதிரி, சுஜாதா பரம்பரை என்ற ஒன்றும் இருக்கிறது. நல்ல எழுத்தாளரை இனி அதில் தேடிப் பிடிக்கவேண்டும்.


Gravatar Naan kumudamum, vigadanum thavaramal varathorum vaanki padithathurku mukiya karanam. "SUJATHA"


Gravatar Tamil cinemavin tharathai uyairthiyavarkalil mukiyamana oruvar "sujatha". ivarin maranam tamil ilakiyathirkum, cinemavukum periya illappu.


Gravatar சிறீரங்கத்துத் தேவை ஒன்று சிறகடித்துப் பறந்து விட்டது.......


Gravatar Thiru Sujatha avargalin eluthu nammudan eppothum nilaithu nirkum. May his soul rest in peace.


Gravatar மிகவும் வருத்த பட வைத்த செய்தி.
சட்டென்று ஒரு வெற்றிடம் உருவானது போல் இருக்கிறது...
அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் வாசகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.


Gravatar i really miss you sir


Gravatar பல குப்பை எழுத்துக்களை உண்டு உண்டு சலித்து களைத்திருக்கும் அக்னி தேவன் ,சில நிமிடங்களுக்கு முன்பு தனக்கு படைக்கப்பட்டதை உண்டு வியந்து மகிழ்ந்திருப்பான்.பின் என்ன சுஜாதா போன்றவர்கள் கிடைப்பது அவ்வளவு எளிதா என்ன?

நன்றி தலைவா! ஐம்பது ஆண்டுகள் எங்களை மகிழ்வித்து,கற்பித்ததற்கு!

எங்கள் இதய அஞ்சலி!


Gravatar Sujatha, Travel well...
Do we missed since we had oppurtunity to clone him ?


Gravatar Still it is very difficult to digest that our beloved writer Sujatha is no more. I thought of meeting him atleast once in my life time, which never happened. He has touched millions of hearts through his writings. I hv been reading his books for more than 20 years. It is very very difficult to believe that we won't be seeing his writings anymore. I hv tears in my eyes when I write these. Don't know what and all he wanted to write and share with others. A true genius. Thanks a lot sir for the memories.


Gravatar Sujatha,Writer for all media.I still couldn't believe he has gone.Life sometimes is so cruel.


Gravatar Hard to believe that he is no more.Every indian must thank him,since he was the core for the Electronic Voting MAchine Project,which revolutionised the electoral system in india.

As a Writer,he made common peoples to taste the sweetness of tamil.

Let his soul rest in Peace


Gravatar Everybody who had the habit of reading will surely miss Sujatha


Gravatar sujatha, ungalai oru muraiyavadhu neril sandhikka vaendum endru ninaithen, mudiyavillai, adhanal enna ungal ezhuthukal eppodham ennidam irukkum... neril ungalai sandhikiren en kaalam mudhindha pin...

ippadiku
ungal ezhapai yearka mudiyadha
Prasanna


Gravatar சுஜாதா மறைந்து விட்டார் என்பதை இன்னும் நம்பமுடியவில்லை. என்ன ஒரு அறிவாற்றல்! என்ன எழுத்துத்திறன்! Truly a Genius. A very versatile writer. சங்க இலக்கியம் முதல் சைபர் (cyber ) இலக்கியம் வரை கரை கண்டவர். அவரது வாரம் ஒரு பாசுரம் கல்கியில் நான் விரும்பிப் படித்துக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அவர்து எழுத்துக்களில் மரணத்தைப் பற்றிய reference தென்பட்டது. Obituray பகுதியைத் தவறாது பார்ப்பதாகவும், இறந்தவர்கள் தன்னைவிட வயதில் மூத்தவர்களாக இருந்தால், தனக்கு இன்னும் நாட்கள் இருப்பதாகவும், தன்னைவிட வயது குறைந்தவர்களாக இருந்தால் தன் இப்போது இருப


Gravatar Appa anbulla appa,

kadavul vandhirundhar,

oru prayanam

with tears

vasan


Gravatar Somehow my mind is not accepting that he is no more and it is gratifying to see that I am not alone. from "mama vijayam" to sci-ficition, what a range?

when I grew up every teenager I knew in my neighbour hood was a sujatha fan and of couse their parents and grandparents, such is his appeal!
whenever we friends meet , we always feel that it is sujatha who instilled in us a sense of exploration, humour, logic and an attitude to love the life around you. We will always be indebt to sujatha.

Hopefully we will still meet the man through his books.


Gravatar எதையும் தாங்கும் இதயம் தமிழனுக்கு என்றோ !
இதையும் தாங்கு என்று சென்று விட்டாய்
புதையும் உன் நினைவுகள் நெஞ்சில் -` தமிழ்க் கதையும் இனிமேல் கண்ணீர் சிந்தும்

விஞ்ஞானம் கற்றுத் தெளிந்தாய் நீயோ
அஞ்சாமல் கருத்தைப் பகன்றாய் மெய்ஞானம் இருக்கும் வரையும் உன் ஞானம் எம்முள் தளைக்கும்

தரணியில் தமிழன்னை புகழ் தரங்காத்த மைந்தருள் முதல்வன் தனியான இடத்தை உனக்கு தந்தார்கள் தமிழர் உனக்கு

இனியொரு காலம் வருமோ இனிமையான எழுத்துக்கள் தருமோ இதயத்துக் கோவிலில் உற


Gravatar Well.. I'm not surprised to see that the link to www.kirukkal.com redirected me to www.sujathalogy.com... I expected this from you, the moment I heard the news of Sujatha's demise... Nothing would be a better tribute than this....

Vaccum... Vaccum every where... I still have not recovered from the shock.. Just can't accept the fact that he is no more in this world... 'Vaazhkayilayum oru re-wind button irunthal evvalavu nalla irukkum'!!

Sujatha, We will miss you, truly.... forever.

May your soul rest in peace......


Gravatar இயற்கை விதிகள், விளக்கமுடியா விஞ்ஞான விதிகளெல்லாம் தனது மொழிநடையில் இலகுவாக விளங்கவைக்கும் ஒருவரை இயற்கையின் விதிகளுக்கமைவாகவே இழந்துவிட்டோம்.
அவரை இழந்தாலும் அவரது ஒவ்வொரு படைப்புக்களும் தனித்துநின்று வாழக்கூடியவை.
ஒரு இலங்கை வாசகனாக நான் அவர்மீது வைத்திரந்த ஈடுபாடு அளப்பரியது. அவருக்கு வயது 73 எனக்கு வயது 23. என்வாழ்நாளில் அவரை ஒருமுறையாவது சந்தித்து அளவளாவவேண்டும் என்ற என்னுடைய பேரவா நிறைவேறவில்லையே...:-(


Gravatar He is no more with us but his thaughts and articles will be alive millinum of years to come. Last Sunday I went to Srirangam, I remembered him and see in and around there. This sunday he is no more with us. Each and every tamil peoples cannot tollerate or compensat his disappear from the earth. We must introduce him to our sons, daughters and siblings in the future.
Kamaraj Pandian


Gravatar Dear friends
Sri Rangarajan (BEL periappa to me.. we named him thus for he used to work at Bharat Electronics Limited) was a close uncle of mine and I would have thought this is only a huge personal loss but seeing the outpouring of grief here, I realize that he has touched the lives of more people than i could have ever imagined.
Knowing him from close quarters, i was touched by his humility and his eagerness to learn despite his genius.

Marc Anthony's tribute to Brutus befits Sri Rangarajan - "His life was gentle, and the elements
So mix'd in him that Nature might stand up and say to all the world 'This was a man!'

May his soul rest in peace


Gravatar I feel it's my duty to pay homage to the great thinker and writer of this computer era. His demise is a great loss not just for me or Tamil readers; it is a loss for Tamil and the literature community as a whole...

Sujatha... like he inspired a lot of young minds, captivated me by his style and use of the language. He triggered in me not only the evolutionary thinking,also an analytical mind to ask questions.

His work has been a tribute to Mother Tamil and his demise is a loss for every single home and to the literary world.

I still remember the day I met him in a 'face to face' program. He was so energetic and enthusiastic to answer questions. He was just out of a heart surgery. But ready to answer the youngters!!!

I feel like I have lost a part of myself. My condolences for the bereaved family.


Gravatar Heartfelt condolences to Sujatha Rangarajan and family. May the Lord give strength in their hours of grief to shoulder the irreperable loss


Gravatar So for i am not digesting this incident!...

Any way in the life race god is always the winner.


Gravatar I was telling a Telugu friend about the death of my most cherished writer in Tamil and told him how his writings on Science and technology was the reason for many Tamil youth getting inspired to become computer engineers.

His question was: are those stories available in English?


Gravatar I remember a couple of outstanding contributions:

1.His Kumudam essay: "Miss Thamizh thaayae namaskaram" that introduced pudukkavidhai to mainstream tamil magazine.

2. His early 1980 Bommai(?) article on how computer is used in modern movie making. It was so good, I presented a seminar in my engineering 3rd year just based on that article.

3. His short story "Computer-ae oru kadhai ezhuthu" written in the 60s.

4. An outstanding piece where he imagines a few key characters in his
real life that shaped him: what if all of them came together and talked to each other about him. Man, I have never read something like that!

5. 1982? Year of the Child: he wrote a
moving marabukkavithai in Kungumam:
(you can read this in the collection of essays - Miss Thamizhthayae Namaskaram)

It starts:

"Koottamaana hotel-kalil Saptavudan Plate-eduppai"

Jeyamohan observes Sujatha never let his emotion rule him and that most of his writing is literary because of its style.

Wrong, Sir. Read this poem. Read his
novel: Andru un arugil.

His emotion was very deep and almost
passionless. You can say he didnt have
'PERSONAL emotion' drive his writing.

He was very emotional, but not sentimental.

***

Two initiatives helped us a lot:

Kumari padippagam reprinted several of his novels and essays as cheap books, that help spread his writing beyond the 60s and 70s that it was originally written. We should thank Kumari padippagam veera raghavan for that.

Second, I was very happy to see
writersujatha.com providing most of his writing as ebooks. Please buy his
essays and short stories and read them.

Ravi Annaswamy


Gravatar When one develops the manappakkuvam (called Sthithaprajna in ancient lore) where one is not driven by personal passion, then his or her
memory becomes clear and all-grasping and their judgement becomes unbiased.

Then one is able to see the same thing in several viewpoints simultaneously and only truth
'occurs' in his perceptions.

whatever they do, they start showing the grandness and vastness of detail as well as stretch.

I feel Sujatha is such an accomplished soul and one of the last remnants of that caliber. Another is Ilayaraja.

Someone asked Sujatha - 'Eppadi sir ungalukku ivvalavu jnanam?'

He replied: 'gnanam illeenga - gnapagam' implying that his 'intelligence' was primarily his
'memory'

But 'memory' itself is a gift of passionless state of mind.

Ravi


Gravatar Great Writer. Presented the complex scientific concepts in simple language to ordinary reader. Very versatile starting from Science fiction to commentry on brahma sutram. It will be a long time for somebody to fill the vacant place left by him.

My eyes are sheeding tears and heart feels heavy. Let God give the strength for his family to withstand this personal loss.


Gravatar சங்க கால பெருமைகளை பேசியது போதும் .. ..
இந்தக் காலத்தில் தமிழ் வளர்ப்பது எப்படி ?

சுஜாதாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் !!!

இனி வரும் தலைமுறையும் படித்து , ரசிக்க, வியக்கப் போகும் படைப்புகளைத் தந்தவர் அவர்...

என் ரசனையை வளர்த்த சுஜாதாவுக்கு நன்றிகள் கோடி சொன்னாலும் பத்தாது...

சென்று வாருங்கள் வழிகாட்டியே !


Gravatar "innum eththanai thadavai pirakkanum...marakkanum...irakkanum.." - the final lines of "Aaah" novel.

For the past two days this line comes to my mind again and again!!


Gravatar குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒருநாள் யாரும் மாய்வது திண்ணம்.
"என்னத்த எடுத்துக்கொண்டு போகப்போறோம்?"
ஒன்றும் இல்லைதான்
ஆனால் எதை எதை
எவ்வளவு விட்டுச் செல்கிறோம் என்பதல்லவோ பெருமை.

சுஜாதா எத்தனை எத்தனை படைப்புகளை
எத்தனை ரசிகர்களை
ஆழ்ந்து படிக்கும் சுவைஞர்களை

விட்டுச் சென்று இருக்கின்றார்

வாழ்க அவர் புகழ்!

செல்வா


Gravatar ஆங்கிலப் புத்தகங்களை படித்துக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் புத்தகம் படிக்க வைத்து தமிழில் படிப்பதோ/எழுதுவதோ இழுக்கு இல்லை என்று நிரூபித்தவர்!

வைரமுத்து சொன்னதுபோல் விஞ்ஞான விரலை இழந்துவிட்டோம் நாம்! இனிமேல் authentic information-க்கு நாம் எங்கே போவது?

கண்ணீர் அஞ்சலி என் ஆதர்ஷ எழுத்தாளருக்கு!


Gravatar Dear Sujatha

Your Siliconin Sillu Puratchi has showed the way for my career
Your Sirangathu Devathaigal has brought my nostalgic thoughts when ever I read
Your Katrathum Petrathum has taught social and scientific things for a novice person like me
Last not but least, You made me proud of I am a Tamilian

Thanks for all your work those kept me many of moments happy, pleasant and memorable

But this moment, I really feel heartbreaking

Rangaraman R


Gravatar As a tribute, I have added to (the new) TamilScans blog the first chapter of Nylon Kayiru from Original Kumudam issue dated 15-8-1968.

http://tamilscans.blogspot.com/

Those pages might have made him the happiest person that week.

Ravi


Gravatar I couldn't believe he is not in this world anymore. He will live in our hearts forever. May his soul rest in peace with the God.


Gravatar CM and Kamal hassan and other actors pay homage to the great writer

u can see these pictures in

Tamil
http://www.dinamani.com/

English
http:/www.newindpress.com/


Gravatar English
http://www.newindpress.com/


Gravatar I grew up reading his novels and stories.. Juno ..Meendum Juno .. when ppl didnt know how to spell robotics at my age i think i was 10 yrs old then Great guy, great memories, great books. RIP sir.


Gravatar Hi,

Sujatha..Very first time in my life I cried by just reading the news. His writings made me and my thought process. He had an enormous impact on me from school days and the amount of knowledge he carried in science, technology and society ...no one can even dream of reaching him. I had a rare opportunity to meet him at his residence in 1995. I will remember the meeting for ever and as writer and thought leader, he is the greatest of all time in TN. I regret not being in India at this greiving time.

I salute you, Sir.
thanks
venkat


Gravatar Tamil koorum nallulakam athan thalapathiyai ilandhu vittathai oru unarvu...

Most admired person passes away..

May the soul rest in peace!


Gravatar I am having a complaint about him, he was too much influential in all my life decesions. Again, we both together took decesions all the time.

Velmurugan


Gravatar I am still in the mode of denial. NO this can't happen....

I am not able to recollect when I started reading Sujatha. As a young man "Nirvaana nagaram " was the one I still remember. His descrption of the frustration of an unemploted youth-his ability to paint vivid picutures her versatality, Sujatha sir why why why did you leave us...


Gravatar i was inspired by ganesh vasanth, sri rangathu devathaigal and list extraordinary knowledge about anything and his scripts, and dialogues in films.
he should have lived long.
his demise makes many sad.


Gravatar Karuvaraikkum kallaraikkum idaiyil Nee seitha Sathnaigalai Yarum Maruka mudiyathu..

Like : Voting Machine,Memorable writings..etc...

Endrum Anbudan
Francis


Gravatar A real loss. Will miss him. Great person who did a turnround in Tamil Novels.
A person with modern outlook but strong Tamil knowlegde.

Never ever wanted him to leave us.


Gravatar சுஜாதா சம்பந்தப்பட்ட அனைத்தும் சுவாரசியமனவையே!
அதற்கு அவரின் நினைவுஅஞ்சலி விழா எப்படி விதிவிலக்காய் இருக்க முடியும்?
மனுஷ்யபுத்திரன்,கனிமொழி, வசந்த், பார்த்திபன்,மற்றும் பலருக்கும் இந்த வாசகனின் உளங்கனிந்த நன்றிகள்
JK யின் "நானே கடவுள்" பாணி உரை,ஞானசம்பந்தனின் "பட்டிமன்ற"பாணி உரை,தங்கர் பச்சன்னின் சற்றே "அதிக"பிரசங்கம் (சொல்லிய கருத்து சரி என்றாலும்,சொல்லவேண்டிய இடமும் நேரமும் சரியல்ல),இவைகள் சற்று இடித்தாலும் மற்றவர்களின் இதயம் திறந்த பேச்சு எல்லாவற்றையும் ஈடு செய்து விட்டது.
மரபு&


Gravatar மரபுகள் பலவற்றை உடைத்தவரின் இரங்கல் கூட்டத்தில்,மரபு மீறிய கரகோஷமும்,சில இடங்களில் வெடி சிரிப்பும் விகாரமாக இல்லை.After all he never made us cry but made us only think,laugh or introspect.
ஒரு வள்ளலின் மறைவும் ஒரு அறிவு ஜீவியின் மறைவும் ஏற்படுத்தும் வெற்றிடம் நிரம்ப பலகாலம் ஆகும்.
என்ன செய்வது? internet சொர்க்கத்தையும் cover செய்யும் நாள் வரை காத்திருப்போம்!


Gravatar I am the one of the many aspirants of sujatha missed the meeting held on sunday. can any one sum up the proceedings and present it so that we can cherish his fond remembrances

D.Kumar
Chennai


Gravatar We miss a great genius. His pen spoke more than his mouth. Now a huge vacuum has created.
We pray for his soul.
Sundar.


Gravatar Great Shock to all.
World would not have seen such a versatile writer. His place definitely cannot be replaced. I strongly believe his soul had reached his ishtta Deivam 'SRIRANGANATHAN'. Pray My Lord SRIRANGANATHAN to give him back (MARU JENMAM) for the rest of the world.


Gravatar kattrathum Pettrathum alitha nee
Maraithathum.. eduthu sendrathum ethuvooo ?
ithu muraiyaoo ? intha ulagam unnidam niraiyaa ethir paarkaiyil..nee sillaraigalai iraithuu rokkamaai eduthuu sendrathu ethanaiyoo.. ayyoo


Gravatar Hey dude..
How was the journey ?
What time u will be online from heaven ? Do let us know..


Gravatar Dondu Raghavan gives almost a full coverage at http://dondu.blogspot.com/2008/0...og- post_03.html
and BTW, Guru! Each & every Sujatha fan will be grateful to you for this page! Thanks a lot

Regards
Venkatramanan


Gravatar May his soul rest in peace...


Gravatar இனி தெளிவாய் அறிவியலை விளக்குவது யார்?
எங்கே கற்பது? பெறுவது?


Gravatar He is one of my role model. Adorable person. In fact if I am in this good position today it is because of reading his books. He kindled my thoughts on Computer when he wrote a book on "Silicon Sillu Puratchi". What a writer? He can cover anything in the world so simply and I am not sure how many peoples thoughts are kindled in right way like mine, reading his thoughts in writings. I miss my true guide in my life. No words.


Gravatar The Entire Reading & Writing World has lost an Intellectual writer, a great personality and a great human being. He has touched the hearts of many and will always stay in the hearts of many. May God give the bereaved family Enough Strength & Courage to bear with the huge loss.


Gravatar There is absolutely no comparison for Sujatha.

In the seventies, when TV was a big thing for the whole India, Sujatha wrote about computers and robots.
He was the first ever science fiction writer in not only Tamil but also in the whole country.
No one in the Telugu, Hindi or Bengali or Marathi literature/film world is every comparable to Sujatha.
He is a God sent person for our state.
He is probably the only one person in the world, having the combination properties of being a
-Scientist
-Writer and
-Movie scripter.

Let there be another Sujatha coming very soon.

truly
Karthik...
Sydney


Gravatar there was andthere can be only one sujatha in the world.


Gravatar naan !
sartrum ethirpaarkkavillai
sujatha!


Gravatar naan !
sartrum ethirpaarkkavillai
sujatha!

-dennis ,st.josephs college,trichy-2


Gravatar Sujatha had written on his turning 71 in vikatan and that brought lots of responses. On Lazygeek's blog he had replied this way:

-------

dear friend
Rarely I answer blog references One of the greatest pleasures in wriring is perceptive readers like you are reading every line and its echo is loud and clear
It was a general essay I wrote on turning seventy It had a global response The purpose is not to scare people about growing old and dying but to inspire a sense of urgency in whatever one wants to pursue in life and in its wake revise and simplify the targets
Sujatha

Posted by: Sujatha | May 10, 2005 12:48 PM

--------

The last line gives clue to his methods and his reason for success.

Look at the keywords:

inspire a sense of urgency in whatever one wants to pursue in life and in its wake revise and simplify the targets

Only this kind of philosophy can explain how someone can accomplish so much in a life.

And interestingly the same words describe the reason for his writing success:

Keeping the sense of urgency in mind, revise and simplify.

__________

Thank you Boss!

Ravi Annaswamy


Gravatar I grow up with Sujatha's writings. He was like a person well known to me, even though I never met him. Personaly I learnt a lot from his writings. When I learnt his death, I felt like I lost something. I never felt like this before...
He is a great writer. Tamil culture will remember him thousands of years.


Gravatar Rangarajan is dead.Long live Sujatha
(Literally too)


Gravatar சுஜாதாவை அதிகம் படித்துள்ளேன். போலி உணர்ச்சிக் குவியல்கள் பின்னிப் பிணைந்து, மனதைக் கனக்க வைக்கும் அல்லது தலைவலியை ஏற்படுத்தும் நம்மூர் எழுத்தாளர்களின் கதைகளின் நடுவில் சுஜாதாவின் ஒவ்வொரு கதையும் சுவையாக அமைந்து மனதை இலேசாக்கும்.

இவரது கதைகள் உணர்ச்சிகளாக நகராது; காட்சிகளாக விரியும். போலி உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, எதார்த்தமாக தமிழர்கள் எழுதப் பழக வேண்டும் என்பது என் ஆவல். அதுதான் மூத்தவர் சுஜாதாவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.


Gravatar சுஜாதா மீண்டும் பிறந்து வருவார் - மறுபிறவி அல்ல - நிகழ்தகவு கணிதக் கோட்பாட்டின் படி - என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நானும் அந்த நேரத்தில் பிறந்திருப்பேன். அது எதிர்காலமாக இராது; இதே காலமாகத்தான் இருக்கும்.


Gravatar சுஜாதா இறந்து போன சேதி நமக்கு தெரிகிறது. அவருக்கு தெரியுமா? தான் இறந்து போனோம் என்பதை அவரால் உணர முடியுமா?


Gravatar dear sir,

i was met you once in chennaibook fair u gave a autograph to me nice moment i remember at this time i hav no words good bye if there is any chance to meet again in somewhere sometime somebirth i wish i shoud know ur sujatha and i am baskar that all. ungal athma santhi adayattum



ரா.கி. ரங்கராஜன்

''அவரைப்போல் இனி ஒருவர் வரமாட்டார்!''

ழுதுகொண்டே எழுதுகிறேன். குமுறிக் குமுறி வரும் விம்மலை அடக்கிக்கொண்டு, காகிதத்தின் மீது விழும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடி எழுதுகிறேன்.

நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு ஒரே சமயத்தில் குருவாகவும், சீடராகவும், தோழனாகவும் இருந்த சுஜாதா என்கிற மேதை மறைந்துவிட்ட துக்கத்தை எங்கே போய் ஆற்றிக்கொள்வேன்!

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது... தபாலில் வந்திருந்த சிறுகதைகளைப் படித்துக்கொண்டு இருந்ததும், ஃபுல்ஸ்கேப் பேப்பரில் பொடிப் பொடியாக எழுதப்பட்டிருந்த ஒரு கதையைப் படித்துக்கொண்டு இருந்ததும்! என்ன நடை, என்ன உத்தி, என்ன ட்விஸ்ட் என்று பிரமித்தவனாக எங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி&யின் அறைக்கு ஓடிச்சென்று, ''ஒரு பிரமாதமான கதை... டெல்லியிலிருந்து ரங்கராஜன் என்ற ஒருவர் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்''

என்கிறேன். ''அவ்வளவு பிரமாதம் என்றால் பிரஸ்ஸ§க்கு அனுப்புங்கள். பிறகு பார்க் கிறேன்'' என்கிறார். 'சசி காத்திருக்கிறாள்' என்ற அந்தக் கதையை, இதழ் வெளியான பிறகு அவர் படித்துப் பார்த்துவிட்டு, ''மணியார்டர் அனுப்பி விட்டீர்களா?'' என்கிறார். இல்லையென்று நான் சொன்னதும், ஃபாரத்தைக் கொண்டு வரச் சொல்லி, கூப்பனில் நான் எழுதியிருந்த வரிகளின் கீழே, 'கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. அடிக்கடி எழுதுங்கள்' என்று தன் கைப்பட எழுதி, அன்பளிப்பு 20 ரூபாய் என்றிருந்ததை அடித்து, 30 ரூபாய் என்று திருத்தியதும் கண்ணீருக்கு நடுவே ஞாபகம் வருகிறது.

'எஸ்.ரங்கராஜன், வெறும் ரங்கராஜன், சுஜாதா ரங்கராஜன்' என்றெல்லாம் அவர் பெயரை மாற்றி மாற்றிப் போட்ட பின், கடைசியாக சுஜாதா என்ற பெயரை மட்டுமே நிலைநாட்டினேன்.

பேன்ட் அணிந்த இளைஞர்களும், சுடிதார் அணிந்த மங்கைகளும், கிதார் வாசிப்பவர்களும், டெல்லி கோடீஸ்வரர்களும், அவர்களுடைய ஆடம்பர மனைவிகளும் பாத்திரங்களாக அவரது கதைகளில் இடம்பெற்று, மத்திய வர்க்க பிராமணக் குடும்பத்தையே மையமாகக்கொண்டு இருந்த தமிழ்ச் சிறுகதை உலகத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டார்கள். 'கணையாழி' இலக்கிய இதழில், கடைசிப் பக்கத்தில் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' என்ற பெயரில் எழுதப்பட்டு வந்த கட்டுரைகளில் எஸ்.ஏ.பி&க்குத் தனி மோகம். சுஜாதாதான் அந்த ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று சொன்னதை நம்பாமல், சுஜாதாவையே நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டார். சுஜாதா எழுதிய முதல் நாவல் 'நைலான் கயிறு'. அப்போது அவர் சென்னைக்கு வந்திருந்தார். பகல் சாப்பாட்டுக்கு என்னுடன் என் வீட்டுக்கு வந்தார். போகும் வழியில், ''கணையாழி இதழில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அதைத் தொடர்கதையாக டெவலப் பண்ண ஆசை. எப்படிச் செய்யலாம்?'' என்று யோசனை கேட்டார். எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன். அருமையான திருப்பங்களுடன் மாடர்ன் டச் கொடுத்து எழுதி, அபார புகழ் பெற்றார். அடுத்து, 'அனிதா இளம் மனைவி'. அதுவும் சிகரமான தொடர்கதை. அதன்பின் எத்தனை எத்தனை நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள்..!

அவர் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகள் வேறு எந்தப் பத்திரிகையையும்விட ஆனந்த விகடனில்தான் அதிகம் வெளியாகியிருக்கின்றன. அவர் விகடனில் எழுதிய 'கரையெல்லாம் செண்பகப் பூ' ரொம்ப வித்தியாசமான, எல்லோராலும் பாராட்டப்பட்ட தொடர்கதை. ஜூனியர் விகடனில் அவர் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?', 'தலைமைச் செயலகம்' ஆகியவை அறிவியல்பூர்வமான அறிவுப் பொக்கிஷங்கள். விகடனில் அவர் பல விஷயங்கள் குறித்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' பகுதியின் தீவிர வாசகன் நான்.

எந்த விஷயம் குறித்து எழுதச் சொன்னாலும், உடனே எழுதிவிடுவார் சுஜாதா. அவருடைய தந்தை காலமானபோது, அவரைப் பற்றி எழுதும்படி கேட்டுக்கொண்டோம். வெகு உருக்கமாக எழுதினார். கேரளாவில் ஓர் இடைத் தேர்தலில் மின்பதிவு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு அடித்தளம் இட்டவர் சுஜாதாதான். தேர்தலின்போது அவர் அந்தத் தொகுதிக்குச் சென்றிருந்தார். அந்த அனுபவங்களை எழுதும்படி சொன்னபோதும், தனக்கே உரிய எளிமை நடையில் உடனே எழுதித் தந்தார். எழுத்தில் அவரைப் போல வீச்சும் வேகமும் உள்ள ஒருவரை இனிமேல் காண முடியாது.

நாலு வரி எழுதினாலும், அவருக்கே உரிய முறையில் 'நச்'சென்று எழுதுவது அவருடைய தனிச் சிறப்பு. என் குமாரன் ஸ்ரீதருக்குத் திருமணம் நடந்தபோது, வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில்... 'சின்னப் பையனாக இருந்த ஸ்ரீதருக்கா கல்யாணம்! இப்போதுதான் தெரிகிறது, எனக்கு எவ்வளவு வயதாகிவிட்டதென்று!' என்று எழுதியிருந்தார்.

ஸ்டீபன் கிங் எழுதிய 'ஞிகிஸிரி திளிஸிசிணிஷி' என்ற நாவலை எனக்கு அனுப்பினார் & அது போல நானும் எழுதவேண்டும் என்று! வெறுமே அனுப்பியிருக்கலாம். ஆனால், அதன் முதல் பக்கத்தில், 'நண்பர் ரா.கி.ரங்க ராஜன் அவர்களுக்கு, கொஞ்ச நாள் நான் வைத்திருந்து, ஜூலை மாதம் 5&ம் தேதி அன்புடன் அனுப்பிய புத்தகம் இது' என்று குறிப்பிட்டு, தேதியுடன் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் (புத்தகம் கொஞ்சம் பழசாகியிருந்ததே காரணம்!).

திருமாலின் திருவடியில் சேரப்போகும் நாள் சமீபித்துவிட்டது என்ற எண்ணம் வந்ததோ என்னவோ, ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புப் பற்றி சமீபகாலமாகக் கல்கியில் எழுதிவந்தார். முதல் கட்டுரை வெளிவந்தபோது படித்துவிட்டு, 'குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றி உங்கள் கண்ணோட் டத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் பகுதியில் அந்தப் பாசுரம் பற்றி முன்னோர்கள் தப்பாக வியாக்கி யானம் செய்தார்கள் என்று ஏன் சொல்லியிருக்கிறீர்கள்? அவர்கள் பெரிய மகான்கள். அவர்களுடைய நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் குறை சொல்லவேண்டும்?' என்று போனில் சொன்னேன். அதன்பின் அத்தகைய விமர்சனத்தை விட்டுவிட்டு, பாசுரத்தின் இலக் கியச் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதினார். 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்பதை உணர்ந்த பெருந்தகை அவர்.

புதிய எழுத்தாளர்கள் அவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதுவது உண்டு. அவ்வளவு ஏன்... ஆரம்ப காலத்தில் நானே அவரைப்போல எழுதிப் புகழ்பெற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்பட்டதுண்டு. அவருடைய நுட்பமான அறிவு, அளவிட முடியாத உழைப்பு, படிப்பு, நட்பு வட்டாரம், பெரிய இடத்துப் பழக்க&வழக்கங்கள் இவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எனக்கு வராது என்பதை உணர்ந்து, அவரை முந்தவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டேன். மரணம் ஒன்றில்தான் அவரை முந்த முடியும் என்று எண்ணியிருந்தேன். அதையும் பொய்ப்பித்துவிட்டார் என் அருமை நண்பர் சுஜாதா!

420. இன்று எழுத்தாளர் சுஜாதா வீட்டில்

ஒரு 2 வருடமாக, தேசிகனின் உதவியோடு அவரை நேரில் சந்திக்க எண்ணியபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், சந்திப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போது அவரே போய் விட்டார் :( 

இன்று காலை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  பல பிரபலங்கள் வந்திருந்தாலும், சூழல் எந்த வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சாதாரணமாகவே இருந்தது.  கண்ணாடிப் பெட்டியில் இருந்தவர் உறங்குவது போலத் தான் தோன்றியது.  அருகில் இருந்த தேசிகன் சோகத்தில் இருண்டு போய் காணப்பட்டார்.  கடந்த பல வருடங்களாக சுஜாதா தேசிகனை தனது சொந்த மகன் போலத் தான் பாவித்து வந்ததை நான் அறிவேன்.  தேசிகனும் சுஜாதா மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, தேவையான சமயங்களில் அவர் கூட இருந்து பல உதவிகள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும். சுஜாதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான மனுஷ்யபுத்திரனும் சோகமே வடிவாக காட்சியளித்தார். அவரிடமும்,  தேசிகனிடமும் என் இரங்கலைத் தெரிவித்தேன் !

நான் அங்கு செல்வதற்கு சற்று முன்பு தான் கலைஞரும், கமலும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றிருந்தனர்.  மதனையும், இயக்குனர் வசந்த்தையும், கனிமொழியையும் (சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவரும் கூட) பார்த்தேன். நான் பார்த்தவரை, பாலு மகேந்திரா, சுஹாசினி, மணிரத்னம், பிரமிட் நடராஜன், சிவகுமார், அவரது மகன் கார்த்திக், பாலகுமாரன், அனுராதா ரமணன், சாரு நிவேதிதா, வைகோ, திருமாவளவன் என்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வந்தனர். வந்தவர்களை வைத்துப் பார்த்தால், தமிழ் எழுத்தாளராக, சுஜாதா ஏதோ சாதித்து இருப்பார் போலத் தான் தெரிகிறது !!!  பதிவர்களில் ரஜினி ராம்கி, டோண்டு, அதியமான், உண்மைத்தமிழன், இரா.முருகன், ஹரன் பிரசன்னா என்று சிலரை சந்திக்க முடிந்தது. 

எனக்கும் சுஜாதாவுக்குமான உறவு, எழுத்தாளர்-வாசகன் என்பதோடு முடிந்து விடுகிறது.  அவர் எழுத்துக்களோடு மட்டுமே எனக்கு பரிச்சியம் உண்டு. அவர் எழுதியதில் ஒரு 90% வாசித்திருப்பேன்.  என்னவோ, அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை (சிறுகதை, நாவல், நாடகம், சயின்ஸ் பிக்ஷன், அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்தவை, கட்டுரைகள்) வேறு யாரும் ஏற்படுத்தவில்லை, அவர் 'இலக்கியம்' என்று பெரிய அளவில் எதுவும் படைத்திராவிட்டாலும்!  அவர் படைப்புகளில் பலவற்றை
இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

ஒரே ஒரு முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், 24 வருடங்களுக்கு முன்.  நான் கோயமுத்தூர் GCTயில் பொறியியல் மாணவனாக இருந்த காலகட்டத்தில், எங்கள் மின்னணுவியல் அசோசியேஷன் அழைப்பின் பேரில் வந்திருந்தார்.  அன்றைய கல்லூரி தின விழாவில் extempore-ஆக ஒரு 30 நிமிடங்கள், ஆங்கிலக் கலப்பின்றி அவர் தமிழில் உரையாற்றியதை மறக்கவே முடியாது !!!  அது போலவே, ஒரே ஒரு முறை (2 மாதங்களுக்கு முன்) அவருடன் அம்பலம் சாட்டில் உரையாடியிருக்கிறேன் ! சாட்டுக்குள் சற்று தாமதமாக நுழைந்தும்,  தேசிகனின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டதால், சாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒரு பத்து மணித்துளிகள் நீட்டிக்க முடிந்தது.  நரேந்திர மோடி, கிரிக்கெட், வலைப்பதிவுகள் என்று சில விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு, அவரது பாணியில் பதில் கூறினார்.

அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகமில்லை.  அக்கதைகளில் காணப்படும் அவரது தேர்ந்த (அவருக்கு மட்டுமே வசப்படும்) நடையும், மெலிதாக இழையோடும் நகைச்சுவையும், சில இடங்களில் உருக்கும் சோகமும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டி நம்மை அசை போட வைக்கும் உத்தியும், அவரது எழுத்து ஆளுமையை பறைசாற்றுபவை!  அவரது தூண்டில்
கதைகளில் காணப்படும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் A twist in the tale வகை துள்ளல் நடையும், இறுதியில் வரும் எதிர்பார்க்க முடியாத சடார் முடிவும் வாசிப்பவரை கட்டிப் போட்டு விடும்.  கணேஷ் வசந்த் பங்கு பெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில், துப்பு துலக்க அவர்கள் இருவரும் உரையாடும் கட்டங்களையும், மேற்கொள்ளும் சாகசங்களையும் சுஜாதாவின் நுண்ணிய அறிவியல் சார் சிந்தனை ஓட்டத்தின்
வெளிப்பாடாக நோக்கலாம்.  'நிர்வாண நகரம்' நாவலில் வரும் (புத்தி கூர்மை மிக்க) நாயகனாகவே நான் சுஜாதாவைப் பார்க்கிறேன் ! 

அவருக்கு இரங்கல்/அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தமிழ் வலைப்பதிவுலகில் வெளி வந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இடுகைகள் சுஜாதா ஏற்படுத்திய வாசக தாக்கத்துக்கு சான்று!  அவற்றில் குறிப்பிடத்தக்கவை கனடா வெங்கட், பிரகாஷ், அருள்செல்வன் கந்தசுவாமி, பெனாத்தல் சுரேஷ், காசி, டோ ண்டு, விக்கி (இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு சட்டென்று வர மறுக்கிறது!) எழுதியவை.  ஒரு விஷயம் உறுத்தலாக இருக்கிறது.  பொதுவாக, ஒருவர் இருக்கும்போதே அவரைப் பாராட்டி நாம் எழுதுவதே இல்லை என்று கூறலாம், விமர்சனம் என்ற பெயரில் குறைகளை மட்டுமே எழுதுகிறோமோ என்று தோன்றுகிறது :(

வாசகர்கள் வாழ
ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாழ
கணேஷ் வசந்த் மதுமிதா வாழ
ஆத்மா ஜினோ அனிதா வாழ
நீர் 'கற்றதும் பெற்றதும்' வாழ

நீர் ஏனய்யா நூறாண்டு வாழாமல் சென்று விட்டீர் ?

சுஜாதா சார், "பிரிவோம் சந்திப்போம்" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.

A COLOSSUS by the name of SUJATHA!

மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!
)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//


யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//


அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.


419. சாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு

கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஜாதா அவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 72. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டதில் எனக்கு பெரிய வருத்தம். இத்தனைக்கும் தேசிகன் எனது நெருங்கிய நண்பர். ஏதாவது ஒரு காரணத்தால் அவரை சந்திப்பது தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அவரே போய் விட்டார் :(

தேசிகனிடம் பேசினேன். மிக்க சோகத்தில் இருக்கிறார் என்பது குரலிலேயே தெரிந்தது. கடந்த 2 நாட்களாக நினைவு இன்றி தான் சுஜாதா இருந்ததாக அவர் கூறினார். சுஜாதாவுக்கு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று அனைத்திலும் பிரச்சினைகள் !

அவரது 70-வது பிறந்தநாளின் போது "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வைணவ பாரம்பரியத்தின்படி வாழ்த்தி நான் எழுதிய பதிவு இங்கே

என்றென்றும் அன்புடன்
பாலா

421. சுஜாதா அஞ்சலிப் பதிவுகள் - பட்டியல்


எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதப்பட்ட பலப்பல பதிவுகளை / கட்டுரைகளை, வாசிப்பதற்கு வசதியாக அவ்விடுகைகளின் சுட்டிகளை இங்கே (நான்அறிந்தவரை) தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவை குறித்து பின்னூட்டத்தில்தெரிவித்தால், அவற்றையும் இப்பதிவில் சேர்த்து விடுகிறேன். நன்றி.

எ.அ.பாலா


http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html
(மனதை நெகிழ வைத்த (என்னைப் போன்ற) ஒரு சாதாரண வாசகனின் அஞ்சலி!)

http://balaji_ammu.blogspot.com/2005/05/colossus-by-name-of-sujatha.html
http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/422-1.html
http://desikan.com/blogcms/?item=208
http://desikan.com/blogcms/?item=207
http://desikan.com/blogcms/?item=206
http://desikan.com/blogcms/?item=205

http://balakumaranpesukirar.blogspot.com/2008/03/blog-post.html
http://naalavathukann.blogspot.com/2008/03/blog-post.html
http://tamiloviam.com/unicode/02280803.asp
http://karaiyoram.blogspot.com/2008/03/blog-post.html

http://penathal.blogspot.com/2008/02/blog-post.html
http://pitchaipathiram.blogspot.com/2008/02/blog-post_27.html
http://domesticatedonion.net/tamil/?p=741
http://cyrilalex.com/?p=387
http://imohandoss.blogspot.com/2008/02/blog-post_28.html

http://masivakumar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://xavi.wordpress.com/2008/02/28/sujatha/
http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_28.html

http://icarusprakash.wordpress.com/2008/02/27/thank-you-sir-for-everything/
http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_29.html
http://dondu.blogspot.com/2008/02/have-nice-time-sujatha-sir.html
http://valai.blogspirit.com/archive/2008/02/27/sujatha.html
http://andaiayal.blogspot.com/2008/02/blog-post.html

http://balaji_ammu.blogspot.com/2008/02/420.html
http://anamikatalks.blogspot.com/2008/02/author-sujatha-is-no-more.html
http://mogadalai.wordpress.com/2008/02/27/sujatha-rip/
http://www.chakkarapani.com/graffiti/?p=316
http://balajiulagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://chennai.metblogs.com/archives/2008/02/writer_sujatha_is_dead.phtml

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/38810
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/12866

http://naachiyaar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://alexpandian.blogspot.com/2008/02/blog-post.html
http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_28.html
http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://nganesan.blogspot.com/2008/02/amarar-sujatha.html

http://santhipu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://vasanthamravi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://surveysan.blogspot.com/2008/02/blog-post_1876.html
http://devakottai.blogspot.com/2008/02/blog-post_5951.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_7099.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_27.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_1280.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_29.html
http://puthupunal.blogspot.com/2008/02/blog-post.html
http://cdjm.blogspot.com/2008/02/blog-post.html

http://vadakarai.blogspot.com/2008/02/blog-post.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/blog-post_28.html
http://usthamizhan.blogspot.com/2008/02/blog-post.html
http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_28.html

http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_9834.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_27.html
http://feeds.vicky.in/~r/dhandora/~3/242335441/
http://osaichella.blogspot.com/2008/02/blog-post_100.html

http://ravisrinivas.blogspot.com/2008/02/blog-post_29.html
http://thoughtsintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://mrishan.blogspot.com/2008/02/27022008.html
http://pettagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html
http://ponvandu.blogspot.com/2008/03/blog-post.html

http://ilackia.blogspot.com/2008/03/blog-post.html
http://bashakavithaigal.wordpress.com/2008/02/28/ச�வாரஸ�யம�-போய�விட�டதா-ச/
http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_28.html
http://oagaisblog.blogspot.com/
http://tvrk.blogspot.com/

http://pradeep.blogspot.com/2008/03/blog-post.html
http://losangelesram.blogspot.com/2008/02/1.html
http://sangappalagai.blogspot.com/2008/03/44.htm
http://palipedam.blogspot.com/2008/02/blog-post_28.html http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_28.html

http://umakathir.blogspot.com/2008/02/blog-post_27.html
http://nattunadappu.blogspot.com/2008_02_01_archive.html
http://therinjukko.blogspot.com/2008/02/blog-post_27.html
http://harimakesh.blogspot.com/2008/02/189.html
http://koculan.blogspot.com/2008/02/blog-post_28.html

http://sandanamullai.blogspot.com/2008/02/blog-post.html
http://poothoorigai.blogspot.com/2008/02/blog-post_27.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html
http://dondu.blogspot.com/2008/03/blog-post_03.html

http://www.tamilstar.com/news/publish/article_5663.shtml

http://mrishan.blogspot.com/2008/02/27022008.html
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html
http://ponvandu.blogspot.com/2008/03/blog-post.html
http://nattunadappu.blogspot.com/2008_02_01_archive.html
சுஜாதா - விமர்சனமும்,அற்பர்களும
சுஜாதா: அப்படியென்ன அவசரம் அரங்கா? :(
என்னவரே, போய் வாரும்.

நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க! அப்புறமா மீட் பண்ணிக்கலாம்!

சுஜாதாவின் மரணம்

சுஜாதா எனும் வரலாற்று மைல்கல்!

பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா - என் பார்வையில்!

சுஜாதாஞ்சலி


    Post a comment

    Your Name or E-mail ID (mandatory)




     RSS of this page